Skip to main content

குற்றமும், தண்டனையும்

இனிமேலும் சேர்ந்து வாழமுடியுமேன தோன்றவில்லை. வெறுப்பை உமிழும் அவள் கண்கள் ஞாபகத்திற்க்கு வந்தது. ஒருவித ஈர்ப்பையும், அன்பையும் சொறிந்த அதே கண்கள்தான் நான்கு வருட திருமணத்திற்க்கு பிறகு இப்படி மாறிப் போனது. எனக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ நான் பல காரியங்களை அம்மா, அப்பாவின் ஆசைக்காகவே பண்ணியிருக்கிறேன். அதில் கல்யாணமும் ஒன்று. சொல்லப்போனால் எனக்கு இஷ்டமே இல்லை. ஒன்றை மறுக்கும் போதேல்லாம், அதைச் செய்தாக வேண்டி வற்புறுத்தப்பட்டிருக்கிறேன். பள்ளிக்கூடம் போவது, வேலைக்கு போவது என அதன் பட்டியல் நீளும். யாருக்காக இதைச் செய்கிறேன் என்று சத்தியமாக விளங்கவில்லை?  ஆனால் அது அம்மா, அப்பாவின் விருப்பம். ஏன் அது அவர்கள் விருப்பமானது என எனக்கு தெரியாது. காற்றடிக்கும் திசையில் மேகங்கள் போவதைப் போல நானும் மற்றவர்களைப் போல நகர நிர்பந்திக்கப்பட்டேன். புதிதில் இருக்கும் கவர்ச்சியும், சுவாரஸ்யமும் என்னை சில நாட்க்கள் கட்டிப்போட்டது என்னவோ உண்மைதான். தேக்கிவைக்கப்பட்ட அணையின் நீர் மட்டம் எப்படி வரவு இல்லை என்றால் வடிந்து இல்லாமல் ஆகுமோ அதே போலதான்  அந்த கவர்ச்சியும், சுவாரஸ்யமும் ஆனது.

பாடியிலிருக்கும் கம்பெனிக்கு வேளச்சேரியிலிருந்து போய் வருவதென்றால் ஆகிற காரியமா? பஸ்ஸில்தான் குடும்பம் நடத்தமுடியும். பக்கத்தில் வீடு எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னது பெரிய தவறாய் போனது. என்னையும், அம்மாவையும் பிரிப்பதற்க்காகவே நீ இப்படி செய்கிறாய் என கத்தினாள். முதல் சண்டை இப்படித்தான் ஆரம்பமானது.
கம்பெனியிலேயே கிடக்கிறாய், சூரியன் உதிப்பதற்க்கு முன்னால் போய்விட்டு, மறைந்ததும்தான் வருகிறாய். என்னோடு இருக்கவே உனக்கு பிடிக்கவில்லை. நான் வேண்டாதவளாய்விட்டேன் என அழுது அடம்பிடித்தாள். வேலை வேண்டாமேன சொல்லுவதும், சீக்கிரம் கம்பெனியிலிருந்து வருவதும், சனி மற்றும் ஞாயிறு கம்பெனிக்கு வரமாண்டேன் என சொல்லுவதும் கிட்டத்தட்ட ஒன்றுதான். உலக பொருளாதாரம் தரைமட்டமாகி கிடப்பதால், நிறைய நபர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். அதில் நாமும் ஒருவராய் ஆகக் கூடாது என எல்லோரும் பயந்த நேரம். பெரிய சண்டைக்கு அது காரணமாய் அமைந்துவிட்டது. அவள் அம்மாவும் அவளோடு சேர்ந்து ஏக வசனத்தில் என்னையும், என் குடும்பத்தையும் திட்டித் தீர்த்தார்கள்.

