நட்டைத் திருகி இந்த மனித வாழ்க்கைக்குள் மாட்டிக்கொள்கிறது குரங்கு. அப்படி அதை இவ்வாழ்க்கைக்குள் கொண்டுவருவது சரியா தவறா என்பதுதான் இக்கதையின் மைய்யக் கேள்வி. கதையின் நாயகனுக்கு அது சரியெனத் தோன்றுகிறது ஆனால் மற்றவர்களுக்கு அப்படித் தோன்றவில்லை.
கதையில் ஒரு வித தத்துவத்தை பாமரத்தனமாக பேசும் ஒரு கதைமாந்தர் வந்து, நேரடியாக கதையில் மாந்தரிடம் விவாதிக்கிறது. அவனிடம் அதற்க்கு பதிலில்லாத போது திட்ட ஆரம்பிக்கிறான்.
கதை பகடியாகச் சென்றாலும், புராணங்கள் பற்றிய குறிப்புகளுடன் சென்று கொண்டிருக்கிறது. காடுகளை நோக்கி தவம் செய்ய முனிவர்கள் செல்கிறார்கள். பற்றுக்கொண்டதையெல்லாம் தவிர்ப்பதற்க்காக. ஆனால் பற்றுக்கொண்ட குரங்கு காட்டிலிருந்து நாட்டுக்கு வருகிறது. அப்படி வந்த முதல் குரங்கு தான் மனிதன். அறிதலில் இருக்கும் மகிழ்ச்சியை அறிந்துகொண்டது அது. அதற்க்கான சாவியை கொடுத்தபிறகு, தானாக அது பல இடங்களை திறந்துகொண்டு போகிறது.
எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முயலும் போதுதான் நமக்கு வருகிறது ஞானதுக்கம். அதிலிருந்து வெளிவர மனிதன் பலகாலமு முயன்று வழியைக் கண்டு கொண்டிருக்கிறான். ஆனால் குரங்குக்கு அது சாத்தியமில்லை. வெளிவர முடியாத/தெரியாத இடத்தில் மாட்டிக்கொண்டது குரங்கு மட்டுமில்லை, நாமும்தான் எனும் போது இந்த கதையின் விரிவு அதிகமாகிறது. ஒவ்வொரு குரங்கும், பூமியில் புதிதாகப் பிறந்த குழந்தைகள்.
ஒரு அறைக்குள் செல்லும் போது பூட்டை திறந்துவிட்டு சாவியை எங்காவது வைத்துவிடுவோம். எல்லா வேலையும் முடிந்து திருப்பவும் பூட்ட முயன்றால், சாவி கிடைக்காது. திறந்துவிட்டும் போக முடியாது, அதற்க்காக அங்கும் இருக்க முடியாது. சாவியைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டியதுதாம்.
Comments
Post a Comment