நான் யார்? -பகுதி - 9

இருட்டு வெளிச்சத்துடன் சண்டையிட்டது. வெளிச்சமென்பது தற்காலிகமானது. விடியும் வரை இருள் ஆள்கிறது, விடிந்தபின் வெளிச்சம் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது என்றபோதும் இருள் மனித மனங்களில் சென்று ஒழிந்து கொள்கிறது. மிகுந்த போரட்டத்திற்க்கு பிறகுதான் தெளிவடைய ஆரம்பித்தது. யாரோ உதைத்த பந்து அந்தரத்திலேயே நின்றது. வெள்ளை நிற வேட்டி, சட்டை, துண்டுகளை காய வைத்திருந்தனர். இமைகள் மெதுவாக திறந்து கொள்வதை உணர்ந்தேன். பேரிரைச்சல் ஒன்று என்னுள் நிலவிய அமைதிக்கு குந்தகம் விளைவித்தது. கஸ்டப்பட்டு கண்களை அகல விரித்தேன். சரக்குகளை ஏற்றிக்கொண்ட லாரியோன்று கடந்து சென்றது. திசைகளற்ற, காலமில்லா இருளுக்குள் தத்தளித்து, திடுமென தூக்கி வெளிச்சத்தில் எறிந்தது போல் இருந்தது என் விழிப்பு. பிறகு சில நொடி களித்துதான் சுயநிலை தெரியத்துவங்கியது. மெல்ல கைகளை ஊன்றி எழுந்தேன். விடுபட்ட நினைவுகளை ஒட்ட வைக்க முயன்று முடியாமல், சுற்றும் முற்றும் விழித்தேன். சாலையோர திட்டில் படுக்க வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
யாருடா இவன் என்னோட இடத்தில் படுத்திருக்கிறான் என்பதைப் போல கண்களை இமைக்காமல் பார்த்தது, பக்கத்தில் படுத்திருந்த தெரு நாய் ஒன்று. இல்லை, இல்லை நீ என்னோட இடத்தில் படுக்கக் கூடாது என்பதைப் போல தலையை இட வலமாக ஆட்டியத் தொடங்கியது. நான் அதன் கண்களையே உற்று நோக்கியவாறு இருந்தேன்.
நா சொல்றத கேட்க்கமாண்ட? அதன் பற்க்களைக் காட்டி மிரட்டியது. பயத்தில் எழுந்து கொண்டேன். நாய் தன் இடத்தை தக்கவைத்தது.
வேறு வழியின்றி நடந்தேன். பாதசாரிகள் என்னை விட்டு விலகி விலகி சென்றனர். எங்கே போகிறோம், எங்கே இருக்கிறோம் புரியாத அவஸ்தையாய் இருந்தது. ஏன் எல்லோரும் விலகிச் செல்கிறார்கள்? மேலும் குழப்பம். அதுவரை என்னைச் சுற்றி என்ன இருக்கிறது, எப்படி இருக்கிறது என்றேல்லாம் பார்த்த நான் என்னை கவனிக்கத் தவறிவிட்டேன்.  முதலில் என் வலது கைச் சட்டையை பார்த்தேன். நீளமாய் கிழிக்கப்பட்டு அதனுடே என் உடல் தெரிந்த்து. அடடே! என்று என்னை முழுவதும் ஆராய்ந்தேன். என் உடலின் வெகு சில பகுதிகளை மட்டுமே அது மறைத்திருந்தது ஏனைய பகுதிகளேல்லாம் பார்வைக்காக திறந்துவிடப்பட்டிருந்தது. என்னைக் கடந்து சென்ற லாரி உபயமாக கொஞ்சம் மணலைக் கொட்டிவிட்டுப் போயிருந்தது. என் நிலையை சுறுக்கமாகச் சொன்னால் அலங்கோலம்.
புரியாத எழுத்துக்கள் கடை போர்ட்டில் நிறைந்திருந்தது. செய்வதறியாது போர்ட்டையே பார்த்து நின்றேன். கடை ஓனர் பணியாளிடம் என்னைக் கைகாட்டி ஏதோ சொன்னார். இதற்க்கு மேல் என்ன நடக்கும் என்பது தெரியும். மீண்டும் நடக்கத் தொடங்கினேன். யாரோ ஒருத்தர் தொடர்ந்து என்னைத் துரத்திக் கொண்டே இருந்தார்கள்.