குடும்பம்னா அப்படி, இப்படி இருக்கத்தான் செய்யும், நாமதா அனுசரிச்சு போகனும், பொண்ணு கொஞ்சம் செல்லமா வளர்ந்துட்டா அதனால அப்படி இருக்கா, நீங்க ஒன்னும் பெருசா எடுத்துக்க வேண்டாமேன சொல்லி நாட்டாமை செய்து வைத்தனர் பெரியவர்கள்.
எனக்கு பள்ளிக்கூடம் பிடிக்கவில்லை, போக மாண்டேன் என அடம்பிடித்த போது, அப்பா என்னை அடித்துக்கொண்டே ஒரு கையால் தூக்கி வகுப்பறைக்குள் விசிறி எறிந்தார். அதற்க்கெனவே காத்துக்கொண்டிருந்த கதவு சாத்திக்கொண்டது. சிறையில் அடைக்கப்பட்டதாகவே நினைத்து அழுதேன். அதேபோலதான் இப்போதும் எனக்கு தோன்றிற்று. யார் இவர்கள் எல்லாம்? நீ இப்படித்தான் இருக்க வேண்டுமேன சொல்லி தள்ளிவிடுகிறார்கள்.
மனதை தேற்றிக்கொண்டு அவளோடு வாழ முயற்ச்சித்தேன். அவளோ எதாவது தவறை கண்டுபிடித்து சண்டையிட்டுக்கொண்டே இருந்தாள். முடிந்தவரை என் வாழ்நாட்க்களை கம்பெனியிலேயே கழிக்க ஆரம்பித்தேன்.

இதற்கிடையில் எங்களுக்கு அழகான ஒரு குழந்த பிறந்தது. இது சற்றே என் பெற்றோருக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. இனிமேலாவது சேர்ந்து வாழ நல்ல காரணம் கிடைத்துவிட்டது என்றனர். ஆனால் விதி வேறு விதமாய் மாறி என்னோடு விளையாடியது.
ஏன் குழந்தையை நான்தா பாத்துக்கனுமா? நீங்க ஒன்னும் வேலைக்கு போய் கிழிக்க வேண்டாம். கம்பெனி வேலையை ரிசைன் பண்ணிட்டு வாங்க. இங்க யாரும் பணம் இல்லைனு அழல என்றாள்.
இதோ பாரு நீ வேண பெரிய பணக்கார குடும்பதுல பிறந்தவளா இருக்கலாம். அதுக்காக நா உங்க வீட்டுல உக்காந்து சாப்பிட முடியாது என்றேன் பதிலாய்.
அவளது குடும்பமே சேர்ந்து என்னை வீட்டை விட்டு துரத்துவிட்டது. மணி பத்து இருக்கும். தெரு விளக்கு பிரகாசமாய் எறிந்துகொண்டிருந்தது, தெருவிலிருந்த நாய் ஒன்று என்னைப் பார்த்து குறைத்தது, பிறகு என்ன நினைத்ததோ தெரியவில்லை அதுவாக ஓடிப்போய்விட்டது. பேருந்து மற்றும் காரின் முகப்பு வெளிச்சம் என் இருண்ட முகத்தை வெளிக்காட்டியது. கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை மறைக்க, கைக்குட்டையால் முகத்தை துடைப்பதைப் போல கண்களை துடைத்துக்கொண்டேன். பித்து பிடித்தவன் போல நின்றிருந்தேன். எங்கே போவது? யாரைக் கேட்ப்பது? நண்பர்கள் வீட்டுக்கு போகலாம் என்றால், அவர்களிடம் என்ன சொல்வது? வீட்ட விட்டு துரத்தீட்டாங்கன்னு சொல்ல முடியுமா? தன்மானம் இடித்தது. நேராக பஸ் பிடித்து எங்கள் கிராமத்திற்க்கே போய்விட்டேன்.

