தூங்காத விழிகள்

நள்ளென்ற றன்றே,யாமம்; சொல்அவிந்து

இனிதுஅடங் கினரே, மாக்கள்; முனிவுஇன்று;

நனந்தலை உலகமும் துஞ்சும்;

ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.


-      பதுமனார், குறுந்தொகை 06

காதல் நெல்லிக்காயைப் போல தின்னும் போது துவர்க்கும் பின்பு இனிக்கும். தண்ணீர் குடித்தால் அதன் சுவை மேலும் அதிகரிக்கும். தின்னவும் முடியாமல், துப்பவும் முடியாத நிலை. காதல் கொண்ட நினைவுகள் எழும்போது சிறு துண்டு இனிப்பை விழுங்கியது மாதிரி தொண்டைக்குழிக்குள் இனிக்கும். சிறு நொடி இன்பம். சாரல்மலை பொழியும் போது சட்டெனச் சூரியன் வந்து சுட்டெரிக்கும். அந்த நினைவுகள் மறைந்த பிறகு துன்பம் துன்பம். இன்பத்திற்கு நிகர் துன்பம். இன்பமும் துன்பமும் மாறி மாறி, மாரி காலம், வெனிர் காலமாய் வருகிறது. ஒரே நேரத்தில் துன்பப்படலாம் அல்லது இன்பமுறலாம். ஒரு நொடி குளிர் மறுநொடி வெயில். எப்படித் தாங்கிக்கொள்வது. 


“கங்குள் வெள்ளம்” என மறுபாடலில் இருட்டை வெள்ளமென்கிறார்கள். இருள் ஆழமானது, மர்மமானது. நேரடியாக அடிமனதை திறந்துகாட்டிவிடும். எளிதாய் நெல்லிக்காய் கிட்டிவிடும். பிறகு தீராத அந்த இருளென்னும் நதி வெள்ளத்தில் நீந்த முடியாமல் மூச்சு திணறி விழி பிதுங்கும் வேளையில், யாமம் நள்ளென்ற சத்தமிடுகிறது. அது என்னைப் போன்ற அபலைகளின் கையறுநிலையிலான மனக்குமுறல்காளா? இருக்கும். என்னைச் சேர்ந்தவர்களின் பேச்சொலி அடங்கிவிட்டது. நிச்சயம் அவர்கள் மகிழ்ச்சியாய் தூங்குகிறார்கள். இந்த அகன்ற உலகமும் தூங்குகிறது. இதுவல்லவோ நான் அவரைச் சந்திக்க செல்லும் நேரம். ஆனால் அவர் அவர் வரவில்லை. அவருடன் காதல் கொண்ட நினைவிகள் மட்டும் எழுகிறது. அதனால் நான் மட்டும் தூங்காமல் விழித்திருக்கிறேன். தூங்கிவிடமுடியுமென நினைவிறீர்கள்?


Comments

Popular posts from this blog

குற்றமும், தண்டனையும்

கொடுக்கப்படவில்லை பறித்துக்கொள்ளப்பட்டது

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)