Skip to main content

விடாத பூதம்

இந்த பூதத்தைப் பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்காது. தெரியாது என்று சொன்னால் நிச்சயம் நீங்கள் இன்னும் குழந்தைதான். விக்கிரமாதித்தியன் கதையில் வரும் வேதாளம் போலதான் இதும். விடுகதை போல கேள்வி கேட்க்கும், பதிலைச் சொன்னால் மற்றொரு கேள்வி. பதில் தீர்ந்து, தாகம் எடுப்பவன் தண்ணீருக்கு அலைவதைப் போன்ற நிலைமையை அடைந்த பின்னால் என்னைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கும். அப்பப்பா!! அந்த நேரம் எனக்கு வரும் கோவம் இருக்கிறதே!! உங்களுக்கு தெரியாததா அது. நான் யார் என முதலில் பாசமான நாய் போல வந்து நக்கி மேலே விழுந்து நய்ச்சியமாகக் கேட்க்கும்.

சின்ன வயது என்னை பழைய போட்டோக்களில் பார்க்கிறேன். இப்போது இருக்கும் உடலை கண்ணாடியில் பார்க்கிறேன். சர்வ நிச்சயமாக அதும் இதும் ஒன்றல்ல. சில சமயம் அடையாளம் காண்பது அவ்வளவு எளிதல்ல. அப்படியானால் நான்தான் அது (சின்ன வயது போட்டோவில் இருப்பது) என்று எப்படிச் சொல்ல முடியும்?  இன்னும் வயதானால் நிச்சயம் மாறிப் போவேன். அப்போது இந்த குழந்தை போடோவுடன் ஒப்பிட்டால், யாரும் நம்ப மாண்டார்கள். என்னை சிறுவயது முதல் வயதானது வரை நான் என எண்ண வைப்பது எது? உடலை நான் எனச் சொன்னால் சிரிப்புதான் வரும் இல்லையா? ஏனேனில் அது மாறும் ஒன்று. மாறாத ஒன்றையே நாம் எப்போதும் இது என அடையாளப் படுத்த முடியும். 

தண்ணீர் கட்டியானால் அது ஐஸ்க்கட்டி. யாரும் அதை தண்ணீர் என்று அழைப்பதில்லை. ஆனாலும் அதில் தண்ணீர் இருப்பதை யாரும் மறுக்க மாண்டாய் என நினைக்கிறேன். சில சமயம் அது ஆவிகூட ஆகலாம். அப்போதும் அதில் தண்ணீர் இருப்பதை மறுக்கமுடியாது. வேறு பெயர்கள் ஆனால் உண்மை ஒன்றுதான். அப்படியானால் அதே விசயம் நமக்கும் பொருந்தும்தானே? பூதம் இப்போது வேற்று வீட்டு நாய் போல வளர்த்த நம்மையே பார்த்து குரைக்கும்.

நான் என்பது உடல் என்ற வாதம் சரி எனப்படுகிறது. அப்படா என நான் திருப்திபட்டுக் கொள்ளும் போது, மறு கேள்வியால் அது என்னை மாடியிலிருந்து கீழே தள்ளிவிடுவது போல இருந்தது. உடல் என்பது வெறும் ஊர்திதான்.  இறந்த பின்னால் உடல் இருக்கும் ஆனால்  நீ இருக்க மாண்டாய்தானே ? ஏன் என்றால் அதை நான் என்று சொல்ல நீயே இருக்க மாண்டேன். அப்படியானால்  நான் யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை இல்லை என்றது.

உயிர் தான் நான்!! ஹாஹா.....மகிழ்ச்சி..ஏ!! பூதமே கண்டுபிடித்துவிட்டேன் என்னை விட்டு ஓடிவிடு, இனிமேலாவது என்னை நிம்மதியாக வாழவிடு. நான் செத்த பின்னால், என் உடலை யாரும் நான் என அழைப்பதில்லை அதனால் நான் என்பது உயிர் தான். எனக்கு அதில் துளிகூட சந்தேகம் இல்லை. மரங்கள் துளிர்விடுவதைப் போல பூதம் கேள்விகளை வீசிக்கொண்டே இருக்கிறது. வெட்ட வெட்ட தலை வரும் அரக்கன் போல அது. 

