எனக்கு நிறைய நாட்க்கள் இந்த சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ஒரு மனிதன் இந்த சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டோ அல்லது ஏமாற்றப்பட்டோ போனால், அதுவும் அவன் ஒடுக்கப்பட்டவனாக இருந்தால் (சாதியால் மட்டுமல்ல, பொருளாதாரத்திலும்), நிச்சயம் அந்த ஒடுக்கப்பட்டவனால் எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. அதனால் அவனது மனதில் வரும் வடுக்களும், கோபமும், ஆங்காரமும் அப்படியே காற்றில் கறைந்துவிடுமா? அந்த மனிதனின் இறப்போடு முடிந்து போனால், அவனுக்கான நீதி என்ன? அந்த ஆங்காரம், கோபத்திற்க்கான பதிலென்ன? "அறத்தான் இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை" இந்த கதை ஒடுக்கப்பட்ட புலையர் சாதியைச் சார்ந்த ஒருவனின் அறம் பற்றிப் பேசுகிறது. அவன் இறந்தபிறகும் வந்து நியாயம் கேட்க்கிறான். இல்லை என்றால் குருதி குடிக்காமல் விடமாண்டேன் என மிரட்டுகிறான். சிவனிடம் போய் வரம்வாங்கி வந்தவன். என்ன செய்ய முடியும்? நெய்விளக்கில் சத்தியம் செய்து இனிமேல் அடிமைவியாபாரம் பண்ணமாண்டேன் என சொன்னபிறகே, அவன் படையலுக்கு ஆறுதல் அடைவதாக ஒத்துக்கொள்கிறான். இப்பூவியில் இருக்கும் மனிதர்களின் ஆங்காரம், போபம், வடுக்கள் அவர்கள் மற...
ஒரு சினிமாபட இயக்குநர் - மாஸ்டர். அவருக்கும் சாமானியமான இக்காவிற்க்குமான ஒரு உறவு இந்த கதையில் மையமாக வருகிறது. ஜான் தன்னை புண்ணியவளானக மாறப்போவதாகவும், தான் இருக்கும் அறையில் ஜீன் இருப்பதாகவும் சொல்லி வைத்திருப்பான். ஜான் இறந்த பல நாட்க்கள் கழித்துக்கூட இழுத்தால் வந்துவிடும் பூட்டைத் திறக்காமல் வைத்திருப்பார். அவர்களுக்கு இடையேடயான உறவு என்பது நகைச்சுவையால் ஆனது. ஜான் நகைச்சுவை விளையாட்டுத்தனமானது. இக்காவின் நகைச்சுவை மாப்பிள்ளைத் தனமானது. கதை நடக்கும் பின்னனியை தெரிந்துகொண்டு படித்தால் கதை விரிவடையும் என நினைக்கிறேன். இக்கா, ஜான் போன்ற மனிதர்களைப் பார்ப்பது ஆபூர்வமானது. தூய உள்ளமும், இயற்க்கையான மனதும் உடையவர்கள். உண்மையில் கடவுளின் பிள்ளைகள் அவர்கள். ஒரு உயிருக்கும் ஒரு தன்மை இருக்கும். அப்படி உயிர்ன் தன்மையுடனே வாழ்வது ஒரு வரம். அந்த வரத்தை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அதனால்தான் அவர்களைப் பார்த்தவுடன் நமக்கு மகிழ்ச்சியடையத் தோன்றுகிறது. ஜானின் கடைசி உலக பந்தத்தையும் தீயிட்டு எறித்துவிடுகிறான் கதை சொல்லி. அது நீலநிற ஹூரி இருந்தாள் என இக்காவிடம் சொல்கிறான். ந...
நட்டைத் திருகி இந்த மனித வாழ்க்கைக்குள் மாட்டிக்கொள்கிறது குரங்கு. அப்படி அதை இவ்வாழ்க்கைக்குள் கொண்டுவருவது சரியா தவறா என்பதுதான் இக்கதையின் மைய்யக் கேள்வி. கதையின் நாயகனுக்கு அது சரியெனத் தோன்றுகிறது ஆனால் மற்றவர்களுக்கு அப்படித் தோன்றவில்லை. கதையில் ஒரு வித தத்துவத்தை பாமரத்தனமாக பேசும் ஒரு கதைமாந்தர் வந்து, நேரடியாக கதையில் மாந்தரிடம் விவாதிக்கிறது. அவனிடம் அதற்க்கு பதிலில்லாத போது திட்ட ஆரம்பிக்கிறான். கதை பகடியாகச் சென்றாலும், புராணங்கள் பற்றிய குறிப்புகளுடன் சென்று கொண்டிருக்கிறது. காடுகளை நோக்கி தவம் செய்ய முனிவர்கள் செல்கிறார்கள். பற்றுக்கொண்டதையெல்லாம் தவிர்ப்பதற்க்காக. ஆனால் பற்றுக்கொண்ட குரங்கு காட்டிலிருந்து நாட்டுக்கு வருகிறது. அப்படி வந்த முதல் குரங்கு தான் மனிதன். அறிதலில் இருக்கும் மகிழ்ச்சியை அறிந்துகொண்டது அது. அதற்க்கான சாவியை கொடுத்தபிறகு, தானாக அது பல இடங்களை திறந்துகொண்டு போகிறது. எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முயலும் போதுதான் நமக்கு வருகிறது ஞானதுக்கம். அதிலிருந்து வெளிவர மனிதன் பலகாலமு முயன்று வழியைக் கண்டு கொண்டிருக்கிறான். ஆனால் குரங்குக...
Comments
Post a Comment