ஈஸா வாஸ்ய உபநிஷத் - எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதம்

அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நலம் என எண்ணுகிறேன். அடுத்தடுத்த இரண்டு சந்திப்புகளுக்கான வாய்ப்புகள் கிட்டியும் அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலை வருத்தம் அளிக்கிறது.

இந்தக் கடிதம் எழுதத் தூண்டிய புத்தகம், ஈஸா வாஸ்ய உபநிஷத்ஓர் அனுபவம். அதன் முதல் மந்திரத்தை மட்டும் படித்திருந்தேன். அதனோடு பொருத்திப் பார்க்க்கூடிய ஓர் அழகான படிமம் இன்று கிட்டியது.

நான் ஐசி என்ஜின் வகுப்பில் இருந்தேன். அப்போது பேராசிரியர் என்ஜினில் எப்படி எரிபொருள் தீப் பற்றி எறிகிறது என்று விளக்கிக்கொண்டிருந்தார். முதலில் ஸ்ப்பார்க் பிளக்கில் தீ சுவாலை உண்டாகும். அது பிஸ்டனுக்கும், சிலின்டர் கெட்டிற்க்கும் இடையில் அடைபட்டிருக்கும் எறிபொருளை பற்ற வைக்கும். பின்பு அந்த எரிபொருள் சூடாகி வெடிப்பதால்,  அது பிஸ்டனை கீழ் நோக்கித் தள்ளி நமக்குச் சக்தி கொடுக்கிறது.


பெட்ரோல் என்ஜின் என்றால் முதலில் ஸ்ப்பார்க் பிளக்கில் தீ சுவாலையை உருவாக்கி, அது நகர்ந்து முன்நோக்கி வரும். தீ சுவாலை முன்னால் நகரும் போது அதற்க்குப் பின்னால் உள்ளதேல்லாம் எறிந்த வாயு, முன்னால் இருப்பது எறிவதற்க்காக காத்து நிற்க்கும் எரிபொருள். நடுவில் அது எறித்துக்கொண்டிருக்கிறது. இந்தப் படிமம், என்னை முதல் மந்திரத்துடன் பிணைத்தது.


                                                  
எறிந்த வாயுவெல்லாம் இறந்த காலம். எறிவதற்க்காக காத்திருக்கிற எரிபொருள் எதிர்காலம். இந்த கணம் எறிகிறதே அதுதான் நிகழ்காலம். எறிக்கிற அதுதான்ஈஸா” . அது எல்லா எறிபொருளிலும் புதைந்து உள்ளது. எறிகிற நேரம் வந்ததும், அது தன் சக்தியைப் பெற்று எறிந்து அடுத்த நிலைக்கு அதாவது வெளியேற்றப்பட வேண்டிய வாயுவாக மாறிவிடுகிறது. அதே எரிபொருள்தான், ஆனால் இப்போது நிலை மாறிவிட்டது. மாற்றம் மட்டும் நிரந்தரமானது.  

கிடைத்த சக்தி இருக்கிறதே அது என்னால்தான் என எரிபொருள் சொந்தம் கொண்டாட முடியாது அல்லது கர்வம் கொள்ள முடியாது. காரணம் தீசுவாலை (ஈஸா) பற்றிக்கொண்டால்தான் சூடாகி வெடித்து சக்தியை தர முடியும். இல்லை என்றால் அது வெறும் எறிபொருளாய் காலம்புறாமும் இருந்துவிட வேண்டியதுதான். ஒருவேளை எறிந்து முடித்துவிட்டால், அதற்க்கான சக்தியை இழந்துவிட்டதாய் அர்த்தம்.

தான் என்கின்ற கர்வத்தை விட்டு ஒழித்தால்தான், ஆனந்தமாக இந்த சக்தியை அனுபவிக்க முடியும். ஆம் இந்த சக்தியாருடையது? நமக்குள்ளே ஒழிந்திருக்கிற ஈஸாதானே.

ஈஸா வாஸ்யம் இதம் சர்வம்
யத் கின்கா ஜகத்யம் ஜகத்
தேனா த்யக்தேனா புன்ஜிதா
மா க்ராதா காஷ்ய ஸ்வித்தானம்.

-             -  ஈஸா வாஸ்ய உபநிஷத்

நன்றி உங்களுக்கும், சூத்ரதாரிக்கும், சுவாமிஜி வியாச பிரசாத் மற்றும் நித்திய சைத்தன்ய யதி அவர்களுக்கும்.

என் புரிதலில் ஏதேனும் தவறிருந்தால் திருத்தவும்.

நன்றி மறுபடியும்,

மகேந்திரன்.

Comments

Popular posts from this blog

குற்றமும், தண்டனையும்

கொடுக்கப்படவில்லை பறித்துக்கொள்ளப்பட்டது

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)