பிரிவின் வழி


நோம், என் நெஞ்சே; நோம், என் நெஞ்சே;
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல், நோம், என் நெஞ்சே.
-        ----      காமஞ்சேர் குளத்தார், குறுந்தொகை 04


பிரிவின் வழி கொடுமையானது. அதை எப்படி தாங்கிக் கொள்வதென்பது நிச்சயம் பிடிபடாத ரகசியம். மனதினுள் அது அணுப்பொழுதும் ஊறி வழியும் போது, அதை நினையாமல் உதறியேறிவதன்பது நடக்காதக் காரியம். எந்தக் காதல்தான் அமைதற்கு அமையாத காதல்? வழிதாளாமல் அவள் உள்ளம் பிதற்றுகிறது. அவன் எனக்கானவன், எனக்கு மட்டுமே ஆனவன். அதே போல் நான் அவளுக்கு உரியவள். அப்படிப்பட்ட காதலர் பிரிந்துவிட்டாரென்பது தாளமுடியாத துயரம்.

இரவெல்லாம் தூங்காமல் தலைவனை எண்ணி எண்ணி, அழுது சிவந்த கண்களது. உள்ளத்தின் வெம்மை தாங்காமல் கண்ணீர் சூடாகி வழிகிறது, வெம்மையான கண்ணீரைமட்டும் தாங்கிக் காத்திருக்கிறாள். அது இமையைச் சூடுகிறது. நோயால் நெஞ்சு படும் பாடு சொன்னால் புரியாது. அதனால் பிதற்றுகிறாள். தலைவன் வருவானோ என்ற ஏக்கம் மனதில். நோம்என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே!

Comments

Popular posts from this blog

குற்றமும், தண்டனையும்

கொடுக்கப்படவில்லை பறித்துக்கொள்ளப்பட்டது

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)