தலை கின்னேன்று இருந்தது. லேசாக பூமி சுற்றியது. அந்திரத்தில் மிதப்பது பந்தில்லை என்றும், காயங்களுக்கு விசமிடம் சுட்டெரிக்கும் சூரியன் என்றும் தெரிந்தது. கொஞ்ச தூர நடையிலும், இடைவிடாத தேடுதலிலும் ஆங்கில எழுத்திலுல்ல கடை போர்டையும் கண்டுகொண்டேன். சிக்மங்களுர், கர்நாடகம் என்று போட்டிருந்தது.
எப்படி இங்கே வந்தேன்? நான் யார்? தொடர்ந்து என்னுள்ளே கேள்விகள் துளைத்தன. ஒருவேளை பைத்தியமாக இருந்து, தெளிந்துவிட்டேனா? இல்லை தெளிவாக இருந்து, பைத்தியமாகிவிட்டேனா? பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் யோசிப்பார்களோ? ஆம் நான் பைத்தியம் தான். அதனால்தான் எல்லோரும் என்னைக் கண்டு பயந்து விலகிப் போகிறார்கள். மனம் தள்ளாடியது.
போர்ட்டை பார்த்து நடந்ததால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மேல் முட்டிக்கொண்டேன். நல்ல வேளை யாரும் அந்தக் காரில் இல்லை. ஏற்க்கனவே காயம்பட்டிருந்த என் கால் முட்டி இப்போது இரத்தத்தை கொட்டியது. வழி தாலாமல், என் முழங்காலை பிடித்தேன். சிறிது நேரம் அதே நிலையில் நின்றிருந்தேன். அடிவயிற்றில் இலேசாக மின்னல் வெட்டியதைப் போல் உணர்ந்தேன். அது வலியாக உருமாறியது. ஒரு கையால் வயிற்றையும் பிடித்துக்கொண்டேன். வலி நேரமாக ஆக அதிகரித்தது. வலியைப் பொறுக்க முடியாமல், குனிந்திருந்த நான் தலையை மட்டும் உயர்த்தி வானத்தைப் பார்த்தேன். தரையிலுல்ல ஜிவன்ங்களும், ஜிவ ஆத்மாக்களும் தான் உதவாது. நீயும் கூடவா என்பதைப் போல வானத்தைப் பார்த்தேன். இவர்களையாவது காண முடியும் ஆனால் நீ மட்டும் தெரியப்போவதில்லை பிறகெங்கே உதவி கேட்ப்பது. வலி தாலாமல் மீண்டும் தலையை சாய்த்தேன். நீண்ட தாடி, முகமே தெரியாத வகையில் மூடியிருந்தது. தலை முடியெல்லாம் எண்ணேயே பார்க்காமல் சூம்பிக் கிடந்தது. சட்டென பின்புறம் திரும்பிப் பார்த்தேன் யாருமில்லை. கார் கண்ணாடியில் அந்த உருவத்தை மறுபடியும் உற்றுநோக்கினேன். அது என்னைத்தான் காட்டியது. நானா அது? திடுமென என் பழைய உருவ நினைப்பு என் மனச்சித்திரத்திலிருந்து வெளிவந்தது. திகைப்பில் நான் வலியையெல்லாம் மறந்துவிட்டேன். என் உருவத்தின் மீது நான் கொண்டிருந்த எல்லாம் சுக்கு நூறானது. இது வேறு யாரோ, நான் இல்லை. அது எப்படி கண்ணாடி தவறாகக் காட்டும்? அப்படியானால் இந்த உருவம் என்னுடையதுதானா? அப்படி என்றால் பழைய உருவம் என்னாயிற்று? அப்படியானால் நான் யார்? அந்த உருவமா? இப்படி எண்ணூகிறேனே இந்த நினைப்பா? என்னை மண்ணில் அடையாளப்படுத்தும் பிறப்பினுடே வந்த அடையாளமா? எது? எது? நான் யார்?        

Comments

Popular posts from this blog

குற்றமும், தண்டனையும்

கொடுக்கப்படவில்லை பறித்துக்கொள்ளப்பட்டது

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)