Skip to main content

கற்பனைக்கும் நிஜத்திற்க்குமான ஊசலாட்டம் - ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு


ஜெவை சந்தித்தால் இழந்தது ஒரு சோப்பு டப்பா, துண்டு மற்றும் அன்டர்வேர் (அதை அடக்கம் செய்தவர்களுக்கு நன்றி கூற கடைமைபட்டுள்ளேன்). பெற்றது சில திட்டுக்கள், வாழ்க்கையின் உன்னத நிமிடங்கள், நிறைய சந்தோசம், இலக்கியம், அரசியல், கேளிக்கை இன்னும் பல. ஒருவித பயம் காரணமாகவே இந்த இன்னும் பல என்ற வார்த்தையை பள்ளியிலிருந்து பயண்படுத்துகிறேன். நானும் எனது நன்பர்களும் அப்துல் கலாம் அவர்களை சந்திக்கலாம் என முடிவெடுத்து கடந்த வருடம் ஜுலை முப்பதாம் தேதி அவரது ஊருக்கு சென்றோம். அவரை கண்டதும் கண்கள் கலங்கிவிட்டது, ஒருவித வெறுமை உணர்வுக்கு ஆளானோம். உடனே நாங்கள் ஒரு தீர்மானத்திற்க்கு வந்தோம். யார்யாரையேல்லாம் கொண்டாடுகிறோமோ அவர்களை சந்திப்பது என்று. அந்த வரிசையில் முதலில் ஜெ இருந்தார். அதை நண்பர்களும் சத்தியமாக முழுமனதுடன் ஏற்றுக்கொண்டனர். 
நண்பர்களே! என அழைப்பது இல்லை இல்லை வரவேற்ப்பதும், அல்ல என மறுதளிப்பதும்மென ஜெவின் பேச்சுக்கள் மனதிலே ஓடியது. கிரியை நான் ஜெ என்றே ஊகித்ததும், அவருக்கு ஒரு பிம்பத்தை என்னுள்ளே தந்திருந்தது. இரயிலிலிருந்து அவசரமாய் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்க்கு நுழையும் போது ஜெவின் குரல் கேட்டது. நவீன இலக்கியத்தின் அறிமுகம் கிட்டி காட்டுக்குள்ளே சென்றுவிட்டேன். காட்டை சுற்றி பார்க்கும் போதுதான் தெரிந்தது அது வளருமென்று. நாளுக்கு நாள் அது விரிந்து கொண்டே செல்கிறது அகத்திலும், புறத்திலும். சரி ஊர் பக்கம் போய் பாக்கலாம் என்று முடிவெடுத்து விஷ்ணுபுரம் போகலானேன். காட்டிலே இருந்து பழகி, ஊருக்குள் செல்வது இயலாத காரியமென்றே தோன்றிற்று.வழியில் அறமுன்னு சிற்றூர் கண்டு, கொஞ்ச நாள் வசித்து, மீண்டும் பயணப்பட்டேன். ஜெவின் குரல் அந்தரங்கமாக என்னுள்ளே ஒலித்துக்கொண்டேயிருந்தது. வாசலில் தலைப்பட்ட என்னை வரவேற்றார்கள். என்னுள்ளே ஒலித்த கற்ப்பனைக் குரலும், வெளியே ஒலித்த நிஜக்குரலுமாய் ஜெ. மனம் ஊசலாடியது. 
மதமும் உலக வரலாறும் பிண்ணி அவரது வாயிலிருந்து கொட்டியது. திடுமென கோபம் கொண்டு சபை விவாதத்தை பற்றி விளக்கினார். விவாதம் கருப்பொருளிருந்து விலகிவிட்டதென்பது அவரது கோபம்.ஆங்கில நாவலில் ஆரம்பித்து ஆங்கில நாவலிலே வலம் வந்தது விவாதம். நல்லவேளை சாப்பாடும் வந்தது. ஓர் எழுத்தாளனை சந்தித்து அவரது படைப்பை பற்றி மிக குறைவாக பேசியது ஒரு மனக்குறையே. 
சாப்பிட்டு முடித்ததும் கட்டுரை படிக்க கிட்டியது. ஒன்றாம் வகுப்பிலிருந்து படிக்கிறோம், இன்னும் எப்படி படிப்பதென்று தெரியவில்லை. எப்படி படிப்பதென்றும், கவனிப்பதென்றும் ஆழமாய் விவரித்தார். பின்பு தலைவர்களைப் பற்றின சூடான விவாதம, சூடு டீ வரும் வரை தொடர்ந்தது. வாக்கிங் போகலாமென்று நினைத்து அரசியல்வாதி போல நடைபயணம் சென்றோம். பொதுவாக பேசிக்கொண்டதும் அரசியல்தான். நடைபயணம்னா சத்தியாகிரகத்தை பற்றியா பேசுவார்கள் பின்ன? கோயிலை சுற்றிவிட்டு தொடர்ந்தோம். வேடிக்கை பார்க்க மின்மினிப் பூச்சிகள் வந்திருந்தது. கேளிக்கையோடு நாள் முடிவுக்கு வந்தது. அப்படி சிரித்து பல நாட்களாயிருந்தது.
மறுநாள் விளிக்கும் போது சோர்வு என்னை தழுவியிருந்தது, போர்வை விலகி கிடந்தது. பல் விளக்கி பம்புசெட்டில் குளித்தேன், ஜெ எனக்கு முன்னே அதில் குளித்திருந்தது சற்றே ஆச்சரியமூட்டியது. சிலைகளைப் பற்றின விவாதம் ஏழு மணிக்கே தொடங்கியது என்னை சிலையாக்கியது. சிறுகதை பற்றின விவாதம் மிக பயணுள்ளதாக இருந்தது. தொடர்ந்து படைப்புகளின் மீதான விமர்சனம். சிறுகதை மீதான என் கோட்ப்பாட்டை மாற்றினீர்கள். ஓர் சிறந்த சிறுகதையை எழுத வேண்டும் என்ற வைராக்கியம் வந்தது. கூடவே சோகமும் வந்தது. பிரிவு பெறும்பாலூம் அதைதானே தரும். ஜெ ஒன்று நிச்சயம், உங்களைப் போன்றோரை வரலாறு அடிக்கடி தருவதில்லை. நீங்கள் எழுத்தால் ஒரு சாம்ராஜுயத்தை கட்டி எழுப்பியுள்ளீர்கள்.அது காட்டிலிருந்து சென்னைக்கும், விஷ்ணுபுரத்திலிருந்து சென்னைக்கும், இதுமாதிரி பல கற்ப்பனையிலிருந்து, நிஜத்திற்க்குமான ஊசலாட்டம்.

