நான் யார்? -பகுதி - 6

பத்து திங்களும் பழுதுபோலொழிந்தன நாட்கள். எனக்கும் சானுவுக்கும் புதுதாய் உறவு முளைத்திருந்தது. மிக நெருக்கமானதாய் இருந்தது.
சானுவின் கணவர் தாமஸ் சாப்ட்வேரில் கம்பொனியின் ஜென்ரல் மேனேஜராக இருக்கிறார். சமூகத்தில் பெரிய அந்தஸ்து உள்ள மனிதர் ஆனால் உள்ளுர கொடுரமானவர், சானு சொல்லியிருக்கிறாள்.
அவளுக்கு கல்யாணத்தில் துளியும் விருப்பமில்லை. வேண்டா வெறுப்பாய், அப்பாவின் கட்டாயத்தின் பேரில் மணந்து கொண்டாள். கொஞ்ச நாளில் அவன் சுயரூபம் தெரியத் தொடங்கியது. போதைக்கு முழுவதும் தன்னை அர்ப்பனித்திருந்தான். பல பெண்களுடன் தொடர்ப்பு.
சகித்துக்கொள்ள முடியாமல் சானு இதைக் கேட்டேவிட்டாள். நீ செய்யறது சரியில்லை என்று அவனைப் பார்த்து கத்தினாள். ஒரு மாடலை வீட்டுக்கே அழைத்து வந்திருந்தான்.
எது சரியில்லை? உன்னைக் காரு பெலஸ்னு வாழவைக்கறனே அது சரியில்லைங்கிறயா? இல்லை நீ கேட்டாததேல்லாம் வாங்கி தற்ரனே அது சரியில்லையா? சொல்லுடி சொல்லு. கன்னாபின்னாவென்று அடித்தான்,  போதை தலைக்கேறிய பிறகு. அந்த நிகழ்வுக்கு அப்புறம் தினமும் அடிப்பான். பல இடங்களில் சூடு போட்டிருந்தான்.
கெஞ்சிப் பார்த்தாள், மன்றாடிப் பார்த்தாள். அவன் மனம் மாறாவே இல்லை. அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் பெறும்பாலுமான நாட்களில் அவன் ஊரிலே இருக்கமாண்டான் என்பதுதான். பிறந்த குழந்தையை அவன் அப்பாவோடு வளரவிட்டுவிட்டான், குழந்தை அவன் சந்தோஹத்துக்கு இடஞ்சலாயிருக்கிறதுவ என்பதற்க்காக. ஒரு கட்டத்துக்கு மேல் எப்படா அவன் வீட்டை விட்டு வெளியே போவான் என்று தோன்றத் தொடங்கியது. வீட்டுக்கு வந்தால் சானு பயப்பட ஆரம்பித்தாள்.
ஒருநாள் முகம் முழுவதும் வீங்கி, இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அவள் ஃப்ளட்டின் கதவை பிடித்து நிலைகொள்ள முடியாமல் ஆடிக்கொண்டிருந்தாள். அதிர்ந்து போய் அவள் பக்கம் நெருங்கினேன். கிட்டத்தட்ட சுயநினைவே இல்லாமல் இருந்தாள். என்ன செய்வதேன்றே எனக்கு புலப்படவில்லை. சட்டென உள்ளே புகுந்தேன். பெரிய விசாலமான வீடு, எங்கே போவது, தாமஸ் எங்கே இருக்கிறான்?
தாமஸ்..தாமஸ் கத்திக்கொண்டே ஒவ்வொரு அறையாக சென்றேன். பதில் எதுவும் வரவில்லை. நான்காவது அறையைத் திறந்ததும் சற்றேறக் குறைய அதிர்ச்சிக்குள்ளானேன். அவன் ஒரு பெண்ணோடு உறவு கொண்டிருந்தான். நான் உள்ளே நுளைந்தது தெரிந்தும் இருவரும், தங்கள் நிலையில் எந்த மாற்றத்தையும் காட்டிக் கொள்ளவேயில்லை. உறவைத் தொடர்ந்தார்கள். கத்தி எதுவும் அர்த்தமில்லை. சானுவை நோக்கி ஓடினேன். கதவைப் பிடித்தபடி விழுந்திருந்தாள்.
அள்ளிக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு ஓடினேன். இரண்டு நாள் கழித்து வந்தான் தாமஸ். உடனே அவளை டிஸ்ஸார்ச் செய்துகொண்டு போய் வேறு ஒரு பெரிய ஹாஸ்பிட்டலில் சேர்த்தான். யார் அவளை அங்கு சேர்த்தார்கள், ஒரு தேங்ஸ் சொல்லலாம் என்று கூட தோன்றவில்லை அவனுக்கு. அப்பொது தொடங்கிய எங்கள் உறவு, மிகவும் பலமடைந்துவிட்டது.
முதலில் எல்லாம் அவள் பலமுறை என்னைக் கட்டிக்கொண்டு அழுவாள். கார்த்திக் பணம் தா வாழ்க்கைக்கு முக்கியமா? அதைக் கட்டிக்கிட்டு அவ அழுகிறான். எத எடுத்தாலும், உனக்கு நா அவ்வளவு காஸ்டிலியா அத வாங்கி தந்த இத வாங்கி தந்தன்னு பீத்திக்கிறான். அன்பா ஒரு வார்த்தை கூட பேசல தெரியுமா? கண்ணீர் பிரவாகமாக கொட்டியது.
எனக்கும் தா வாழ்க்கை புரியல. கடசிவரைக்கும் காச சேர்த்தரானுக, கடைசில எல்லாத்தையுவிட்டுடு போய்டறானுக. இந்த சமூகம் என்னடானா நீ இப்படித்தா இருக்கனும்னு சொல்லுது ஆனா யாரும் கடைபிடிச்ச மாதிரி தெரியல.எனக்கும் குழப்பமாகதான் இருக்கு என்று மனசுக்குள் எண்ணினேன்.
சானு நிமிர்ந்து என் கண்களைப் பார்த்தாள். நாம ஏன் ஒன்னா சேர்ந்து வாழக்கூடாது. என்னை கல்யாணம் பன்னிக்க என்றாள் சானு.

Comments

Popular posts from this blog

குற்றமும், தண்டனையும்

கொடுக்கப்படவில்லை பறித்துக்கொள்ளப்பட்டது

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)