மழை பெய்ந்து ஓய்ந்த அடுத்த நாள், உச்சி வெய்யிலில் நண்பர்கள் ஐவர் மகேந்திரவாடியை நோக்கி இருசக்கர வாகனத்தில் கிளம்பினோம். தாம்பரத்திலிருந்து மண்ணிவாக்கம் வழியாக பெங்களூர் நெடுஞ்சாலையை திருப்பெரும்புதூரில் பிடித்தோம். கிட்டத்தட்ட நாற்ப்பது கி.மீட்டர் தூரம் அந்த சாலையிலேயே பயணித்தோம். காஞ்சிபுரத்தை இணைக்கும் சாலைக்கு அடுத்த கொஞ்ச நேரத்திலேயே வலதுபுறம் திரும்பி, கிராமப்புறச் சாலையின் வழி நகர முற்ப்படும் போதுதான் மதிய உணவைப் பற்றி எண்ணம் எழுந்தது. வேறு வழியின்றி நெற்க்கதிர்கள் பூத்துக்குலுங்கிய சாலையினூடே வாகனம் சீறிப்பாய்ந்தது.
உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனேகமாக எல்லோருக்கும் தலை வலிக்க ஆரம்பித்தது. பிள்ளையார்பட்டி கிராமத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, தண்ணீர்ப் பாட்டிலும், பிஸ்க்கட் பாக்கெட்டும் வாங்கி சாப்பிட்டோம். பக்கத்தில் ஹோட்டல் எங்கே என்று கேட்டதற்க்கு, இன்னும் மூன்று கி.மீட்டர் தூரத்தில் இருப்பதாக அங்கிருந்த விடலிகள் சொன்னனர். பிஸ்க்கட் வேண்டாமேன நண்பர் ஒருவர் இதைக் கேட்டு மறுத்துவிட்டார். கூகுள் மேப்தான் எங்களுக்கு வழிகாட்டி. மணப்பாக்கம் வந்ததும் சற்றே பெரிய ஊர் என்று தோன்ற வைத்தது, பட போஸ்டர்கள் மற்றும் கடைகளும்தான். மேப்பைப் பார்த்து குழம்பிவிட்டவர், இன்னும் ஒரு கி.மீட்டர்தான் என்று சொல்லவும் வண்டிகள் நிற்க்காமல் நகர்ந்தது. அதற்க்கு மற்றொரு காரணமும் உண்டு. வழியில் பார்த்த நான்கு ஹோட்டலும் பீப் பிரியாணி என்று முகப்பில் எழுதிப் போட்டிருந்தது.
கொஞ்ச தூரம் நகர்ந்த பிறகுதான் தெரிந்தது, இன்னும் ஆறு மைல் போகவேண்டுமென.
நா இன்னும் லெப்ட் திரும்ப ஒரு கி.மீட்டர்னு சொன்ன. கோயில இல்ல என்றார் நண்பர்.
அடப்பாவி ஏற்க்கனவே பசி மயக்கமா இருக்குது, இவ வேற படுத்தறானே என நொந்து கொள்ளவும், தார் சாலை முடியவும் சரியாக இருந்தது.
சட்டென முன்னால் போன வண்டி நின்றுகொள்ள, ஏன் எனக்கேட்டேன்.
முகத்தை சற்றே கோபமாக வைத்துக்கொண்ட நண்பர் சொன்னார், வலப்பக்கமா போகனும்.
வண்டி கற்க்களிலும், குழிகளிலும் குதித்துப்போனது. ஊர் முழுக்க நெற்ப்பயிர் பயிரிட்டு, பார்க்கவே செழிப்பாய் இருந்தது. வழி முழுக்க குளம்தான். நீர் ஊரைவிட்டு ஓடவே முடியாதுபோல.
மீண்டும் தார் சாலை ஆரம்பித்த கொஞ்ச தூரத்தில் வாகனத்தை நிறுத்தினர். திரும்பிப் பார்த்த போது, சின்ன பெயர் பலகையில் டிப்பன் மற்றும் லன்ச் என்று எழுதப்பட்டிருந்தது சற்றே அதிசியத்தை விளைவித்தது.
