Skip to main content

நான் யார்? -பகுதி - 6

பத்து திங்களும் பழுதுபோலொழிந்தன நாட்கள். எனக்கும் சானுவுக்கும் புதுதாய் உறவு முளைத்திருந்தது. மிக நெருக்கமானதாய் இருந்தது.
சானுவின் கணவர் தாமஸ் சாப்ட்வேரில் கம்பொனியின் ஜென்ரல் மேனேஜராக இருக்கிறார். சமூகத்தில் பெரிய அந்தஸ்து உள்ள மனிதர் ஆனால் உள்ளுர கொடுரமானவர், சானு சொல்லியிருக்கிறாள்.
அவளுக்கு கல்யாணத்தில் துளியும் விருப்பமில்லை. வேண்டா வெறுப்பாய், அப்பாவின் கட்டாயத்தின் பேரில் மணந்து கொண்டாள். கொஞ்ச நாளில் அவன் சுயரூபம் தெரியத் தொடங்கியது. போதைக்கு முழுவதும் தன்னை அர்ப்பனித்திருந்தான். பல பெண்களுடன் தொடர்ப்பு.
சகித்துக்கொள்ள முடியாமல் சானு இதைக் கேட்டேவிட்டாள். நீ செய்யறது சரியில்லை என்று அவனைப் பார்த்து கத்தினாள். ஒரு மாடலை வீட்டுக்கே அழைத்து வந்திருந்தான்.
எது சரியில்லை? உன்னைக் காரு பெலஸ்னு வாழவைக்கறனே அது சரியில்லைங்கிறயா? இல்லை நீ கேட்டாததேல்லாம் வாங்கி தற்ரனே அது சரியில்லையா? சொல்லுடி சொல்லு. கன்னாபின்னாவென்று அடித்தான்,  போதை தலைக்கேறிய பிறகு. அந்த நிகழ்வுக்கு அப்புறம் தினமும் அடிப்பான். பல இடங்களில் சூடு போட்டிருந்தான்.
கெஞ்சிப் பார்த்தாள், மன்றாடிப் பார்த்தாள். அவன் மனம் மாறாவே இல்லை. அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் பெறும்பாலுமான நாட்களில் அவன் ஊரிலே இருக்கமாண்டான் என்பதுதான். பிறந்த குழந்தையை அவன் அப்பாவோடு வளரவிட்டுவிட்டான், குழந்தை அவன் சந்தோஹத்துக்கு இடஞ்சலாயிருக்கிறதுவ என்பதற்க்காக. ஒரு கட்டத்துக்கு மேல் எப்படா அவன் வீட்டை விட்டு வெளியே போவான் என்று தோன்றத் தொடங்கியது. வீட்டுக்கு வந்தால் சானு பயப்பட ஆரம்பித்தாள்.
ஒருநாள் முகம் முழுவதும் வீங்கி, இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அவள் ஃப்ளட்டின் கதவை பிடித்து நிலைகொள்ள முடியாமல் ஆடிக்கொண்டிருந்தாள். அதிர்ந்து போய் அவள் பக்கம் நெருங்கினேன். கிட்டத்தட்ட சுயநினைவே இல்லாமல் இருந்தாள். என்ன செய்வதேன்றே எனக்கு புலப்படவில்லை. சட்டென உள்ளே புகுந்தேன். பெரிய விசாலமான வீடு, எங்கே போவது, தாமஸ் எங்கே இருக்கிறான்?
தாமஸ்..தாமஸ் கத்திக்கொண்டே ஒவ்வொரு அறையாக சென்றேன். பதில் எதுவும் வரவில்லை. நான்காவது அறையைத் திறந்ததும் சற்றேறக் குறைய அதிர்ச்சிக்குள்ளானேன். அவன் ஒரு பெண்ணோடு உறவு கொண்டிருந்தான். நான் உள்ளே நுளைந்தது தெரிந்தும் இருவரும், தங்கள் நிலையில் எந்த மாற்றத்தையும் காட்டிக் கொள்ளவேயில்லை. உறவைத் தொடர்ந்தார்கள். கத்தி எதுவும் அர்த்தமில்லை. சானுவை நோக்கி ஓடினேன். கதவைப் பிடித்தபடி விழுந்திருந்தாள்.
அள்ளிக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு ஓடினேன். இரண்டு நாள் கழித்து வந்தான் தாமஸ். உடனே அவளை டிஸ்ஸார்ச் செய்துகொண்டு போய் வேறு ஒரு பெரிய ஹாஸ்பிட்டலில் சேர்த்தான். யார் அவளை அங்கு சேர்த்தார்கள், ஒரு தேங்ஸ் சொல்லலாம் என்று கூட தோன்றவில்லை அவனுக்கு. அப்பொது தொடங்கிய எங்கள் உறவு, மிகவும் பலமடைந்துவிட்டது.
முதலில் எல்லாம் அவள் பலமுறை என்னைக் கட்டிக்கொண்டு அழுவாள். கார்த்திக் பணம் தா வாழ்க்கைக்கு முக்கியமா? அதைக் கட்டிக்கிட்டு அவ அழுகிறான். எத எடுத்தாலும், உனக்கு நா அவ்வளவு காஸ்டிலியா அத வாங்கி தந்த இத வாங்கி தந்தன்னு பீத்திக்கிறான். அன்பா ஒரு வார்த்தை கூட பேசல தெரியுமா? கண்ணீர் பிரவாகமாக கொட்டியது.
எனக்கும் தா வாழ்க்கை புரியல. கடசிவரைக்கும் காச சேர்த்தரானுக, கடைசில எல்லாத்தையுவிட்டுடு போய்டறானுக. இந்த சமூகம் என்னடானா நீ இப்படித்தா இருக்கனும்னு சொல்லுது ஆனா யாரும் கடைபிடிச்ச மாதிரி தெரியல.எனக்கும் குழப்பமாகதான் இருக்கு என்று மனசுக்குள் எண்ணினேன்.
சானு நிமிர்ந்து என் கண்களைப் பார்த்தாள். நாம ஏன் ஒன்னா சேர்ந்து வாழக்கூடாது. என்னை கல்யாணம் பன்னிக்க என்றாள் சானு.

