Skip to main content

பார்த்தசாரதி நகர உலா

பார்த்தசாரதிக்கு தீடிரென சென்னை நகரை உலா வர வேண்டுமென ஆசை வந்துவிட்டது. மீசையை நீவிக்கொண்டே கற்ப்பகிரகத்தை விட்டு வெளியேறினார். நிலவொளியில் கோயில் பிரகாரம் ஜொலித்தது. மூடியிருந்த கதவின் இடைவெளியில் புகுந்து அர்த்த மண்டபத்தில் வந்து நின்றார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை இடப்பக்கமாக திரும்பி தெப்பக்குளத்தின் வழியாக நகருக்குள் பிரவெசிக்க நகர்ந்தார். தெப்பகுளத்தை ஒட்டியிருந்த கக்குஸ் வாடையில் திக்குமுக்காடினார். மூக்கை பிடித்துக்கொண்டு வேகமாக கடக்கும் போது ஒரு கான்ஸ்டபில் அவரை லத்தி முனையில் நிறுத்தினார்.  

யார் நீ? சந்தேகமாக அவரை கேட்டார் கான்ஸ்.

திருவல்லிக்கேனி பார்த்தசாரதி என்றார் பார்த்தசாரதி.

எங்க போய்டு வற்ற? ம்.. அதட்டினார்.

கோயில்லே இருந்து வற்றேன்.

இன்னாரத்துல கோயில்லேன்ன வேலை? திருடிட்டு வற்றயா? கான்ஸ் கோபமாய் பார்த்தசாரதியை கேட்டார்.

இல்லை கோயில்ல நின்னிருந்த..

மேலும், கீழுமாய் கான்ஸ் பார்த்தார். நிச்சயாமாய் இது கேஸ்தான் என மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.

பார்த்தசாரதியோ, என்னடா இது? குளக்கறையைத் தாண்டி போக முடியலையே என வருத்தப்பட்டார்.

நடை சாத்துனதுக்கி அப்புறமா கோயில்ல என்ன பண்ணிக்கிட்டு இருந்த? சட்டை, பை எல்லாத்தையும் திறந்துகாட்டு. லத்தியை ஓங்கி மிரட்டிக்காட்டினார்.

உங்களுக்கு என்ன வேண்டும் என பார்த்தா மெதுவாக வினவினார்.

ம்ம்..ஒரு கோடி ரூபா கொடேன்..எகத்தாளமாய் சொல்லிவிட்டு, சிகெரட்டை பற்ற வைத்தார் கான்ஸ்.

பார்த்தா தனது இடது பாக்கெட்டில் கையைவிட்டு புது இரண்டாயிரம் ரூபாய்க் கட்டாய் கான்ஸ் கைகளில் திணித்தார்.

வாயிலிருந்த சிகரேட் நழுவது தெரியாமல், கான்ஸ் அப்படியே மலைத்துப்போய் நின்றிருந்தார். பணத்தையே அவர் வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றுருந்தார்.

இதுதான் நல்ல சமயமென நினைத்து, மெல்ல நழுவி நகருக்குள் நுழைந்தார் பார்த்தா. உதடுகளில் லிப்டிக் போட்டு, சேலையை இடுப்புக்கு கிழே கட்டியிருந்த பெண் ஒருத்தி இவரையே பார்த்து சிரித்தாள். இவர் பதிலுக்கு சிரித்தார். மோகன புன்னகை. அவ்வளவுதான், அவள் பக்கத்தில் வந்துவிட்டாள்.

என்னய்யா! ஆயிர்ரூபா..என்றாள்.

கடவுள் சிரித்தார்.

எண்ணூரு…

மறுபடியும் சிரித்தார்.

கடசியா சொல்லு எவ்வளவு தா தருவனு? அவள் சற்று ஏமாற்றம் கொண்டவளாய் கேட்டாள்.

அதற்க்குள் போலீஸ் சீப் ஒன்று சீறிக்கொண்டு அவர்களுக்கு பக்கத்தில் வந்து நின்றது.

இவனுக வேற வந்துடானுக..தலையில் அடித்துக்கொண்டாள்.

அதே கான்ஸ்ம், இன்னும் நான்கு போலீஸ்சாரும் வண்டியிலிருந்து இறங்கினர்.

சார் இவன்தா நா சொன்ன ஆளு என கான்ஸ் பார்த்தாவை அடையாளம் காட்டினார்.

கோடி ரூபா வச்சிருக்கிறாங்கிறவன், போயும் போயும் தெருவுல நிக்கிறவகிட்ட பேசிக்கிட்டு இருக்கான்? நிசமா இவனதா பார்த்தயா என்றார் இன்ஸ்.

