கோவில்கள் பற்றிய மிக முக்கியமான புத்தகமாக குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய "தமிழ் கோபுரக்கலை மரபு" என்னும் புத்தகத்தைச் சொல்லலாம்.
இந்த புத்தகம் ஒரு ஆரம்ப வாசகனுக்கு தமிழக கோவில்கள் மற்றும் சிற்ப்பங்கள் பற்றிய அரிய வாசலைத் திறக்கும் என நம்புகிறேன். இவர் ஆய்வுக்காக இலக்கியம், கல்வெட்டுக்கள், புதை பொருட்க்கள் (உதாரணமான நாணங்கள்) மற்றும் கோவில் சிற்ப்பங்களையும் பயன்படுத்தியிருக்கிறார்.
சொல் ஆய்விலிருந்து கோபுரங்களைப் பற்றிய ஆய்வு துவங்குகிறது. மாட்டுக் கொட்டில் எப்படி கோபுரம் ஆனது என்பதையும் அது எப்படி தமிழகம் வந்தடைந்தது என்பதும் மிக சுவாரசியமான பதிவு. சுடர் விட்டு எரியும் தீப்பிழம்பு எப்படி கோபுரத் தத்துவமானது என்பதும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம்.
கோபுர கட்டுமானம் பற்றிய தகவல்கள் ஆச்சரியமாக இருக்கிறது. அதோடு இல்லாமல் தமிழகத்தின் முக்கிய கோவில்களின் பழமை பற்றிய ஆராய்ச்சி ஆச்சரியமடைய வைக்கிறது. தஞ்சை பெரிய கோவில், திருவண்ணாமலை என பட்டியல் நீள்கிறது. திருவானைக்கா கோபுரம் அடித்தள கட்டுமானத்துடன் நின்று போனதால், கோவில் கட்டுமானம் எப்படி ஆரம்பிக்கும் என்பதை அறிந்த்து கொள்ள அது முக்கிய ஆவணமாக இருக்கிறது. பொதுவாக எல்லா கோவில்களின் அடித்தளம் மட்டும் கற்க்களால் கட்டப்பட்டு, அதற்க்கு மேல் செங்கற்க்களால் கோவில் உருவாக்கப்படும். அதற்க்கு சில விதிவிலக்குகள் உண்டு. உதாரணமான தஞ்சைப் பெரிய கோவில். அது முழுவதும் கருங்கற்க்களாலே உருவாக்கப்பட்டது. அதுவேகூட அதன் தனிச் சிறப்பு எனலாம்.
கோவிலின் ஓவியங்கள் மற்றும் அரண்மனைகளின் ஆய்வும் முக முக்கியமாகப்படுகிறது. இடம் பெயர்ந்து எழுந்த கோபுரங்கள் பற்றிய ஆய்வும் இருக்கிறது. கடைசியாக சிற்ப்பங்களைப் பற்றி புரிந்துகொள்ள ஏதுவாக அதன் விளக்கங்கள் அமைந்துள்ளன.
நிச்சயம் இந்த புத்தகத்தப் பற்றியும் அதன் உள்ளடக்கத்தைப் பற்றியும் விரிவாக பின்னாலில் எழுதும் வாய்ப்பு அமையுமென நினைக்கிறேன்.
குடவாயில் பாலசுப்பிரமணி அவர்களின் முகநூல்
Comments
Post a Comment