முதற்கனல் நாவலை படித்ததும் எழுதும் கடிதமிது.
நாவலின் அமைப்பு இதற்க்கு முன் பழக்கம் (எனக்கு) இல்லாத ஒன்றாக இருந்தது. கதைக்குள் கதை. மேலும் வரலாறு ஒருவகை தொன்மாக முன் வைக்கப்படுகிறது. அதன் மாயங்களை எல்லாம் நிகர் கால வராலாற்று கருவிகளால் விலக்கி தட்டையாக்காமல், இன்னும் மாயங்களாகவே முன் வைப்பது ஆனந்தமாக இருந்தது. மனிதன் தொடர்ந்து எல்லாவற்றையும் பகுத்து தன் அறிவுக்கு உட்ப்பட்டதாக மாற்றுகிறான்.அது நல்ல விசயம்தான், அதே சமயம் அவனது வாழ்க்கை இப்படித்தான் என முன்னரே வகுத்துவிட்டால் எப்படி இருக்கும்? நிச்சயம் சலித்துப் போவான். அப்படி வரலாற்றையும் பகுத்து, ஐயம் திரிபுர சொல்லிவிட்டால்? நிச்சயம் கொடுமை. கற்ப்பனைக்கு வழி இல்லாமல் மனிதன் தற்க்கொலை செய்யவும் நேரலாம். நல்ல வேளை அது நடக்கவில்லை என்பது மகிழ்ச்சி.
நான் மகாபாரதக்கதையை முழுவதும் அறிந்தவனில்லை. முதற்கனலில் கதை எனக்கு புதிது. அம்பையின் கண்ணீர் சிகண்டியின் வழி முதற்கனல் ஆனது. எனக்கு தெரிந்து ஆண்கள் நீர்நிலையின் மேல்தளத்தை போன்றவர்கள். மேலோட்டமாகப் பார்க்க அவர்கள் வீரர்களாகவும், புரட்சிக்காரர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை வழிநடத்தும் ஆழ் மனம் என்னவோ பெண் எனத் தோன்றுகிறது. அம்பை முதலானவர்களை பீஸ்மர் தானக அஸ்தினாபுரிக்கு தூக்கி வரவில்லை. தன் அன்னையின் அணையை ஏற்றுதான் அதனை நிறைவேற்றுகிறார். அதே போல சிகண்டிக்கும் பீஸ்மருக்கும் தனிப்பட்ட விரோதம் இல்லை. ஆனால் தன் அன்னையின் பொருட்டு பழிவாங்க நினைக்கிறான். முதற்கனலே இரு பெண்களின் ஆசைக்கு இடையில் மாட்டிக்கொண்ட ஆண்களின் கதைதான். கதையில் அனைத்து ஆண் மகனையும் ஏதோ ஒரு பெண் ஆட்டுவிக்கிறாள். ஃபால்குனர் சொல்கிறார், அரசுகள் செறிகளால் ஆளப்படுகிறது, உணர்ச்சிகளால் அல்ல என்கிறார். அந்த நெறியை தொடர்ந்து பாதுகாத்து வருபவர்கள் பெண்கள்தான். மாற்று மதமோ, சாதியிலோ கல்யாணம் செய்தவர்கள் அப்பாவைக்கூட சம்மதிக்கவைக்கலாம், ஆனால் அம்மாவை முடியாது. இங்கு பண்பாடு என்பதே பெண்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்றுதான். அவர்கள் நினைத்தால் எதையும் மீறலாம். உதாரணமான பீஷ்மரை, காசி நாட்டு இளவரசிகளை தூக்கிவரச் சொன்னது.
நான் பின்தொடரும் நிழலின் குரலில், ஆண்களின் புரட்ச்சிதான் ரத்தமாக ஓடுகிறது, இதுவே பெண்கள் பண்ணி இருந்தால் எப்படி இருக்கும்? என வினாவாக எழுப்பப்பட்டிருக்கும். உண்மையில் பார்த்தால் எல்லாம் பெண்கள் தான் போல. கல்லைத் தூக்கிப் போட்டால் எப்படி குளம் கலங்குமோ, அது போலதான் ஆண்களும்.
இந்த நாவலுக்கும் மற்ற நாவலுக்கும் இருக்கும் வித்தியாசமாக நான் நினைப்பது. முழு விழிப்பு நிலையிலும் இல்லாமல், கனவிலும் இல்லாமல், இந்த நாவல் தொடர்ந்து மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி ஓடுவதை சில சமய்ங்களில் நினைத்து சிரித்துக்கொள்வேன். முக்கியமாக பீஷ்மர் கையில் முள்ளுடன் பாலைவனத்தில் நின்றது பல நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது.
மேலும் இந்த நாவலைப் பற்றி வரும் நாட்களில் எழுதலாம் என நினைக்கிறேன்.
எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று. அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்? சில சமயம் அவளது நான்
Comments
Post a Comment