.
| புள்ளி மால் வரை பொன் எனல் நோக்கி, வான், வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள், உள்ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும் அவ் வள்ளியோரின், வழங்கின-மேகமே. புள்ளி மால் என்பது இமையமலை. அது பொன் போல இருந்தது. வானோர் அதனை அடையும் பொருட்டு வெள்ளி விழுதுகளை மலைகளுக்கு இடையே செலுத்தினர். பனிமலையான இமையமலை மீது மாலை சூரிய கதிர்கள் பட்டு பொண் போல மின்னும். மேகங்கள் பனியை கொட்டும். அதைக் கண்டு கவிஞன் தன் கற்ப்பனையை விரிக்கிறான். இங்கு கற்ப்பனையை விரித்தல் என்பது மிக முக்கியமான ஒன்று. இதற்க்கு சிறந்த உதாரணம் குழந்தைகள். சின்ன டப்பாவை குக்கராகவும், மண்ணை சோறாகவும் கற்ப்பனை செய்துகொள்கிறது, பின்பு அதே மண்ணை குழப்பாக மாற்றி கொள்கிறது. ஆனால் நாம் அன்றாட வாழ்வில் அதனை தொலைத்து கொண்டிருக்கிறோம். இயந்திரமானோம். சற்று சிந்தித்தால் விளங்கும். |
எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று. அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்? சில சமயம் அவளது நான்
Comments
Post a Comment