பக்கத்தில் விநாயகர் கோயில் என்றே நினைக்கிறேன், வீடுகள் ஒன்றும் அதிகமாக காணோம். இந்த கடை எப்படி ஓடும்?
சிக்கன் பிரியாணி மட்டும் தா இருக்காம். நாம போகலாம் என்றார் கடைக்குள் போய்விட்டு வந்த நண்பர்.
அட……ஏன் சிக்கன் பிடியாணி சாப்பிட மாண்டீங்களா? என்றேன்.
அதுக்கில்ல..கோயிலுக்கு போறோமில்ல அதான் என இழுத்தார்.
கருப்பணசாமி கோயிலுக்கு கெடா வேட்டி சாப்பிடறதில்லை. பசி வந்தா அதெல்லாம் பார்க்கக்கூடாது, எனச் சொல்லி கடைக்குள் நுழைந்தோம்.
சரியாக ஐந்துபேர் மட்டும் சாப்பிடுமளவு கடை இருந்தது. வெங்காயத்தை தயிரிலிட்டு, ஒரு தட்டில் பிரியாணியை வைத்து விழுங்கினோம். ஊர் பெயர் கோடம்பாக்கம் என அந்த ஹோட்டல் போர்டில் எழுதி இருந்ததைப் பார்த்து சிரித்துக்கொண்டோம். வெறும் நாற்ப்பது ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி அதிலும் இரண்டு பீஸ் வைத்துகொடுத்தது மிக்க மகிழ்ச்சி.
சற்றேறக் குறைய ஒரு கி.மீ தூரத்தில் சாலையிலிருந்து போகும் போதே கோயில் கண்களில் சிக்கியது. கம்பி வெளிகளால் சிறைபிடிக்கப்பட்டு கிடந்தது. நான்கு வாலிபர்கள் குகை கோயிலின் உள்ளே தாயம் விளையாடிக்கொண்டிருந்தது, ஒருவித ஆத்திரத்தை கிளப்பியது. வேறு வழியில்லை சகித்துக் கொள்வதைத் தவிர. தனியாக கிடந்த பெரிய பாறையின் உள்ளே செதுக்கி அந்த குகையை அமைத்திருக்கிறார்கள். ஒருவேளை பாறையை உருட்டி இங்கே கொண்டுவந்தார்களா? இல்லை இங்கேயே இருந்தா என சந்தேகம் வருமாறு இருந்தது.
இரண்டு தூண்கள் எண் பட்டக வடிவில் செதுக்கப்பட்டு அதன் மேலும், கீழும் தாமரை மலர்களை செதுக்கியிருந்தார்கள். இரண்டு தூண்கள் முகப்பில் செதுக்கப்பட்டு அதன் மேலே துதிக்கையை வளைத்தது போல காணக்கிடைத்தது. இரண்டு அடிவிட்டு அடுத்த தூண்கள் நேர் வரிசையில் முகப்பு தூண்களுக்கு இணையாக. அடுத்த இரண்டு அடியில் கற்ப்பகிரகம். கற்ப்பகிரக சுவரில் துவார பாலகர்கள். லட்சுமி நரசிம்மர் உள்ளே இருந்தார். கோயிலின் இடதுபக்க சுவரில் கல்வெட்டுக்கள் பிராமி வடிவில் காணக்கிடைக்கிறது.
கற்க்களாலும், செங்கற்க்களாலும், மரங்களாலும் கோயில்கள் தமிழகத்தில் கட்டப்பட்டிருந்தது. இவற்றில் ஏதாவது ஒன்றை உபயோகிய்த்தால் அதற்க்கு தூயது என்றும், இவற்றில் ஏதாவது இரண்டை உபயோகிய்த்தால் அதற்க்கு கலப்பு என்றும், இவற்றில் இரண்டுக்கு மேல் உபயோகிய்த்தால் அதற்க்கு பெருங்கலப்பு என கட்ட்ட கலை நூல்கள் விமானத்தைக் குறிப்பிடுகின்றன. இந்த கோயில்கள் எல்லாம் அழிந்துவிடக்கூடியவை. கற்க்களைக் குடைந்து பல்லவ மன்னர்கள் கட்டிய இவை இன்றும் நின்றுகொண்டிருப்பவை.
