பிழை திருத்தம்

பேருந்து திணறியது, கியர் மாற்ற கூட இடம் இல்லை. ஆனால் சூரியன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு தன் சுடுகதிரை கூட்டதிற்க்கு நடுவே செலுத்தினான். கதிர் மட்டுமே நுழைய முடிந்த இடை வெளியில் கண்டக்டர் நுழைந்து வருவது ஏதோ மந்திரம் காட்டுவது போல இருந்தது. அவர் தொடர்ந்து மந்திரங்களை காட்டிக்கொண்டிருந்தார், எல்லோர் கையிலும் டிக்கெட். சாதி, மதங்களை மறந்து கூட்டம் சுயநலத்தால் பிணைந்திருந்தது.
 முகத்தில் அப்படியொரு களைப்பு. பிள்ளைகளை சோறுட்டி, சீராட்டி பின் பள்ளிக்கு அனுப்பி விட்டு, தன் கணவனுக்கு வேண்டிய பணிவிடைகளை முடித்துவிட்டு, தனியாக அவதிப்படும் நோயளி அம்மாவுக்கு ஓடிப்போய் தன் தாய் வீட்டுக் கடமையை ஆற்றிவிட்டு, தன் இடுப்பை மறைக்கும் சேலையை இழுத்துவிட மறந்துவிட்டு, ஆபிஸ் கவலையில் முழ்கிப்போனால் அந்தப் பெண். ஆனால் அவனுக்கோ அது காமமுரும் இடமாய் மாறியது. ஒருவேளை அவன் அவளுடைய முகத்தைப் பார்த்திருந்தால் அந்த விதமாய் செய்திட தோன்றியிருக்காது.
 முதலில் ஏதோ தெரியாமல் தான்படுகிறது என்று கவனக்குறைவாக விட்டுவிட்டாள். நேரமாக ஆக அந்த கை தவறுகளை தொடர்ந்தது. சட்டென புரியாமல், கொஞ்ச கொஞ்சமாய் தான் புரிய துவங்கியது அவளுக்கு. அந்த கால இடைவெளி அவனுக்கு சாதகமாய் தோன்றிற்று. மூளைக்கு இதைப் புரிந்தவுடன் சட்டென கைகளை தட்டிவிட்டாள். அனுமதிக்கிறாள் என்றேனியவன் உணர்ந்து கொண்டான் ஆமொதிக்கிறாள் என்று. சில நொடிகள் களிந்த பின் மீண்டும் அதே தவறைத் தொடர்ந்தான். அவளுக்கு கவலைகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடுவிட்டது மேலும் இது பெறும் துயராய் அமைந்தது.
மீண்டும் அவள் தட்டிவிட, அவன் அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. எப்படியும் இவள் ஊமை தான், நமக்கு ஒன்றும் பெரிதாக ஆகாது என்று எண்ணிக் கொண்டு தன் தவறை அறங்கேற்றினான்.  கைகளால் சண்டையிட்டு வெற்றி கொள்ள முடியவில்லை. தோல்வியின் அடையாளமாய் அவள் கண்கள் பனித்தன. கண்டக்டர் சீட்டு கேட்டுக் கொண்டிருந்தார். சூரியன் இன்னும் ஏணோ பொதுவாய் எல்லோரயும் சுட்டுக் கொண்டிருந்தது, பக்கத்தில் நின்றவர் தன் மகன் வெளி நாட்டில் வேலை பார்ப்பதை பெறுமையாக பேசிக் கொண்டிருந்தார். யாரும் இவள் கஷ்டத்தை கவனித்ததாய் தெரியவில்லை.
 அம்மா இதோ பாரு ரொம்ப நோரமாய் அந்த அத்தை ஆழறாங்க, பக்கதுல இருக்கற மாமா, அத்தையை இடுச்சுக்கிட்டே இருக்காங்க என்றான் பதின்மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன்.
அதுவரை கவனிக்காத கூட்டம், கோபமாய் அவன் பக்கம் திரும்பியது. அதுவரை பெண்களுக்கே தெரியாமல் உரசிக் கொண்டிருந்த மனிதகழிவுகள், அவனை நோக்கி கூட்டத்தொடு சேர்ந்து கோப பார்வையை உமிழ்ந்தது. அவள் வேர்வையோடு சேர்ந்து, கண்ணீரும் சிந்தியனாள். படபடப்பானாள், கண்ணீர் வரத்து அதிகரித்தது. கூட்டதின் கோபமும் அதிகமானது.
பொம்பளை இப்படி அவுத்து போட்டா, ஆம்பளை என்ன பண்ணுவான் என மனதுக்குள் சிலர் அவனுக்கு வக்காளத்து வாங்கினார். ஆனால் அந்த சிலரின் துணைவியார் இந்த பேருந்தில் பயணம் செய்யவில்லை. அவனை அடிக்கலாமா வேண்டாமா? என கூட்டம் யோசித்துக் கொண்டிருந்த வேளை சட்டென கன்னத்தில் அறை விழும் சத்தம் கேட்டு அனைவரும் தலையை திருப்பினர்.
அம்மா சிறுவனின் கன்னத்தில் இன்னும் சில அறைகளை தந்து விட்டு, அவனைப் பார்த்துக் கேட்டாள், “ இவ்வளவு நேரம் அத்தை அழுகறத பார்த்துட்டு ஏன் சும்மா நின்ன?, வாய திறந்து சொன்னா என்ன முத்தா உதிர்ந்திடும்?”.
ஏம்மா சின்னப் பையனப் பொட்டு அடிச்சா அவன் என்ன பன்னுவான் என்றார் அங்கே நின்ற ஆசாமி ஒருவர்.
கடுங்கோபத்தில் அம்மா அவரை முறைக்க கூட்டம் வாய் அடைத்து போனது. கையில் வைத்திருந்த இரண்டு வயது மகனைப் பார்த்தேன். அந்த அம்மாவையும், அவனையும் பார்த்தேன். என் மகனை மிக கன்னியமானவனாக வளர்க்க வேண்டுமென அப்போதுதான் தோன்றிற்று.

 பேருந்து அமைதியாக காவல் நிலையம் நோக்கிச் சென்றது. யாரும் அவனை அடிக்கவில்லை மாறாக ஆண்கள் காமத்தை விட்டு எப்போதும் போல பக்கத்தில் நின்றனர்.   

Comments

  1. Nice story.. A lesson to all to have some value system in their mind.. Which can be done.. Whish should not be...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குற்றமும், தண்டனையும்

கொடுக்கப்படவில்லை பறித்துக்கொள்ளப்பட்டது

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)