இந்த பூதத்தைப் பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்காது. தெரியாது என்று சொன்னால் நிச்சயம் நீங்கள் இன்னும் குழந்தைதான். விக்கிரமாதித்தியன் கதையில் வரும் வேதாளம் போலதான் இதும். விடுகதை போல கேள்வி கேட்க்கும், பதிலைச் சொன்னால் மற்றொரு கேள்வி. பதில் தீர்ந்து, தாகம் எடுப்பவன் தண்ணீருக்கு அலைவதைப் போன்ற நிலைமையை அடைந்த பின்னால் என்னைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கும். அப்பப்பா!! அந்த நேரம் எனக்கு வரும் கோவம் இருக்கிறதே!! உங்களுக்கு தெரியாததா அது. நான் யார் என முதலில் பாசமான நாய் போல வந்து நக்கி மேலே விழுந்து நய்ச்சியமாகக் கேட்க்கும்.
சின்ன வயது என்னை பழைய போட்டோக்களில் பார்க்கிறேன். இப்போது இருக்கும் உடலை கண்ணாடியில் பார்க்கிறேன். சர்வ நிச்சயமாக அதும் இதும் ஒன்றல்ல. சில சமயம் அடையாளம் காண்பது அவ்வளவு எளிதல்ல. அப்படியானால் நான்தான் அது (சின்ன வயது போட்டோவில் இருப்பது) என்று எப்படிச் சொல்ல முடியும்? இன்னும் வயதானால் நிச்சயம் மாறிப் போவேன். அப்போது இந்த குழந்தை போடோவுடன் ஒப்பிட்டால், யாரும் நம்ப மாண்டார்கள். என்னை சிறுவயது முதல் வயதானது வரை நான் என எண்ண வைப்பது எது? உடலை நான் எனச் சொன்னால் சிரிப்புதான் வரும் இல்லையா? ஏனேனில் அது மாறும் ஒன்று. மாறாத ஒன்றையே நாம் எப்போதும் இது என அடையாளப் படுத்த முடியும்.
தண்ணீர் கட்டியானால் அது ஐஸ்க்கட்டி. யாரும் அதை தண்ணீர் என்று அழைப்பதில்லை. ஆனாலும் அதில் தண்ணீர் இருப்பதை யாரும் மறுக்க மாண்டாய் என நினைக்கிறேன். சில சமயம் அது ஆவிகூட ஆகலாம். அப்போதும் அதில் தண்ணீர் இருப்பதை மறுக்கமுடியாது. வேறு பெயர்கள் ஆனால் உண்மை ஒன்றுதான். அப்படியானால் அதே விசயம் நமக்கும் பொருந்தும்தானே? பூதம் இப்போது வேற்று வீட்டு நாய் போல வளர்த்த நம்மையே பார்த்து குரைக்கும்.
நான் என்பது உடல் என்ற வாதம் சரி எனப்படுகிறது. அப்படா என நான் திருப்திபட்டுக் கொள்ளும் போது, மறு கேள்வியால் அது என்னை மாடியிலிருந்து கீழே தள்ளிவிடுவது போல இருந்தது. உடல் என்பது வெறும் ஊர்திதான். இறந்த பின்னால் உடல் இருக்கும் ஆனால் நீ இருக்க மாண்டாய்தானே ? ஏன் என்றால் அதை நான் என்று சொல்ல நீயே இருக்க மாண்டேன். அப்படியானால் நான் யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை இல்லை என்றது.
உயிர் தான் நான்!! ஹாஹா.....மகிழ்ச்சி..ஏ!! பூதமே கண்டுபிடித்துவிட்டேன் என்னை விட்டு ஓடிவிடு, இனிமேலாவது என்னை நிம்மதியாக வாழவிடு. நான் செத்த பின்னால், என் உடலை யாரும் நான் என அழைப்பதில்லை அதனால் நான் என்பது உயிர் தான். எனக்கு அதில் துளிகூட சந்தேகம் இல்லை. மரங்கள் துளிர்விடுவதைப் போல பூதம் கேள்விகளை வீசிக்கொண்டே இருக்கிறது. வெட்ட வெட்ட தலை வரும் அரக்கன் போல அது.
தூங்கும்போது நீ எங்கு இருக்கிறாய்? நீ கிட்டத்தட்ட செத்துப்போனவன் தானே? அப்படியானால் உனக்கு அப்போது உயிர் இல்லை. ஹாஹா!!! பதிலுக்கு அந்த பூதம் என்னைப் பார்த்து நகைத்தது. கோபம் வரும் இல்லையா? நீங்களே சொல்லுங்கள்? எத்தனை அணைக் கட்டினாலும் உடைத்துக்கொண்டு வருகிறது இது.
அப்படியானால் நான் என்பது இந்த உள் உணர்வுதான். என் ஐந்து புலன்களும் இல்லை என்றாலும் என்னால் என்னை உணரமுடியும். கனவுகள். அதில் வேறோரு உலகத்தில் நான் இளவரசிகளுடன் காதல் செய்ய முடியும், எதிரிகளுடன் போர் செய்து சாக முடியும்...உண்மை என்னவென்றால் என்னால் உயிர்தேல முடியும்? இப்போது என்னவோ நான் சரியான பதிலைச் சொல்லிவிட்டேன் எனத் தோன்றுகிறது. பூதத்தை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது. அது என்னை ஒரு நாளும் நிம்மதியாகவிட்டதில்லை. அப்படி நகைக்காதே!!
கோமாவில் இருப்பவனுக்கு உடலுமில்லை, உயிருமில்லை, உள் உணர்வும் இல்லை. அப்படியானால் அவன் யார்? பூதம் தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ள மறுபடியும் கேட்டுவிட்டது. கண்டிப்பாக இந்த முறை அது என் தர்க்கத்தை தாண்டிப் போய்விட்டது. நான் என்பது அந்த மூன்றும் இல்லைதான் ஆனால் நான் இருக்கிறேன். ஆனால் அதை எப்படிச் சொல்ல முடியும்? அந்த மூன்றும் இல்லாத போது எது தன்னை அது எனச் சொல்லிக்கொள்ள முடியும்? தன்னைச் சுட்ட அதனால் முடியாது ஆனால் அது இருக்கிறது. தர்க்கம் நின்று போனது, இதற்க்கு மேல் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஆ!! இந்த முறையும் அந்த பூதம்தான் வென்றுவிட்டது. விடமாண்டேன்!!!!!!
Comments
Post a Comment