Comments

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

கழுமாடன் - அறம் கடவுளுக்கும் மேல் அல்லவா? (ஜெயமோகன் சிறுகதை)

  கழுமாடன் கதையும் பீடம் கதையும் ஒருவகையில் ஒடுக்கப்பட்டவர்கள் தெய்வமாவதுதான். தன்னுடைய கோபம், வடுக்களுடன் ஒருவன் இறந்துபோனால் அது அப்படியே அழிந்து போகாது. மனித உடல் மக்கிவிடும் ஆனால் அவனது எண்ணங்கள் அழியாது மாடனாக வந்து ரத்தம் கேட்க்கும். தன் அதிகார பலத்தால் மிரட்டி பணிய வைக்க முயலுகிறாள் உயர் குடி பெண். அதற்க்கு இணங்கவில்லை என்றால் நாயகனின் அம்மாவை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறாள். வேறு வழியில்லாமல் அவனும் ஒத்துக்கொள்கிறான். இருவரும் மாட்டிகொள்ளும் போது, அவள் கைப் பிடித்துவிட்டாதாகச் சொல்லி தப்பிக்கப்பார்க்கிறாள். நாயகனுக்கு கழுவேற்றம் தண்டனையாகிறது.  கதையில் இரண்டு அதிர்ச்சியுறும் இடம் வருகிறது. ஒன்று அந்த கழுவேற்றும் ஒத்திகை மற்றது நாயகன் குருவனிடம் தான் அவளைத் தொடவில்லை ஆனாலும் கழுவேறுகிறேன் என்கிறான். இதில் இரண்டாவது சம்பவம்தான் பெரும் அதிர்ச்சி அடையவைக்கிறது. செய்யாத குற்றத்திற்க்காக அவன் கழுவேற்றம் அடைகிறான். காரணம் அவன் புலையன்.  அந்த இழிநிலை தாங்காமல் அவன் மாடனாகி ரத்த பழி வாங்கத் துடிக்கிறான். பீடம் கதையில் வரும் மாடன் அவன். அவன் கேட்ப்பது ரத்தமில்லை, அறம். அறம் கடவுளுக்கும் மேல