பிச்சைப் பாத்திரம்
குறிப்பு : மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய மத்தவிலாச பிரகசனம் என்னும் அங்கத நாடகத்தை தழுவி எழுதப்பட்ட சிறுகதையிது. எழுத்தாளன் என்ற முறையில் கதையில் மாற்றதையும் செய்துள்ளேன். அதற்க்கான உரிமையுள்ளது என நான் நினைக்கிறேன் நன்றாக சாப்பிடவும், சுவையும் மணமும் மிக்க பாணங்களை அருந்தவும், ஐந்து வகை தாம்பூலங்களை தரிக்கவும் புத்தர் அனுமதி அளித்தார். அவர் அனுமதி அளித்து என்ன பயன்? யார் அதை கொடுப்பார்கள்? நான் புத்த பிக்கு. பிச்சை எடுத்தால் இடவேண்டும். அந்த தர்மம் எல்லாம் இங்கே நடைமுறையில் இல்லை. மன்னன் தான் எல்லாவற்றையும் மறந்து எங்களைக் கைவிட்டான். இந்த மக்களுமா? சைவர்கள் பின்னால் ஓடிவிடுகிறார்கள். காஞ்சி மா நகரம் இப்படி பைத்தியகாரர்களின் தலை நகரமாகும் என ஆகுமேன போதி தர்மர் அறிந்திருப்பாரா? மனதுமுட்ட மதுவருந்து கருவிழியாள் கண் சொக்கி நிற்ப்பதுதானே வீடுபேற்றுக்கு வழி என ஏகாம்பரத்தில் வசிக்கும் கபாலிகன் தேவசோமன் சொல்லியவாறே தனது மனைவியை போதையால் கட்டிக்கொண்டு நடந்தான். இந்தக் காஞ்சியில் நான் யாரைத் தான் குறைபட்டுக்கொள்ள முடியும்? வழி நிறைக்கும் பூக்கடைகள். வான் நிறைந்த கோபுரங்கள், மகளிரின் காமம் ...