ஒரு வார காலம் மட்டுமே தங்க முடிந்தது. அதற்க்குள் எப்படி ஊர் மக்களுக்கு செய்தி கிட்டியதேன்று தெரியவில்லை, அவர்கள் வாயில் என்னை மென்றுகொண்டிருந்தனர். இனிமேலும் நம்மால் இங்கிருக்க முடியாதென்று என்ணி, சென்னைக்கே வந்துவிட்டேன். பாடிக்கு பக்கத்தில் வீடேடுத்து தங்கி, வேலைக்கு போல ஆரம்பித்தேன்.
சிறிய கண்கள், மிருதுவான விரல்கள், எச்சில் ஒழுகும் வாய், மோகன புன்னகை, என்னை தூங்கவிடவில்லை. வேலையை செய்யவும் முடியவில்லை. சுய மரியாதையை விட்டு நான் படியேறி அவள் வீட்டிற்க்கு போனேன். என் குழந்தையை காட்ட முடியாதென்று சொல்லி, ஓடிப்போ என மறுபடியும் என்னை அவர்கள் வீட்டிலிருந்து துரத்தினார்கள்.

என்ன கொடுமையான வாழ்க்கை! வேண்டாம் என்றால் விடாமல் அதில் சிக்க வைக்கிறார்கள். வேண்டுமென்றால், முடியாது என மறுக்கிற இந்த பந்தம் கொடுமையானது. பல நாட்க்கள் தூக்கம் பறிபோய், கண்கள் சிவக்க கிடந்தேன். வளமான தேகம் வற்றிப்போன நாராய் ஆனது. என்னைப் பார்க்க காசநோய் வந்தவன் போல தோன்றிற்று என நண்பனோருவன் சொன்னான். செல்பேசியின் முகப்புபடமாக என் ஒரு வயது தூரியாடும் குழந்தை இருந்தது. என்னுடைய கஹ்ட்டத்தையேல்லாம் அதனோடு விளையாடி தீர்த்துக்கொள்வேன். அந்த முகப்புபடம் கொடுத்த வழி தாங்கிக்கொள்ள முடிவதாய் இல்லை.

வக்கீல் நோட்டீஸ் அனுப்பிருந்தார்கள். அன்று இரவே அவள் தாயார் தொலைபேசியில் அழைத்து விவரங்களைச் சொன்னாள். உன்னை அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நாங்கள் வேறு மாப்பிள்ளை பார்த்து இருக்கிறோம் அதனால் நீ அதில் கையெழுத்திட்டு எங்களுடன் ஒத்துழைப்பதுதான் உனக்கும், எங்களுக்கும் நல்லது என மிரட்டும் தொனியில் சொன்னாள்.
என்னுடைய பிள்ளையை கொடுத்துவிடுங்கள் என்றேன்.
ம்…. எனக்கு எப்படி இத முடிக்கனும்னு தெரியும் என்று நான் பதில் சொல்லுவதற்க்குள் மறுமுனை துண்டிக்கப்பட்டது.
அம்மா அழுதாள். நீ பொறுத்துகொள்ளத்தான் வேணும், யாருக்கு இல்லாட்டியும் உங் குழந்தைக்காவது. நான் எப்பாடுபட்டாவது பேசி சரிசெய்றேன். கவலைப்படாதே என்றாள். நான் எதுக்கும் மறுமொழி சொல்லவில்லை.
எங்கள் பிரச்சனை நீதிமன்றத்திற்க்குப் போனது. அதன் பயனாய் கம்பெனி முழுக்க நான் அறியப்பட்டவன் ஆனேன். கடந்து போகும் போது யாராவது சிரித்தால், அது என்னைப் பற்றித்தான் இருக்குமோ என நினைத்துக்கொள்வேன். நான் தோற்றுப்போனதாய் தோன்றிற்று. சறுகை எப்படி சுழல் காற்று தூக்கி விளையாடுமோ, அதைப் போலதான் என்னை வைத்து வாழ்க்கை விளையாடியது. இப்போது எங்கே விழுந்தேன் என்றும் தெரியாது. என் கவலைகள் வருத்தம் எல்லாம் என் மீது சுமத்தப்பட்டிருப்பதாகவும், அதை சுமப்பதைத் தவிர வேறு வழி இருப்பதாய் எனக்கு தெரியவில்லை.
இனிமேலும் இப்படியே நான் தொடர்ந்து வாழ முடியுமேன தோன்றவில்லை. நிச்சயம் ஒரு முடிவு எடுத்தாக வேண்டியவனாக இருந்தேன். பல நாட்க்கள் யோசனைக்கு பிறகு இந்த நல்ல முடிவை எடுத்திருந்தேன். அதை யோசனை என்பதை விட உணர்ச்சி கொந்தளிப்புகளுக்கு முடிவு கட்ட எடுத்தது என்றால் பொறுத்தமாக இருக்கும்.

