Skip to main content

ஈஸா வாஸ்ய உபநிஷத் - எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதம்

அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நலம் என எண்ணுகிறேன். அடுத்தடுத்த இரண்டு சந்திப்புகளுக்கான வாய்ப்புகள் கிட்டியும் அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலை வருத்தம் அளிக்கிறது.

இந்தக் கடிதம் எழுதத் தூண்டிய புத்தகம், ஈஸா வாஸ்ய உபநிஷத்ஓர் அனுபவம். அதன் முதல் மந்திரத்தை மட்டும் படித்திருந்தேன். அதனோடு பொருத்திப் பார்க்க்கூடிய ஓர் அழகான படிமம் இன்று கிட்டியது.

நான் ஐசி என்ஜின் வகுப்பில் இருந்தேன். அப்போது பேராசிரியர் என்ஜினில் எப்படி எரிபொருள் தீப் பற்றி எறிகிறது என்று விளக்கிக்கொண்டிருந்தார். முதலில் ஸ்ப்பார்க் பிளக்கில் தீ சுவாலை உண்டாகும். அது பிஸ்டனுக்கும், சிலின்டர் கெட்டிற்க்கும் இடையில் அடைபட்டிருக்கும் எறிபொருளை பற்ற வைக்கும். பின்பு அந்த எரிபொருள் சூடாகி வெடிப்பதால்,  அது பிஸ்டனை கீழ் நோக்கித் தள்ளி நமக்குச் சக்தி கொடுக்கிறது.


பெட்ரோல் என்ஜின் என்றால் முதலில் ஸ்ப்பார்க் பிளக்கில் தீ சுவாலையை உருவாக்கி, அது நகர்ந்து முன்நோக்கி வரும். தீ சுவாலை முன்னால் நகரும் போது அதற்க்குப் பின்னால் உள்ளதேல்லாம் எறிந்த வாயு, முன்னால் இருப்பது எறிவதற்க்காக காத்து நிற்க்கும் எரிபொருள். நடுவில் அது எறித்துக்கொண்டிருக்கிறது. இந்தப் படிமம், என்னை முதல் மந்திரத்துடன் பிணைத்தது.


                                                  
எறிந்த வாயுவெல்லாம் இறந்த காலம். எறிவதற்க்காக காத்திருக்கிற எரிபொருள் எதிர்காலம். இந்த கணம் எறிகிறதே அதுதான் நிகழ்காலம். எறிக்கிற அதுதான்ஈஸா” . அது எல்லா எறிபொருளிலும் புதைந்து உள்ளது. எறிகிற நேரம் வந்ததும், அது தன் சக்தியைப் பெற்று எறிந்து அடுத்த நிலைக்கு அதாவது வெளியேற்றப்பட வேண்டிய வாயுவாக மாறிவிடுகிறது. அதே எரிபொருள்தான், ஆனால் இப்போது நிலை மாறிவிட்டது. மாற்றம் மட்டும் நிரந்தரமானது.  

கிடைத்த சக்தி இருக்கிறதே அது என்னால்தான் என எரிபொருள் சொந்தம் கொண்டாட முடியாது அல்லது கர்வம் கொள்ள முடியாது. காரணம் தீசுவாலை (ஈஸா) பற்றிக்கொண்டால்தான் சூடாகி வெடித்து சக்தியை தர முடியும். இல்லை என்றால் அது வெறும் எறிபொருளாய் காலம்புறாமும் இருந்துவிட வேண்டியதுதான். ஒருவேளை எறிந்து முடித்துவிட்டால், அதற்க்கான சக்தியை இழந்துவிட்டதாய் அர்த்தம்.

தான் என்கின்ற கர்வத்தை விட்டு ஒழித்தால்தான், ஆனந்தமாக இந்த சக்தியை அனுபவிக்க முடியும். ஆம் இந்த சக்தியாருடையது? நமக்குள்ளே ஒழிந்திருக்கிற ஈஸாதானே.

ஈஸா வாஸ்யம் இதம் சர்வம்
யத் கின்கா ஜகத்யம் ஜகத்
தேனா த்யக்தேனா புன்ஜிதா
மா க்ராதா காஷ்ய ஸ்வித்தானம்.

