Skip to main content

கதை சொல்லும் நிகழ்வினை நடத்த விரும்புகிறேன்.


கதை சொல்லும் நிகழ்வினை நடத்த விரும்புகிறேன்.
கதை: சிலப்பதிகாரம்.                                இடம்: சென்னை

நாள்: இன்னும்  முடிவாகவில்லை.

பின்குறிப்பு:   சங்ககால இலக்கியத்தை, இக்காலத்திற்க்கு ஏற்ப்ப கூறும் முறையை தேர்வு செய்து உள்ளேன்.

பங்குகொள்ள விரும்புவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும், அதனை பொருத்து நிகழ்வினை உறுதி செய்யலாம்.

ஏன் கதை சொல்லுதல் முக்கியமாகிறது?

கதை என்பது வெறும் கற்ப்பனை மட்டுமே என நினைப்பது தவறான எண்ணம். நம் வரலாறு, கலாச்சாரம் எல்லாவற்றையும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல பயன்பட்ட கருவி கதை.
சற்றே யோசித்தால் ஒரு விசயம் தெளிவாக விளங்கும், நம் பெற்றேருக்கு தெரிந்த அளவுக்கு நமக்கு நம் மண்ணைப் பற்றி தெரியாது. இன்னும் சொல்லப்போனால் மாபெரும் காப்பியங்களான இராமயாணமும், மகாபாரதமும் எழுத்தறிவில்லாத எத்தனையோ பெற்றோர்களுக்கு அத்துப்படி. எப்படி இதுவெல்லாம் சாத்தியமாயிற்று? கதை கேட்டலும், அதை சொல்லுதலும் தான் சாத்தியமாக்கியது.

அப்படியானால் வரலாறு, கலாச்சாரம் ஏன் முக்கியமாகிறது?

எந்த மனித சமூகமும் தனக்கென ஒரு வரலாறு, அதற்க்கான காலாச்சாரத்தையும் கொண்டிருக்கிறது. இது ஒன்றும் நேற்றோ முந்தையநாளோ வந்தது இல்லை. தலைமுறை தலைமுறையாக இது தொடர்ந்து வருகிற ஒன்று. அப்படியானால் ஒரு சமூகம் இதை மறந்தால் என்ன? இத்தனை நாளாக அவர் முன்னோர்கள் திரட்டி வந்த அறிவு, தனித்தன்மை அனைத்தும் அத்தோடு அழிந்து போகும். பின்னர் நாம் எந்தவித பிடிப்பும் இல்லாத தனிச்சமூகமாக நிற்க்க வேண்டிவரும். தனக்கான எந்தவித சொந்த படைப்பையும் உருவாக்க முடியாத நிலைவரும். தனித்தன்மை என்பது முக முக்கியமான ஒன்று.
“யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்பது சங்க்காலப் பாடல்.
 என்னதான் சொல்லவருகிறது?
 எல்லா நல்ல கேட்டுக்குங்க, உலகத்துல இருக்கிற ஊர் எல்லாம் என்னோட ஊர் தான்.
அப்படீனா?
உலகத்திலுள்ள எல்லோரும் சம்மானவர்கள் அதனால் எல்லா ஊரும் எனது ஊர் ஆகிறது. இந்த கருத்து சுமார் மூன்று ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னால் நம் முன்னோர்கள் சொன்னது. இதை இன்னும் மேலை நாடுகளால் உதட்டளவில் மட்டும் ஒத்துப்போக முடிகிற காரியம், ஆனால் மனதளவில் முடியவில்லை. இருந்தும் நம் கலாச்சாரம், எந்த மண்ணில் எல்லாம் மற்ற மதத்தவர்களுக்கு இடமில்லை என்று அனுப்பியபோதும், இந்தியா மட்டும் இடம் தந்தது வரலாறு.
இந்தியா வல்லராசாக போகிற காலம் நெருங்கிவருகிற சூழல். அதனால் நம் காலச்சாரத்தைப் பற்றிய பிரஞ்ஞை முக்கியமாகிறது. தெரிந்துகொண்டால் தான் நாம் தனித்தன்மை கொண்டவர்களாக இருக்கமுடியும். புதுவிதமான மாற்றத்தை இந்த உலகத்துக்கு தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதனால் வெள்ளைக்காரனை காப்பி அடித்தது போதும்.     

Comments

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

கழுமாடன் - அறம் கடவுளுக்கும் மேல் அல்லவா? (ஜெயமோகன் சிறுகதை)

  கழுமாடன் கதையும் பீடம் கதையும் ஒருவகையில் ஒடுக்கப்பட்டவர்கள் தெய்வமாவதுதான். தன்னுடைய கோபம், வடுக்களுடன் ஒருவன் இறந்துபோனால் அது அப்படியே அழிந்து போகாது. மனித உடல் மக்கிவிடும் ஆனால் அவனது எண்ணங்கள் அழியாது மாடனாக வந்து ரத்தம் கேட்க்கும். தன் அதிகார பலத்தால் மிரட்டி பணிய வைக்க முயலுகிறாள் உயர் குடி பெண். அதற்க்கு இணங்கவில்லை என்றால் நாயகனின் அம்மாவை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறாள். வேறு வழியில்லாமல் அவனும் ஒத்துக்கொள்கிறான். இருவரும் மாட்டிகொள்ளும் போது, அவள் கைப் பிடித்துவிட்டாதாகச் சொல்லி தப்பிக்கப்பார்க்கிறாள். நாயகனுக்கு கழுவேற்றம் தண்டனையாகிறது.  கதையில் இரண்டு அதிர்ச்சியுறும் இடம் வருகிறது. ஒன்று அந்த கழுவேற்றும் ஒத்திகை மற்றது நாயகன் குருவனிடம் தான் அவளைத் தொடவில்லை ஆனாலும் கழுவேறுகிறேன் என்கிறான். இதில் இரண்டாவது சம்பவம்தான் பெரும் அதிர்ச்சி அடையவைக்கிறது. செய்யாத குற்றத்திற்க்காக அவன் கழுவேற்றம் அடைகிறான். காரணம் அவன் புலையன்.  அந்த இழிநிலை தாங்காமல் அவன் மாடனாகி ரத்த பழி வாங்கத் துடிக்கிறான். பீடம் கதையில் வரும் மாடன் அவன். அவன் கேட்ப்பது ரத்தமில்லை, அறம். அறம் கடவுளுக்கும் மேல