தூங்கும்போது நீ எங்கு இருக்கிறாய்?  நீ கிட்டத்தட்ட செத்துப்போனவன் தானே? அப்படியானால் உனக்கு அப்போது உயிர் இல்லை. ஹாஹா!!! பதிலுக்கு அந்த பூதம் என்னைப் பார்த்து நகைத்தது. கோபம் வரும் இல்லையா? நீங்களே சொல்லுங்கள்? எத்தனை அணைக் கட்டினாலும் உடைத்துக்கொண்டு வருகிறது இது. 

அப்படியானால் நான் என்பது இந்த உள் உணர்வுதான். என் ஐந்து புலன்களும் இல்லை என்றாலும் என்னால் என்னை உணரமுடியும். கனவுகள். அதில் வேறோரு உலகத்தில் நான் இளவரசிகளுடன் காதல் செய்ய முடியும், எதிரிகளுடன் போர் செய்து சாக முடியும்...உண்மை என்னவென்றால் என்னால் உயிர்தேல முடியும்?  இப்போது என்னவோ நான் சரியான பதிலைச் சொல்லிவிட்டேன் எனத் தோன்றுகிறது. பூதத்தை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது. அது என்னை ஒரு நாளும் நிம்மதியாகவிட்டதில்லை. அப்படி நகைக்காதே!!

கோமாவில் இருப்பவனுக்கு உடலுமில்லை, உயிருமில்லை, உள் உணர்வும் இல்லை. அப்படியானால் அவன் யார்? பூதம் தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ள மறுபடியும் கேட்டுவிட்டது. கண்டிப்பாக இந்த முறை அது என் தர்க்கத்தை தாண்டிப் போய்விட்டது. நான் என்பது அந்த மூன்றும் இல்லைதான் ஆனால் நான் இருக்கிறேன். ஆனால் அதை எப்படிச் சொல்ல முடியும்? அந்த மூன்றும் இல்லாத போது எது தன்னை அது எனச் சொல்லிக்கொள்ள முடியும்? தன்னைச் சுட்ட அதனால் முடியாது ஆனால் அது இருக்கிறது. தர்க்கம் நின்று போனது, இதற்க்கு மேல் என்னால் பதில் சொல்ல முடியவில்லை.  ஆ!! இந்த முறையும் அந்த பூதம்தான் வென்றுவிட்டது. விடமாண்டேன்!!!!!! 



Comments

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

மியாவ் மியாவ்

கருப்பணசாமி, சிலை செஞ்சு வச்சுப்போடறன். இந்த சீவன காப்பாத்து என கண்களை மூடி மேற்க்கே பார்த்து வேண்டிக் கொண்டாள் எங்கள் ஆத்தா. பக்கத்தில் பூனை பக்…பக்….கென்று கக்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்தை யாரோ அழுத்திக் கொண்டது போல அது கக்கியது. அப்போதுதான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்தேன். பூனை கத்தற சத்தமும், ஆத்தா சாமி கும்பிடற சத்தத்தையும் கேட்டு பொடக்காளிக்கு வந்தேன். கண்களை திறந்த ஆத்தா கையிலிருந்த திருநீரை வீசி பூனையின் மேல் எறிந்தாள், பிறகு அதன் நெற்றியில் பூசிவிடப் போனதும் அது பயந்து ஓடிப்போனது. சும்மா இல்லாத, இந்த கெரகம்…….என்று அதை திட்டிக்கொண்டு என்னை பார்த்தவாறு ஆசாரத்திற்க்கு நகர்ந்தாள். எனக்கும் ஆத்தாவிற்க்கும் முந்தானேத்து பயங்கர சண்டை அதனால் பேச மாண்டாள். நான் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்துவிட்டு ஏதோ பூனைக்கு உடம்பு சரியில்லைனு நினைத்துக்கொண்டேன். இரா தூங்கும்போது மூங்கில் விட்டத்துக்கும், முகட்டு ஓடுக்கும் நடுவுல இருக்கிற இடைவெளியில மெதுவாக தன்னோட கால எடுத்து வச்சு நகரும். ஆத்தா அங்க பாரு பூனை கத்துது. டேய்… சும்மா கிடக்கமாண்ட. அது கத்துனா கத்துது உனக்கென்ன? எ