Skip to main content

கொடுக்கப்படவில்லை பறித்துக்கொள்ளப்பட்டது

இடப்பக்கம் நீண்ட சாலை, அதன் முழுவதும் யாரோ மலர்களை கொட்டி வைத்திருந்தனர். ஒருவேளை இருபுறமும் வளர்ந்து நிற்க்கும் மரங்களின் வேளையாய் இருக்கும். எவரும் அதில் பயணம் மேற்க்கொண்டதில்லை என்று சொல்கிறதா அந்த மலர்கள்?  இல்லை யாரையேனும் வரவேற்க்க காத்திருக்கிறதா? தெரியவில்லை. அது சாலையா இல்லை சோலையா? விழிகள் மெதுவாய் நடை போட்டது. வெண்ணிற கொடியில் சிவப்பு நிற இதயம் ஏற்றப்பட்டிருந்தது.பூக்கள் கொடிக்கம்பத்தின் காலடியில் கிடந்தன. இதயத்திலிருந்து வழிகிற குருதி அந்நிறத்தையே கொடுத்திருக்குமோ? எனக்கு நேர்ரேதிரே அந்த கொடிக்கம்பம். காற்றினால் இதயம் பறந்து கொண்டிருந்தது.









குவிந்த உள்ளங்கை போன்றே இருந்தது அந்த ஏரி. கிணற்றில் நீரை சேந்துவது போல் வானம் நீரை திருடிக் கொண்டிருந்தது. உள்ளங்கை சரிவு போல உள்ள அதன் பள்ளத்தாக்கில் காப்பிச் செடிகள். காபிச் செடிகளுக்கு நடுவே ஆழகிய ஏரி அமர்ந்திருந்தது. மோட்சம் கிடைத்தால், நீர் கூட ஆவியாகித்தான் வானுலகம் செல்ல வேண்டும் போல. மோட்சம் கிடைத்த நீர், காபிச் செடியில் அப்போது தான் வெளிவந்த இளந்தளிரை தடவிச் சென்றது. இளந்தளிர் மேல் சிறு துளி கண்ணீர்.
நீண்ட புல்வெளியில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருந்தேன். எனக்கு முன்னே புகைபிடித்துக் கொண்டிருந்த காபி வைக்கப்பட்டிருந்தது. ஒற்றை மரம் வானத்திலிருந்து விழும் பனித்துளிகளை தடுத்தது. காபியை லேசாக வாயுக்குள் செலுத்தினேன். இயற்கைய்யும், காபியையும் ஒரு சேர ரசித்தேன். என்ன ஒரு வித்தியாசமான் காபிக் கடை? மனம் ஆச்சரியப்பட்டது.
பூக்களை ரசிக்க இடதுபுறம் திரும்பினேன், சானு நின்றுகொண்டிருந்தால் மிக அருகில். பூ நடந்து வந்ததா? இல்லை பறந்து வந்ததா? வியப்பில் எழுந்தேன். நீல நிற பேண்ட், அதே நிறத்தில் கோடு போட்ட வெள்ளைச் சட்டை. ஏதோ சீருடை போல் இருந்தது அவளது உடை. சிரித்தேன். எந்த உணர்ச்சியும் அவளுக்கு பதிலுக்கு தரவில்லை. உணர்ச்சி அற்ற அல்லது மறந்த முகமாய் இருந்தது, காற்று மட்டும் இடைவிடாமல் காதுக்குள்ளே பேசிக்கொண்டே இருந்தது.
சட்டென அவளது கை பின்புறமாய் ஓடியது. அடுத்த நொடி இரண்டு கூரான கத்திகளை எடுத்து அவள் மார்புக்கு இடையே வைத்தால், அவளது செயல்பாடு ஏதோ இயந்திர மனுசி போல. உணர்ச்சி மிகுந்த ஆண் உண்ர்ச்சியே இல்லாத இயந்திர பெண் முன்னே நிற்பது போல் இருந்தது அந்த கணம். அதுவரை மேகத்தால் வடிகட்டப்பட்ட சூரிய கதிர், சட்டென மாறியது. பிறை வடிவ சந்திரனை ஒத்திருந்தது அந்த கத்திகளின் கூர்முனை. சூரிய ஒளியில் சந்திரன் பிரகாசிக்கிறான். கண்கள் கூசிற்று.
கத்தி என் உடலை பதம் பார்த்தது. கத்தியின் கைபிடியில் இன்னும் அழுத்தத்தை கொடுத்துக்கொண்டிருந்தால் சானு. அன்னிச்சை செயல் கூட அன்று செயல்படவில்லை. அந்த கூரான கத்தி என் இதயத்தை வெளியே இழுத்தது. கத்திக்கு நடுவே இதயம் நடுங்கிக்கொண்டே இருந்தது. வலது கையில் லாவகமாக கைப்பற்றினால் பின்பு திரும்பி நடக்கத் தொடங்கினால். அன்னிச்சை செயல் இன்னும் எதனாலோ நிறுத்தி வைக்கப்பட்டிருந்த்து. சற்று நேரம் பிரமை பிடித்திருந்தது போல நின்றிருந்தேன். அவள் கொஞ்ச தூரம் நடந்து போயிருந்தால். சானு.. கத்தினேன். நடப்பதிலே குறியாக இருந்தால். ஓடத்தொடங்கினேன்.
ஏன் என்னுடைய இதயத்தை பறித்துக்கொண்டு போகிறாய்? சானுவிடம் வினவினேன்.