நான் செய்யப் போவது நிச்சயம் சட்டப்படி குற்றம்தான். அதற்க்காக எந்த நீதிபதியும் எனக்கு தண்டனை கொடுக்க முடியாது. அல்லது இந்த குற்றம் புரிவதற்க்கு காரணாமானவர்களையாவது தண்டிக்கப்படுவார்களா என்றால் அதுவும் கிடையாது. இங்கு குற்றம் செய்ய எல்லோருக்கும் உரிமையுண்டு. ஹாலிலிருந்து எழுந்து பெட்ரூம் கதவை தாளிட்டுக்கொண்டேன்.    
  

Comments

Post a Comment

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)

  எனக்கு நிறைய நாட்க்கள் இந்த சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ஒரு மனிதன் இந்த சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டோ அல்லது ஏமாற்றப்பட்டோ போனால், அதுவும் அவன் ஒடுக்கப்பட்டவனாக இருந்தால் (சாதியால் மட்டுமல்ல, பொருளாதாரத்திலும்),  நிச்சயம் அந்த ஒடுக்கப்பட்டவனால் எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. அதனால் அவனது மனதில் வரும் வடுக்களும், கோபமும், ஆங்காரமும் அப்படியே காற்றில் கறைந்துவிடுமா? அந்த மனிதனின் இறப்போடு முடிந்து போனால், அவனுக்கான நீதி என்ன? அந்த ஆங்காரம், கோபத்திற்க்கான பதிலென்ன? "அறத்தான் இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை" இந்த கதை ஒடுக்கப்பட்ட புலையர்  சாதியைச் சார்ந்த ஒருவனின் அறம் பற்றிப் பேசுகிறது. அவன் இறந்தபிறகும் வந்து நியாயம் கேட்க்கிறான். இல்லை என்றால் குருதி குடிக்காமல் விடமாண்டேன் என மிரட்டுகிறான். சிவனிடம் போய் வரம்வாங்கி வந்தவன். என்ன செய்ய முடியும்? நெய்விளக்கில் சத்தியம் செய்து இனிமேல் அடிமைவியாபாரம் பண்ணமாண்டேன் என சொன்னபிறகே, அவன் படையலுக்கு ஆறுதல் அடைவதாக ஒத்துக்கொள்கிறான்.  இப்பூவியில் இருக்கும் மனிதர்களின் ஆங்காரம், போபம், வடுக்கள் அவர்கள் மறைந்த பிறக

எரிமருள்

  இ ந்த பூத்தவேங்கையின் உள்ளிருந்து ஓசையற்ற காலடிகளுடன், கூர்ந்த மூக்குடன், விழித்த கண்களுடன், மெல்லமடிந்த சிறிய காதுகளுடன் உன்னை நோக்கி வருகிறேன். வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் எனச் சில ஒவ்வொருவருக்கும் இருக்கும். சாமனியனிம் அந்த தருணம் மறக்கப்பட்டுவிடுகிறது, ஆனால் கலைஞனுக்கு அது உச்ச தருணாமாகிறது. "முதைச் சுவற் கலித்த முற்றா இளம்புல்".  கவித்துவமான கதை. மெளனி அவர்களின் கதை போன்றது. இந்த கதையின் வாசல் எனக்கு இன்னும் திறக்கவில்லை. மறுவாசிப்புக்கு சில காலம் கழித்து உட்ப்படுத்தினால் திறக்கலாம். இதே போன்ற ஆசிரியரின் மற்ற கதைகள் படித்தால், நிச்சயம் விளங்கும்.  வருங்காலங்களில் மீண்டும் குறிப்பு எழுத வேண்டும்.