காமம் காமம்
என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே
-
மிளைப்பெருங்
கந்தனார், குறுந்தொகை 204
பற்கள்
தேய்ந்துபோன கிழப்பசு புற்களை தின்பது சற்று கடினம். அதிலும் இளம்புல் என்பது சுவையானது,
மணமானது. துளிர்விட்டிருக்கும் அதன் சிறு இலையை பற்க்காளால் கடிப்பது இயலாத காரியம்.
அதன் சிறு துளி மட்டும் அதன் வாயிற்கு சிக்கும். சுவையின் காரணமாக மறுபடியும் கடிக்கும்.
ஆனால் முழுதாக தின்ன முடியாது. விடமுடியாமலும், தின்ன முடியாமலும் தவிக்கும். அது ஒரு
தீராத விருந்து.
காமம்
காமம் என்று எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள். சில வேளைகளில் அதனை நோய் என்றும் மோகினி
என்றும் சொல்லிவிடுறார்கள். உண்மையில் அது தீராத விருந்து. மனிதனுக்கு விதிக்கப்பட்டிருக்கும்
எல்லைகளினால் முழுதாக அதனை அடையமுடியாது, ஆனால் அதன் சுவை காரணமாக விடமுடியாமல் தொடர்ந்து
உண்ணும் விருந்து. தின்னத் தின்ன தீர்ந்து போகாது. எத்தனை யுகங்கள் கண்ட பழமையான ஒன்று,
இன்னும் மனிதனால் அதன் மர்ம முடிச்சை அவிழ்க்க முடியாமல், தொடர்ந்து அவிழ்க்க முயலுகிறான்
போலும். தலைமுறை தோறும் முயன்றுவருகிறார்கள். அது இயற்கையின் முடிச்சு, அவிழ்த்துவிட்டால்
உலகின் அனைத்து மர்மங்களும் தெரிந்துவிடும். ஆனால் முடியுமென்று தெரியவில்லை. ஏனென்றால்
அது தீராத விருந்து.
Comments
Post a Comment