என்னைப் பற்றி நினைத்தாய் அதான் என்று திரும்பாமலே பதில் சொல்லிக்கொண்டு போனால்.
அந்தக் கொடிக் கம்பத்தின் அருகே நின்றேன். இன்னும் கொடிக்கம்பத்தில் இதயம் பறந்து கொண்டிருந்தது.
நான் உன்னைப் பற்றியேல்லாம் நினைக்கவே இல்லை கத்திக்கொண்டே பின்னால் ஓடினேன்.
நீ பொய் சொல்கிறாய் சட்டென வந்தது அவள் இயந்தரத்தனமான வார்த்தை.
அவள் நடப்பதை நிறுத்துவது போல் தெரியவில்லை.
இல்லை தீர்க்கமாக பதில் தந்தேன்.
என்ன ஆச்சரியம்? நடப்பதை நிறுத்திக் கொண்டால், திரும்பி பார்த்தால்.
இந்தா வைத்திக்கொள். தூக்கிப் போட்டால் இதயத்தை. ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல மீண்டும் நடக்கத்தொடங்கினால்.
அவள் முகம் மனதை விட்டு போக மறுத்தது. அழகே! உருகியது கைகளில் இருந்த இதயம்.
சட்டென இதயம் அவளை நோக்கி பறக்கவும், என்னைப் நோக்கி அவள் திரும்பவும் சரியாக இருந்தது. அவளது இடதுபுறம் ஒட்டிக்கொண்டது.

ஏசி போட்ட காருக்குள் விழித்துக்கொண்டேன். தெருவோரம் வயதான கிழவர் பசியால் யாசகம் கேட்டார். மெதுவாக என் கார் அவரைக் கடந்துபோனது. ஜன்னலை திறக்கக்கூட தோணவில்லை. காரின் பின் ஜன்னல் ஊடாக திரும்பிப் பார்த்தேன். நிறையப் பேர் அவர்களைக் கடந்து வந்தனர். ஓ! என்னைப் போலவே இதயம் இல்லாதவர்களோ இவர்கள்?

Comments

Post a Comment

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

மியாவ் மியாவ்

கருப்பணசாமி, சிலை செஞ்சு வச்சுப்போடறன். இந்த சீவன காப்பாத்து என கண்களை மூடி மேற்க்கே பார்த்து வேண்டிக் கொண்டாள் எங்கள் ஆத்தா. பக்கத்தில் பூனை பக்…பக்….கென்று கக்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்தை யாரோ அழுத்திக் கொண்டது போல அது கக்கியது. அப்போதுதான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்தேன். பூனை கத்தற சத்தமும், ஆத்தா சாமி கும்பிடற சத்தத்தையும் கேட்டு பொடக்காளிக்கு வந்தேன். கண்களை திறந்த ஆத்தா கையிலிருந்த திருநீரை வீசி பூனையின் மேல் எறிந்தாள், பிறகு அதன் நெற்றியில் பூசிவிடப் போனதும் அது பயந்து ஓடிப்போனது. சும்மா இல்லாத, இந்த கெரகம்…….என்று அதை திட்டிக்கொண்டு என்னை பார்த்தவாறு ஆசாரத்திற்க்கு நகர்ந்தாள். எனக்கும் ஆத்தாவிற்க்கும் முந்தானேத்து பயங்கர சண்டை அதனால் பேச மாண்டாள். நான் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்துவிட்டு ஏதோ பூனைக்கு உடம்பு சரியில்லைனு நினைத்துக்கொண்டேன். இரா தூங்கும்போது மூங்கில் விட்டத்துக்கும், முகட்டு ஓடுக்கும் நடுவுல இருக்கிற இடைவெளியில மெதுவாக தன்னோட கால எடுத்து வச்சு நகரும். ஆத்தா அங்க பாரு பூனை கத்துது. டேய்… சும்மா கிடக்கமாண்ட. அது கத்துனா கத்துது உனக்கென்ன? எ