தமிழகத்தின் இருண்ட காலமேன அழைக்கப்படும் முதல் மூன்று நூற்றாண்டிற்க்கு பிறகு எழுச்சி பெற்ற பேரரசு இந்த பல்லவர்கள். அதில் பிற்க்காலப் பல்லவர்கள் மிகவும் சிறப்புற்று விளங்கினர். அதில் முதலாம் மகேந்திரவர்மன் முக்கியமானவன் (600-630) . அவன் தான் இந்த குடைவரைக் கோயில்களை முதன்முதலில் தமிழகத்தில் மண்டகப்பட்டு என்னும் இடத்தில் அமைத்தான். முதலில் இவன் சமண மதத்தை தழுவியும் பிறகு அப்பர் பெருமகானால் சைவனாக மாற்றப்பட்டான்.
சமண மதத்தைச் சேர்ந்த பிட்சுக்கள் குகைகளில் வசித்து வந்தனர். எழுத்தாளர் ஜெயமோகன் சொல்வது போல, அவர்கள் தங்கி கல்வி அளித்த இடத்திற்க்கு பெயர்தான் பள்ளி. அதனால்தான் பள்ளிக்கூடம் என்றே பெயர் வந்தது. கோயில் கட்டும் பழக்கம் திராவிடர்களுக்கு தொன்று தொட்டு வந்த ஒன்று. முதலில் அது இறந்தோர் கல்லறையாக இருந்து, பிறகு வணக்கத்திற்க்கு உரிய கோயிலாக உருமாறியது. சமணர்கள் அதனை பார்த்து கோயில் என்ற ஒன்றை தாங்கலும் அமைத்தனர். குகைகளிலே அவர்கள் தங்கி, கல்வி புகட்டி பிறகு கோயிலையும் அமைத்துக்கொண்டனர். மகேந்திரவர்மன் அதனைக் கண்டு, தானும் குகைக்கோயிலை அமைத்தான். பிறகு அது வளர்ச்சி அடைந்து தஞ்சாவூர் பெரிய கோயிலாய் திராவிட கலைக்கு மகுடமாய் விளங்குகிறது. இது பெருமளவு பிற்க்கால சோழர்களால் முன்னேடுக்கப்பட்டது.
சிறிது நேரம் கோயிலை சுற்றிப் பார்த்தோம். நண்பர்கள் புகைப்படமெடுத்தனர். துவார பாலகர்கள் சிலை திகிலமடைந்து கிடந்தது. தாயம் விளையாடும் அவர்களை முறைப்பது போல தோன்றிற்று. மகேந்திரவர்மனுக்கு மட்டும் தெரிந்தால் என்ன ஆவது?
அங்கிருந்து மாமண்டூர் முப்பத்தி எட்டு கி.மீட்டர் மட்டும் தான். போய்ச் சேர நாலரை மணி ஆகியிருந்தது. கூகிள் மேப் வழியில் ஊருக்குள் புகுந்தால் முட்டுச் சந்து. வீட்டின் உள்ளே இருந்த பாட்டி வலப்பக்கம் போகச் சொல்லி கைகாட்டினால். அது ஒத்தை அடிப்பாதை. வண்டியை அதில் செலுத்த, மண்ணில் மாட்டிக்கொண்டு, முனகி மண் பாதையை அடைந்தது. அது நேராக ஒரு அம்மன் சன்னதிக்கு கொண்டு சேர்த்தது. பக்கத்தில் வெளியிடப்பட்ட மலை தெரிந்தது ஆனால் போக வழி தெரியவில்லை. நல்ல வேளை இன்னோரு பாட்டி வந்து, கோயில் பிரகாரத்தை சுற்றி, கால்வாயை கடக்க வேண்டுமேன வழி காட்டினாள்.