Comments

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

மியாவ் மியாவ்

கருப்பணசாமி, சிலை செஞ்சு வச்சுப்போடறன். இந்த சீவன காப்பாத்து என கண்களை மூடி மேற்க்கே பார்த்து வேண்டிக் கொண்டாள் எங்கள் ஆத்தா. பக்கத்தில் பூனை பக்…பக்….கென்று கக்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்தை யாரோ அழுத்திக் கொண்டது போல அது கக்கியது. அப்போதுதான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்தேன். பூனை கத்தற சத்தமும், ஆத்தா சாமி கும்பிடற சத்தத்தையும் கேட்டு பொடக்காளிக்கு வந்தேன். கண்களை திறந்த ஆத்தா கையிலிருந்த திருநீரை வீசி பூனையின் மேல் எறிந்தாள், பிறகு அதன் நெற்றியில் பூசிவிடப் போனதும் அது பயந்து ஓடிப்போனது. சும்மா இல்லாத, இந்த கெரகம்…….என்று அதை திட்டிக்கொண்டு என்னை பார்த்தவாறு ஆசாரத்திற்க்கு நகர்ந்தாள். எனக்கும் ஆத்தாவிற்க்கும் முந்தானேத்து பயங்கர சண்டை அதனால் பேச மாண்டாள். நான் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்துவிட்டு ஏதோ பூனைக்கு உடம்பு சரியில்லைனு நினைத்துக்கொண்டேன். இரா தூங்கும்போது மூங்கில் விட்டத்துக்கும், முகட்டு ஓடுக்கும் நடுவுல இருக்கிற இடைவெளியில மெதுவாக தன்னோட கால எடுத்து வச்சு நகரும். ஆத்தா அங்க பாரு பூனை கத்துது. டேய்… சும்மா கிடக்கமாண்ட. அது கத்துனா கத்துது உனக்கென்ன? எ