பார்த்த ஓடிவிடாமல் இருக்க நாலாபுறமும் போலிஸார் நின்றுகொண்டனர்.

 இன்னும் எத்தனை கோடி வச்சிருக்கடா. ...என்றார் இன்ஸ்.

வயிற்றில் கையை வைத்துக்கொண்டு அடக்க முடியாமல்  சிரிக்கத்தொடங்கினாள்.

இன்ஸ் கோபம் தலைக்கேறி அவள் வயிற்றின் மேலே பூட்ஸ் காலால் ஒரு மிதி வைத்தார்.  கீக் என்று கத்திக்கொண்டு அவள் தரையில் சாய்ந்தாள்.

கோபத்தால் அவர் தலையை பறக் பறக்கெனச் சொறிந்தார். சிவப்பு நிற கொண்டை விளக்கு அவர் முகத்தில் அடித்து சிவப்பாய் காட்டியது. ஆள் பார்க்க நல்ல ஆஜானுபாகுவான அனுமார் மாதிரி இருந்தார். அவளிடமிருந்து சத்தமெயில்லை.

 கான்ஸ் போய் அவள் மூக்கில் நடுவிரலை வைத்துவிட்டு, தொப்பியை கழட்டியவாறு இன்ஸிடம் வந்து, போய்டாரு சார் என்றார்.

நால்வரும் ஓடிப்போய் அவளை சோதனை போட்டனர். இன்ஸ் நகத்தைக் கடித்து துப்பினார்.

பார்த்தா மறுபடியும் நழுவ வாய்ப்பு கிடைத்ததும், தப்பி நகருக்குள் ஓடிவிட்டார்.

கால் போன போக்கில் நடந்தார். வழியில் வெளிச்சத்தைப் பார்த்ததும், உள்ளே புகுந்துவிட்டார். அங்காங்கே தூங்குபவர்கள், அரைத்தூக்கத்தில் செரில் உட்காந்திருப்பவர்கள், இரயில் தாமதமானதை தாங்காமல் நடந்துகொண்டிருப்பவர்கள் என இருந்தது சென்ரல் இரயில் நிலையம். பார்த்தா தூங்கும் கூட்ட்த்தில் கால் வைத்து போகும் போது யாரோ ஒருவன் மேல் கால் வைத்துவிட்டார். அவன் தூக்கத்திலிருந்து எழுந்து அடிக்க ஓடிவந்தான். பார்த்தா தப்பி வந்த வழியே வெளியேறினார். அவர் வெளியேறவும், போலீஸ் சீப் வரவும் சரியாக இருந்தது. துரத்தி வந்தவன் சட்டென நின்றுகொண்டான். பார்த்தா இடப்பக்கமாக வளைந்து லோக்கல் இரயில்வே ஸ்டேசனுக்கு ஓடினார். சிவப்பு நிற வெளிச்சம் கொஞ்ச நேரம் அவரை பின் தொடர்ந்தது. துரத்துவது ஓய்ந்த்தும், அவர் பாலத்தைக் கடந்து பார்க் ஸ்டேசனுகுப் போனார்.

ஸ்டேசன் படிகளில் ஏறும்போது பிச்சைக்காரன் ஒருவன் தருமம் பண்ணச் சொல்லி மன்றாடினான். சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு சாமி, பசி தாங்க முடியல என காலைப் பிடித்துகொண்டான்.
பார்த்தா தன் வலது பக்க பாக்கெட்டில் கைகளை விட்டு சில ஐநூறு ரூபாய் கட்டுக்களை பாத்திரத்தில் இட்டார். அவ்வளவுதான் தாமதம், பார்த்தாவின் காலை அவன் வாரிவிட்டு அவர் மேல் ஏறிக்கொண்டான். வைத்திருந்தா பாத்திரத்தாலே பார்த்தாவை நய்யப் புடைத்தான். வலது, இடது என எல்லா பாக்கெட்டையும் தேட ஆரம்பித்தான். எதுவும் கிடைக்காத்தால், பக்கத்தில் கிடந்த கல்லை தூக்கிக் காட்டி மிரட்டினான்.

இன்னும் எங்க பணத்த வைச்சிறுக்க சொல்லு சீக்கரமா..என கத்தினான்.

போலிஸ் சீப் கொண்டை விளக்கோடு அவர்கள் அருகில் வந்து நின்றதுதான் தாமதம், பார்த்தா அவனை கீழே தள்ளிவிட்டு ஓட ஆரம்பித்தார். பிச்சைக்காரன் போலீஸ் சீப்பின் சத்தத்தில் பய்ந்த சந்தர்ப்பம் அவருக்கு சாதகமாய்ப் போனது.

