அருகே கடல் - தன் இருண்ட புனைவுக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டான் -ஜெயமோகனின் கதை

 


கதாநாயகன் இருண்ட வீட்டிற்க்குள் அடைந்து கிடக்கிறான், உணவில்லாமல் புத்தகம் மட்டுமே துணையாக. வீட்டின் எல்லா ஓட்டைகளையும் அடைத்துவிடுகிறான் சாவி துவாரத்தை தவிர. அதன் வழியே கடல் உள்ளே வருகிறது. 

தலைகீழான கடல். அது  புனைவில் உருவான கடல். புத்தகங்களின் துணையுடன் அவன் உருவாக்கிக்கொண்டிருக்கும் புனைவு. அருகேதான் கடல் ஆனால் பார்ப்பதை தவிர்க்கிறான். அவன் புனைவில் உருவாக்கிய உலகம் இருள் நிறைந்த துன்பமான உலகம். அதனைவிட்டு வெளியே வரமுடியவில்லை அல்லது அதிலே திளைக்க அவனது மனம் விரும்பியது. புத்தகங்களை எறித்து தனக்கு உணவு சமைத்தவன். 

ஒருசமயம் வெளியே வரும் போது ஒளியாலான கடலைப் பார்க்கிறான். அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கிறது. தாங்கிக்கொள்ள முடியவில்லை. எலி எப்படி தன் பொந்துக்குள் சென்று அடைந்து கொள்ளுமோ அப்படி அவனும் ஓடிப்போய் தன் இருண்ட புனைவுக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டான்.

நிறைய படிமங்கள் உள்ள கதை. தலைகீழ் கடல், ஒளிநிறைந்த கடல், சாவி துவாரம்....... இன்னும் நிறைய முறை படிப்பதற்க்கு சாத்தியமுள்ள கதை. 


Comments

Popular posts from this blog

குற்றமும், தண்டனையும்

கொடுக்கப்படவில்லை பறித்துக்கொள்ளப்பட்டது

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)