Skip to main content

புழுக்கச்சோறு -சோறு மட்டுமே பிரதானம் (ஜெயமோகன் கதை)

 


எனக்கு இரண்டு நினைவுகள் சட்டென எழுந்து வந்தது, இந்த கதையைப் படித்து முடித்தவுடன். ஒன்று நான் அம்மை போட்டிருந்த சமயத்தில் உப்பில்லாமல் பத்தியச் சோற்றை போடுவார்கள். அம்மை வடிந்தபின், நீராட்டி லேசான உப்பைச் சேர்த்து கொள்ளுப் பருப்புச் சோற்றை தருவார்கள். அதுவரை நாக்கை கட்டிப்போட்டு சரியாக சாப்பிடாமல் இருந்த நான். அதை வெறிகொண்டு சாப்பிட்ட ஞாபகம். அம்மா உருட்டி உருண்டாக கையில் தருவதை வாங்கி வாங்கி உண்டேன். பின்னாலில் அந்த சுவைக்காக அம்மை போட்டு தண்ணீர் விடும் வீடுகளில் (அம்மை போட்டவருக்கும் சிறு குழந்தைகளும் அந்த கொள்ளு குழம்புச் சாப்பாடு கொடுக்கப்படும்) அழைந்து திரிந்துருக்கிறேன். இப்போது தெரிகிறது நான் ஏன் கொள்ளு குழம்பை மிகவும் விரும்புகிறேன் என. சென்னையில் அது கிடைப்பதில்லை என்றாலும் நான் வீட்டிற்க்குப் போனால் என் அம்மா இன்னும் கொள்ளுக் குழம்பைத் தான் வைத்துதருவாள்.

குழந்தைகள் (முதல் ஒரு வருடம்) எல்லாவற்றையும் சுவை மூலமே அறிகிறார்கள். எதைப் பார்த்தாலும் வாயில் போட்டு சுவைக்கவே நினைக்கிறார்கள். அவர்களின் மற்ற புலன்கள் எல்லாம் முக குறைவாக செயல்படும் போல. எனது மருமகனை தூக்கி வைத்திருக்கும் போது இதை நான் உணர்ந்திருக்கிறேன். மனிதன் நாள் ஆக ஆக அந்த சுவை மறந்துவிடுகிறான். இந்த கதையில் வருவது போல குழந்தையானால்தான் அதை உணரமுடியும் போல அதற்க்கு எல்லாவற்றையும் இழக்க வேண்டும்...பர்ஸ், கிரிடிட் கார்ட், அடையாள அட்டை. 

பொதுவாக நாம் எல்லாவற்றையும் இழக்க நாம் தயாராக இல்லை. யானை துரத்தி அவர்கள் தங்கள் அடையாளங்களை வம்புக்கட்டாயமாக இழக்கவைத்தால் ஒழிய. அப்போது சோறு மட்டுமே பிரதானம் ஆகிறது. மற்றதேல்லாம் மலையின் குன்றில் விழுந்து எங்கோ தொலைந்து போகிறது. போரும் அமைதியும் நாவலில் வரும் ஃபியர் போரில் சிறைபிடிக்கப்பட்டு வெகு தூரம் நடத்திவரப்படுகிறான். மாடமாளிகையில் சொகுசாக வாழந்தவனுக்கு இந்த நிலை மிக கஷ்டமாக இருக்கிறது. ஒரு இளவரசன் கைதியுடன் கைதியாக. அந்த நாளின் இறுதியில் அளிக்கப்படும் சோற்றில் அவன் அதுவரை இல்லாத நிறைவை அடைகிறான். மனிதனுக்கு என்ன வேண்டும்? சோறு..மற்றதேல்லாம் ஆடம்பரமே.....

"என் மனம் எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டிருந்தது. எனக்கு நினைக்க ஒன்றுகூட எஞ்சியிருக்கவில்லை. அழுதுவிடுவேன் என்று தோன்றியது."

வேறு என்ன தோன்றும் மனிதனுக்கு? தான் வாழ இதுதான் தேவை எனக் கண்ட மனிதனுக்கு...

Comments

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

மியாவ் மியாவ்

கருப்பணசாமி, சிலை செஞ்சு வச்சுப்போடறன். இந்த சீவன காப்பாத்து என கண்களை மூடி மேற்க்கே பார்த்து வேண்டிக் கொண்டாள் எங்கள் ஆத்தா. பக்கத்தில் பூனை பக்…பக்….கென்று கக்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்தை யாரோ அழுத்திக் கொண்டது போல அது கக்கியது. அப்போதுதான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்தேன். பூனை கத்தற சத்தமும், ஆத்தா சாமி கும்பிடற சத்தத்தையும் கேட்டு பொடக்காளிக்கு வந்தேன். கண்களை திறந்த ஆத்தா கையிலிருந்த திருநீரை வீசி பூனையின் மேல் எறிந்தாள், பிறகு அதன் நெற்றியில் பூசிவிடப் போனதும் அது பயந்து ஓடிப்போனது. சும்மா இல்லாத, இந்த கெரகம்…….என்று அதை திட்டிக்கொண்டு என்னை பார்த்தவாறு ஆசாரத்திற்க்கு நகர்ந்தாள். எனக்கும் ஆத்தாவிற்க்கும் முந்தானேத்து பயங்கர சண்டை அதனால் பேச மாண்டாள். நான் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்துவிட்டு ஏதோ பூனைக்கு உடம்பு சரியில்லைனு நினைத்துக்கொண்டேன். இரா தூங்கும்போது மூங்கில் விட்டத்துக்கும், முகட்டு ஓடுக்கும் நடுவுல இருக்கிற இடைவெளியில மெதுவாக தன்னோட கால எடுத்து வச்சு நகரும். ஆத்தா அங்க பாரு பூனை கத்துது. டேய்… சும்மா கிடக்கமாண்ட. அது கத்துனா கத்துது உனக்கென்ன? எ