நான்கு குகைவரைக் கோயில்கள் இருந்தது. முதலாவது கோயில் கிட்டத்தட்ட மகேந்திரவாடியை ஒத்திருந்தது. பெரிய வேறுபாடுகள் ஒன்றும் இல்லை. அதன் முகப்பில் மட்டும் வண்ண தூரிகையில் அலங்காரம் பண்ணப்பட்டுயிருந்தது, பிற்க்காலத்து வேலைப்பாடக இருக்கலாம். கிட்ட்த்தட்ட அது அழிந்துவிட்டிருந்தது. கருவறை காலியாக இருந்தது.
அடுத்த கோயில் சற்றே பெரியதாக இருந்தது. மூன்று கருவறைகள் கொண்டது. நடுவில் சிவ லிங்கமும், இரு கருவரையும் காலியாக கிடந்தது. குறிப்பிடும் படியாக இந்த கோயிலின் கருவறை படிக்கட்டுகள் தும்பிக்கையின் வடிவில் இருபுறமும் செதுக்கப்பட்டிருந்தது. பிற்க்கால படிக்கட்டுகளுக்கு இது ஒரு அடிப்படை ஆகும். தீர்த்தம் செல்ல குழி கற்ப்ப கிரகத்திலிருந்து, முகப்புவரை காணக்கிடைக்கிறது. மகேந்திரவர்மனின் கல்வெட்டு ஒன்று இதன் இடதுபுற சுவர்களில் காணக்கிடைக்கிறது. அவன் மத்தவிலாசம் என்னும் நூலை இயற்றியதற்க்கான சான்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வடமொழியில் அவன் வல்லவனாக திகழ்ந்தான். பிற்க்கால பல்லவர்கள் காலத்தில்தான் கல்வெட்டுகளில் தமிழ் மொழி உபயோகப்படுத்த ஆரம்பிக்கப்பட்டது.
மூன்றாவது கோயில் இன்னும் முழுமை பெறாத நிலையில் இருக்கிறது. அதிலும் மூன்று கற்ப்பகிரகம் இருக்கிறது, மேலும் இருக்கலாம். கோயிலைச் சுற்றி வருமாறு கோயிலை குடைய முற்ப்பட்டு அது பாதியில் நிறுத்தப்பட்டது போல இருக்கிறது. மற்ற கோயில்கள் பாறைகளைக் குடைந்து கற்ப்ப கிரகத்தோடு நிறுத்திவிடுவார்கள். நான்கு கோயில்களிலேயே இது பெரிய கோயில். ஆனால் தூண்கள் எல்லாம் சிதைந்து கிடக்கிறது.
நான்காவது கோயில் இரண்டு தூண்கள் குடைந்துவிட்டு, மூன்று கற்ப்பகிரகம் குடைய ஆரம்பிக்கப்பட்ட உடன் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது. இது அம்மன்ன்னின் கடைசி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் சொன்னதுதான் ஞாபகத்திற்க்கு வருகிறது. நமது மன்னர்கள் நமக்கு விட்டுச்சென்ற சொத்து என்றால், இரண்டு. ஒன்று கோயில்கள் மற்றது குளங்கள். ஆம் உண்மைதான். தமிழகமே காய்ந்துகிடக்க. இந்த பகுதியில் மட்டும் பச்சை ஒளிர்கிறதேன்றால். நான் கடந்து வந்த குளங்களே அன்றி வேறுதுமில்லை. மகேந்திடரவாடியில் மகேந்திரதாடகம் அவன் தருவித்த முக்கிய குளம் என்றால் மாற்றுக் கருத்தில்லை.
மணி ஆற்றையை நெருங்கிவிட்டிருந்த்து. வீடு வந்து சேர எட்டரை மணியானது.
குறிப்புக்கள்:
பல்லவ மன்னர்கள் – இராச மாணிக்கனார்.
உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனேகமாக எல்லோருக்கும் தலை வலிக்க ஆரம்பித்தது. பிள்ளையார்பட்டி கிராமத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, தண்ணீர்ப் பாட்டிலும், பிஸ்க்கட் பாக்கெட்டும் வாங்கி சாப்பிட்டோம். பக்கத்தில் ஹோட்டல் எங்கே என்று கேட்டதற்க்கு, இன்னும் மூன்று கி.மீட்டர் தூரத்தில் இருப்பதாக அங்கிருந்த விடலிகள் சொன்னனர். பிஸ்க்கட் வேண்டாமேன நண்பர் ஒருவர் இதைக் கேட்டு மறுத்துவிட்டார். கூகுள் மேப்தான் எங்களுக்கு வழிகாட்டி. மணப்பாக்கம் வந்ததும் சற்றே பெரிய ஊர் என்று தோன்ற வைத்தது, பட போஸ்டர்கள் மற்றும் கடைகளும்தான். மேப்பைப் பார்த்து குழம்பிவிட்டவர், இன்னும் ஒரு கி.மீட்டர்தான் என்று சொல்லவும் வண்டிகள் நிற்க்காமல் நகர்ந்தது. அதற்க்கு மற்றொரு காரணமும் உண்டு. வழியில் பார்த்த நான்கு ஹோட்டலும் பீப் பிரியாணி என்று முகப்பில் எழுதிப் போட்டிருந்தது.
கொஞ்ச தூரம் நகர்ந்த பிறகுதான் தெரிந்தது, இன்னும் ஆறு மைல் போகவேண்டுமென.
நா இன்னும் லெப்ட் திரும்ப ஒரு கி.மீட்டர்னு சொன்ன. கோயில இல்ல என்றார் நண்பர்.
அடப்பாவி ஏற்க்கனவே பசி மயக்கமா இருக்குது, இவ வேற படுத்தறானே என நொந்து கொள்ளவும், தார் சாலை முடியவும் சரியாக இருந்தது.
சட்டென முன்னால் போன வண்டி நின்றுகொள்ள, ஏன் எனக்கேட்டேன்.
முகத்தை சற்றே கோபமாக வைத்துக்கொண்ட நண்பர் சொன்னார், வலப்பக்கமா போகனும்.
வண்டி கற்க்களிலும், குழிகளிலும் குதித்துப்போனது. ஊர் முழுக்க நெற்ப்பயிர் பயிரிட்டு, பார்க்கவே செழிப்பாய் இருந்தது. வழி முழுக்க குளம்தான். நீர் ஊரைவிட்டு ஓடவே முடியாதுபோல.
மீண்டும் தார் சாலை ஆரம்பித்த கொஞ்ச தூரத்தில் வாகனத்தை நிறுத்தினர். திரும்பிப் பார்த்த போது, சின்ன பெயர் பலகையில் டிப்பன் மற்றும் லன்ச் என்று எழுதப்பட்டிருந்தது சற்றே அதிசியத்தை விளைவித்தது.
பக்கத்தில் விநாயகர் கோயில் என்றே நினைக்கிறேன், வீடுகள் ஒன்றும் அதிகமாக காணோம். இந்த கடை எப்படி ஓடும்?
சிக்கன் பிரியாணி மட்டும் தா இருக்காம். நாம போகலாம் என்றார் கடைக்குள் போய்விட்டு வந்த நண்பர்.
அட……ஏன் சிக்கன் பிடியாணி சாப்பிட மாண்டீங்களா? என்றேன்.
அதுக்கில்ல..கோயிலுக்கு போறோமில்ல அதான் என இழுத்தார்.
கருப்பணசாமி கோயிலுக்கு கெடா வேட்டி சாப்பிடறதில்லை. பசி வந்தா அதெல்லாம் பார்க்கக்கூடாது, எனச் சொல்லி கடைக்குள் நுழைந்தோம்.
சரியாக ஐந்துபேர் மட்டும் சாப்பிடுமளவு கடை இருந்தது. வெங்காயத்தை தயிரிலிட்டு, ஒரு தட்டில் பிரியாணியை வைத்து விழுங்கினோம். ஊர் பெயர் கோடம்பாக்கம் என அந்த ஹோட்டல் போர்டில் எழுதி இருந்ததைப் பார்த்து சிரித்துக்கொண்டோம். வெறும் நாற்ப்பது ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி அதிலும் இரண்டு பீஸ் வைத்துகொடுத்தது மிக்க மகிழ்ச்சி.