-             -  ஈஸா வாஸ்ய உபநிஷத்

நன்றி உங்களுக்கும், சூத்ரதாரிக்கும், சுவாமிஜி வியாச பிரசாத் மற்றும் நித்திய சைத்தன்ய யதி அவர்களுக்கும்.

என் புரிதலில் ஏதேனும் தவறிருந்தால் திருத்தவும்.

நன்றி மறுபடியும்,

மகேந்திரன்.

Comments

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

மியாவ் மியாவ்

கருப்பணசாமி, சிலை செஞ்சு வச்சுப்போடறன். இந்த சீவன காப்பாத்து என கண்களை மூடி மேற்க்கே பார்த்து வேண்டிக் கொண்டாள் எங்கள் ஆத்தா. பக்கத்தில் பூனை பக்…பக்….கென்று கக்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்தை யாரோ அழுத்திக் கொண்டது போல அது கக்கியது. அப்போதுதான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்தேன். பூனை கத்தற சத்தமும், ஆத்தா சாமி கும்பிடற சத்தத்தையும் கேட்டு பொடக்காளிக்கு வந்தேன். கண்களை திறந்த ஆத்தா கையிலிருந்த திருநீரை வீசி பூனையின் மேல் எறிந்தாள், பிறகு அதன் நெற்றியில் பூசிவிடப் போனதும் அது பயந்து ஓடிப்போனது. சும்மா இல்லாத, இந்த கெரகம்…….என்று அதை திட்டிக்கொண்டு என்னை பார்த்தவாறு ஆசாரத்திற்க்கு நகர்ந்தாள். எனக்கும் ஆத்தாவிற்க்கும் முந்தானேத்து பயங்கர சண்டை அதனால் பேச மாண்டாள். நான் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்துவிட்டு ஏதோ பூனைக்கு உடம்பு சரியில்லைனு நினைத்துக்கொண்டேன். இரா தூங்கும்போது மூங்கில் விட்டத்துக்கும், முகட்டு ஓடுக்கும் நடுவுல இருக்கிற இடைவெளியில மெதுவாக தன்னோட கால எடுத்து வச்சு நகரும். ஆத்தா அங்க பாரு பூனை கத்துது. டேய்… சும்மா கிடக்கமாண்ட. அது கத்துனா கத்துது உனக்கென்ன? எ

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)

  எனக்கு நிறைய நாட்க்கள் இந்த சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ஒரு மனிதன் இந்த சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டோ அல்லது ஏமாற்றப்பட்டோ போனால், அதுவும் அவன் ஒடுக்கப்பட்டவனாக இருந்தால் (சாதியால் மட்டுமல்ல, பொருளாதாரத்திலும்),  நிச்சயம் அந்த ஒடுக்கப்பட்டவனால் எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. அதனால் அவனது மனதில் வரும் வடுக்களும், கோபமும், ஆங்காரமும் அப்படியே காற்றில் கறைந்துவிடுமா? அந்த மனிதனின் இறப்போடு முடிந்து போனால், அவனுக்கான நீதி என்ன? அந்த ஆங்காரம், கோபத்திற்க்கான பதிலென்ன? "அறத்தான் இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை" இந்த கதை ஒடுக்கப்பட்ட புலையர்  சாதியைச் சார்ந்த ஒருவனின் அறம் பற்றிப் பேசுகிறது. அவன் இறந்தபிறகும் வந்து நியாயம் கேட்க்கிறான். இல்லை என்றால் குருதி குடிக்காமல் விடமாண்டேன் என மிரட்டுகிறான். சிவனிடம் போய் வரம்வாங்கி வந்தவன். என்ன செய்ய முடியும்? நெய்விளக்கில் சத்தியம் செய்து இனிமேல் அடிமைவியாபாரம் பண்ணமாண்டேன் என சொன்னபிறகே, அவன் படையலுக்கு ஆறுதல் அடைவதாக ஒத்துக்கொள்கிறான்.  இப்பூவியில் இருக்கும் மனிதர்களின் ஆங்காரம், போபம், வடுக்கள் அவர்கள் மறைந்த பிறக