Skip to main content

வாசகர் கடிதம்: முதற்கனல் - வெண்முரசு

முதற்கனல் நாவலை படித்ததும் எழுதும் கடிதமிது. நாவலின் அமைப்பு இதற்க்கு முன் பழக்கம் (எனக்கு) இல்லாத ஒன்றாக இருந்தது. கதைக்குள் கதை. மேலும் வரலாறு ஒருவகை தொன்மாக முன் வைக்கப்படுகிறது. அதன் மாயங்களை எல்லாம் நிகர் கால வராலாற்று கருவிகளால் விலக்கி தட்டையாக்காமல், இன்னும் மாயங்களாகவே முன் வைப்பது ஆனந்தமாக இருந்தது. மனிதன் தொடர்ந்து எல்லாவற்றையும் பகுத்து தன் அறிவுக்கு உட்ப்பட்டதாக மாற்றுகிறான்.அது நல்ல விசயம்தான், அதே சமயம் அவனது வாழ்க்கை இப்படித்தான் என முன்னரே வகுத்துவிட்டால் எப்படி இருக்கும்? நிச்சயம் சலித்துப் போவான். அப்படி வரலாற்றையும் பகுத்து, ஐயம் திரிபுர சொல்லிவிட்டால்? நிச்சயம் கொடுமை. கற்ப்பனைக்கு வழி இல்லாமல் மனிதன் தற்க்கொலை செய்யவும் நேரலாம். நல்ல வேளை அது நடக்கவில்லை என்பது மகிழ்ச்சி. நான் மகாபாரதக்கதையை முழுவதும் அறிந்தவனில்லை. முதற்கனலில் கதை எனக்கு புதிது. அம்பையின் கண்ணீர் சிகண்டியின் வழி முதற்கனல் ஆனது. எனக்கு தெரிந்து ஆண்கள் நீர்நிலையின் மேல்தளத்தை போன்றவர்கள். மேலோட்டமாகப் பார்க்க அவர்கள் வீரர்களாகவும், புரட்சிக்காரர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை வழிநடத்தும் ஆழ் மனம் என்னவோ பெண் எனத் தோன்றுகிறது. அம்பை முதலானவர்களை பீஸ்மர் தானக அஸ்தினாபுரிக்கு தூக்கி வரவில்லை. தன் அன்னையின் அணையை ஏற்றுதான் அதனை நிறைவேற்றுகிறார். அதே போல சிகண்டிக்கும் பீஸ்மருக்கும் தனிப்பட்ட விரோதம் இல்லை. ஆனால் தன் அன்னையின் பொருட்டு பழிவாங்க நினைக்கிறான். முதற்கனலே இரு பெண்களின் ஆசைக்கு இடையில் மாட்டிக்கொண்ட ஆண்களின் கதைதான். கதையில் அனைத்து ஆண் மகனையும் ஏதோ ஒரு பெண் ஆட்டுவிக்கிறாள். ஃபால்குனர் சொல்கிறார், அரசுகள் செறிகளால் ஆளப்படுகிறது, உணர்ச்சிகளால் அல்ல என்கிறார். அந்த நெறியை தொடர்ந்து பாதுகாத்து வருபவர்கள் பெண்கள்தான். மாற்று மதமோ, சாதியிலோ கல்யாணம் செய்தவர்கள் அப்பாவைக்கூட சம்மதிக்கவைக்கலாம், ஆனால் அம்மாவை முடியாது. இங்கு பண்பாடு என்பதே பெண்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்றுதான். அவர்கள் நினைத்தால் எதையும் மீறலாம். உதாரணமான பீஷ்மரை, காசி நாட்டு இளவரசிகளை தூக்கிவரச் சொன்னது. நான் பின்தொடரும் நிழலின் குரலில், ஆண்களின் புரட்ச்சிதான் ரத்தமாக ஓடுகிறது, இதுவே பெண்கள் பண்ணி இருந்தால் எப்படி இருக்கும்? என வினாவாக எழுப்பப்பட்டிருக்கும். உண்மையில் பார்த்தால் எல்லாம் பெண்கள் தான் போல. கல்லைத் தூக்கிப் போட்டால் எப்படி குளம் கலங்குமோ, அது போலதான் ஆண்களும். இந்த நாவலுக்கும் மற்ற நாவலுக்கும் இருக்கும் வித்தியாசமாக நான் நினைப்பது. முழு விழிப்பு நிலையிலும் இல்லாமல், கனவிலும் இல்லாமல், இந்த நாவல் தொடர்ந்து மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி ஓடுவதை சில சமய்ங்களில் நினைத்து சிரித்துக்கொள்வேன். முக்கியமாக பீஷ்மர் கையில் முள்ளுடன் பாலைவனத்தில் நின்றது பல நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது. மேலும் இந்த நாவலைப் பற்றி வரும் நாட்களில் எழுதலாம் என நினைக்கிறேன்.

Comments

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

கழுமாடன் - அறம் கடவுளுக்கும் மேல் அல்லவா? (ஜெயமோகன் சிறுகதை)

  கழுமாடன் கதையும் பீடம் கதையும் ஒருவகையில் ஒடுக்கப்பட்டவர்கள் தெய்வமாவதுதான். தன்னுடைய கோபம், வடுக்களுடன் ஒருவன் இறந்துபோனால் அது அப்படியே அழிந்து போகாது. மனித உடல் மக்கிவிடும் ஆனால் அவனது எண்ணங்கள் அழியாது மாடனாக வந்து ரத்தம் கேட்க்கும். தன் அதிகார பலத்தால் மிரட்டி பணிய வைக்க முயலுகிறாள் உயர் குடி பெண். அதற்க்கு இணங்கவில்லை என்றால் நாயகனின் அம்மாவை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறாள். வேறு வழியில்லாமல் அவனும் ஒத்துக்கொள்கிறான். இருவரும் மாட்டிகொள்ளும் போது, அவள் கைப் பிடித்துவிட்டாதாகச் சொல்லி தப்பிக்கப்பார்க்கிறாள். நாயகனுக்கு கழுவேற்றம் தண்டனையாகிறது.  கதையில் இரண்டு அதிர்ச்சியுறும் இடம் வருகிறது. ஒன்று அந்த கழுவேற்றும் ஒத்திகை மற்றது நாயகன் குருவனிடம் தான் அவளைத் தொடவில்லை ஆனாலும் கழுவேறுகிறேன் என்கிறான். இதில் இரண்டாவது சம்பவம்தான் பெரும் அதிர்ச்சி அடையவைக்கிறது. செய்யாத குற்றத்திற்க்காக அவன் கழுவேற்றம் அடைகிறான். காரணம் அவன் புலையன்.  அந்த இழிநிலை தாங்காமல் அவன் மாடனாகி ரத்த பழி வாங்கத் துடிக்கிறான். பீடம் கதையில் வரும் மாடன் அவன். அவன் கேட்ப்பது ரத்தமில்லை, அறம். அறம் கடவுளுக்கும் மேல