சற்றேறக் குறைய ஒரு கி.மீ தூரத்தில் சாலையிலிருந்து போகும் போதே கோயில் கண்களில் சிக்கியது. கம்பி வெளிகளால் சிறைபிடிக்கப்பட்டு கிடந்தது. நான்கு வாலிபர்கள் குகை கோயிலின் உள்ளே தாயம் விளையாடிக்கொண்டிருந்தது, ஒருவித ஆத்திரத்தை கிளப்பியது. வேறு வழியில்லை சகித்துக் கொள்வதைத் தவிர. தனியாக கிடந்த பெரிய பாறையின் உள்ளே செதுக்கி அந்த குகையை அமைத்திருக்கிறார்கள். ஒருவேளை பாறையை உருட்டி இங்கே கொண்டுவந்தார்களா? இல்லை இங்கேயே இருந்தா என சந்தேகம் வருமாறு இருந்தது.
இரண்டு தூண்கள் எண் பட்டக வடிவில் செதுக்கப்பட்டு அதன் மேலும், கீழும் தாமரை மலர்களை செதுக்கியிருந்தார்கள். இரண்டு தூண்கள் முகப்பில் செதுக்கப்பட்டு அதன் மேலே துதிக்கையை வளைத்தது போல காணக்கிடைத்தது. இரண்டு அடிவிட்டு அடுத்த தூண்கள் நேர் வரிசையில் முகப்பு தூண்களுக்கு இணையாக. அடுத்த இரண்டு அடியில் கற்ப்பகிரகம். கற்ப்பகிரக சுவரில் துவார பாலகர்கள். லட்சுமி நரசிம்மர் உள்ளே இருந்தார். கோயிலின் இடதுபக்க சுவரில் கல்வெட்டுக்கள் பிராமி வடிவில் காணக்கிடைக்கிறது.
கற்க்களாலும், செங்கற்க்களாலும், மரங்களாலும் கோயில்கள் தமிழகத்தில் கட்டப்பட்டிருந்தது. இவற்றில் ஏதாவது ஒன்றை உபயோகிய்த்தால் அதற்க்கு தூயது என்றும், இவற்றில் ஏதாவது இரண்டை உபயோகிய்த்தால் அதற்க்கு கலப்பு என்றும், இவற்றில் இரண்டுக்கு மேல் உபயோகிய்த்தால் அதற்க்கு பெருங்கலப்பு என கட்ட்ட கலை நூல்கள் விமானத்தைக் குறிப்பிடுகின்றன. இந்த கோயில்கள் எல்லாம் அழிந்துவிடக்கூடியவை. கற்க்களைக் குடைந்து பல்லவ மன்னர்கள் கட்டிய இவை இன்றும் நின்றுகொண்டிருப்பவை.
தமிழகத்தின் இருண்ட காலமேன அழைக்கப்படும் முதல் மூன்று நூற்றாண்டிற்க்கு பிறகு எழுச்சி பெற்ற பேரரசு இந்த பல்லவர்கள். அதில் பிற்க்காலப் பல்லவர்கள் மிகவும் சிறப்புற்று விளங்கினர். அதில் முதலாம் மகேந்திரவர்மன் முக்கியமானவன் (600-630) . அவன் தான் இந்த குடைவரைக் கோயில்களை முதன்முதலில் தமிழகத்தில் மண்டகப்பட்டு என்னும் இடத்தில் அமைத்தான். முதலில் இவன் சமண மதத்தை தழுவியும் பிறகு அப்பர் பெருமகானால் சைவனாக மாற்றப்பட்டான்.
சமண மதத்தைச் சேர்ந்த பிட்சுக்கள் குகைகளில் வசித்து வந்தனர். எழுத்தாளர் ஜெயமோகன் சொல்வது போல, அவர்கள் தங்கி கல்வி அளித்த இடத்திற்க்கு பெயர்தான் பள்ளி. அதனால்தான் பள்ளிக்கூடம் என்றே பெயர் வந்தது. கோயில் கட்டும் பழக்கம் திராவிடர்களுக்கு தொன்று தொட்டு வந்த ஒன்று. முதலில் அது இறந்தோர் கல்லறையாக இருந்து, பிறகு வணக்கத்திற்க்கு உரிய கோயிலாக உருமாறியது. சமணர்கள் அதனை பார்த்து கோயில் என்ற ஒன்றை தாங்கலும் அமைத்தனர். குகைகளிலே அவர்கள் தங்கி, கல்வி புகட்டி பிறகு கோயிலையும் அமைத்துக்கொண்டனர். மகேந்திரவர்மன் அதனைக் கண்டு, தானும் குகைக்கோயிலை அமைத்தான். பிறகு அது வளர்ச்சி அடைந்து தஞ்சாவூர் பெரிய கோயிலாய் திராவிட கலைக்கு மகுடமாய் விளங்குகிறது. இது பெருமளவு பிற்க்கால சோழர்களால் முன்னேடுக்கப்பட்டது.