 பிச்சைக்காரன் தட்டிலிருந்த பணத்தை இன்ஸ் எடுப்பதும், அவன் விட்டுக்கொடுகாமல் சண்டைக்கட்டுவதும், அவர் ஓடும் போது திரும்பி பார்த்த்தில் தெரிந்தது.

போதும் நகர் வலம் என பார்த்தா முடிவு செய்வதற்க்குள் நகரம் காலை வேலைகளை ஆரம்பிக்கத் தொடங்கியது.

வந்த கலைப்பை ஆற்ற, பார்த்தா டீக்கடையில் போய் சூட டீ சொல்லி காலார பென்ஞ்சில் அமர்ந்தார்.

எதேர்ச்சாய் அவர் பார்வை கடை போஸ்டரில் விழுந்தது.

சீரியல் கில்லர் – விபசாரி மற்றும் பிச்சைக்காரனைக் கொன்றுவிட்டு தப்பி ஓட்டம். குற்றவாளி பெயர் திருவல்லிக்கேனி பார்த்தசாரதி. போலீஸ் தனிப்படை அமைத்து தேடல்.
 
இதைப் பார்த்ததும், பார்த்தாவுக்கு பகீர் என்றது. டீக்கடையில் இருந்து எழுந்து கோயிலுக்கே போய்விடலாம் என நகர்ந்தார். டீக்கடைக்காரன் அவரை வசை மொழிகளில் திட்டுவதை எல்லாம் கவனித்தவராய் தெரியவில்லை.

தெப்பக்குளத்தின் மேற்க்கு வாசல் வழியாக பிரகாரத்துக்குள் நுழைந்தார். மணி எட்டு இருக்கும். சூரியன் எழுந்து எல்லோரையும் சுட்டுக்கொண்டிருந்தான்.

அவர் நேராக கற்ப்பகிரகத்திற்க்குள் போக முற்ப்படும்போது தடுக்கப்பட்டார்.
இது ஸ்பேசல் தரிசனம். டீக்கெட் வாங்குனாத்தா இந்த வழி. போ போயி அந்த வரிசைலை நில்லு என் அங்கிருந்த ஆசாமி துரத்தினார். பார்த்தா என்ன செய்வது என்று தெரியாமல் தர்ம தரிசன வரிசைக்கு நகர்ந்தார்.  

இன்ஸ்ம், கான்ஸ்ம் அங்கு ஸ்பேசல் தரிசனத்தில் நின்று எதையோ வேண்டிக்கொண்டிருந்தார்கள்.


Comments

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

மியாவ் மியாவ்

கருப்பணசாமி, சிலை செஞ்சு வச்சுப்போடறன். இந்த சீவன காப்பாத்து என கண்களை மூடி மேற்க்கே பார்த்து வேண்டிக் கொண்டாள் எங்கள் ஆத்தா. பக்கத்தில் பூனை பக்…பக்….கென்று கக்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்தை யாரோ அழுத்திக் கொண்டது போல அது கக்கியது. அப்போதுதான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்தேன். பூனை கத்தற சத்தமும், ஆத்தா சாமி கும்பிடற சத்தத்தையும் கேட்டு பொடக்காளிக்கு வந்தேன். கண்களை திறந்த ஆத்தா கையிலிருந்த திருநீரை வீசி பூனையின் மேல் எறிந்தாள், பிறகு அதன் நெற்றியில் பூசிவிடப் போனதும் அது பயந்து ஓடிப்போனது. சும்மா இல்லாத, இந்த கெரகம்…….என்று அதை திட்டிக்கொண்டு என்னை பார்த்தவாறு ஆசாரத்திற்க்கு நகர்ந்தாள். எனக்கும் ஆத்தாவிற்க்கும் முந்தானேத்து பயங்கர சண்டை அதனால் பேச மாண்டாள். நான் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்துவிட்டு ஏதோ பூனைக்கு உடம்பு சரியில்லைனு நினைத்துக்கொண்டேன். இரா தூங்கும்போது மூங்கில் விட்டத்துக்கும், முகட்டு ஓடுக்கும் நடுவுல இருக்கிற இடைவெளியில மெதுவாக தன்னோட கால எடுத்து வச்சு நகரும். ஆத்தா அங்க பாரு பூனை கத்துது. டேய்… சும்மா கிடக்கமாண்ட. அது கத்துனா கத்துது உனக்கென்ன? எ