சிறிது நேரம் கோயிலை சுற்றிப் பார்த்தோம். நண்பர்கள் புகைப்படமெடுத்தனர். துவார பாலகர்கள் சிலை திகிலமடைந்து கிடந்தது. தாயம் விளையாடும் அவர்களை முறைப்பது போல தோன்றிற்று. மகேந்திரவர்மனுக்கு மட்டும் தெரிந்தால் என்ன ஆவது?
அங்கிருந்து மாமண்டூர் முப்பத்தி எட்டு கி.மீட்டர் மட்டும் தான். போய்ச் சேர நாலரை மணி ஆகியிருந்தது. கூகிள் மேப் வழியில் ஊருக்குள் புகுந்தால் முட்டுச் சந்து. வீட்டின் உள்ளே இருந்த பாட்டி வலப்பக்கம் போகச் சொல்லி கைகாட்டினால். அது ஒத்தை அடிப்பாதை. வண்டியை அதில் செலுத்த, மண்ணில் மாட்டிக்கொண்டு, முனகி மண் பாதையை அடைந்தது. அது நேராக ஒரு அம்மன் சன்னதிக்கு கொண்டு சேர்த்தது. பக்கத்தில் வெளியிடப்பட்ட மலை தெரிந்தது ஆனால் போக வழி தெரியவில்லை. நல்ல வேளை இன்னோரு பாட்டி வந்து, கோயில் பிரகாரத்தை சுற்றி, கால்வாயை கடக்க வேண்டுமேன வழி காட்டினாள்.
நான்கு குகைவரைக் கோயில்கள் இருந்தது. முதலாவது கோயில் கிட்டத்தட்ட மகேந்திரவாடியை ஒத்திருந்தது. பெரிய வேறுபாடுகள் ஒன்றும் இல்லை. அதன் முகப்பில் மட்டும் வண்ண தூரிகையில் அலங்காரம் பண்ணப்பட்டுயிருந்தது, பிற்க்காலத்து வேலைப்பாடக இருக்கலாம். கிட்ட்த்தட்ட அது அழிந்துவிட்டிருந்தது. கருவறை காலியாக இருந்தது.
அடுத்த கோயில் சற்றே பெரியதாக இருந்தது. மூன்று கருவறைகள் கொண்டது. நடுவில் சிவ லிங்கமும், இரு கருவரையும் காலியாக கிடந்தது. குறிப்பிடும் படியாக இந்த கோயிலின் கருவறை படிக்கட்டுகள் தும்பிக்கையின் வடிவில் இருபுறமும் செதுக்கப்பட்டிருந்தது. பிற்க்கால படிக்கட்டுகளுக்கு இது ஒரு அடிப்படை ஆகும். தீர்த்தம் செல்ல குழி கற்ப்ப கிரகத்திலிருந்து, முகப்புவரை காணக்கிடைக்கிறது. மகேந்திரவர்மனின் கல்வெட்டு ஒன்று இதன் இடதுபுற சுவர்களில் காணக்கிடைக்கிறது. அவன் மத்தவிலாசம் என்னும் நூலை இயற்றியதற்க்கான சான்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வடமொழியில் அவன் வல்லவனாக திகழ்ந்தான். பிற்க்கால பல்லவர்கள் காலத்தில்தான் கல்வெட்டுகளில் தமிழ் மொழி உபயோகப்படுத்த ஆரம்பிக்கப்பட்டது.
மூன்றாவது கோயில் இன்னும் முழுமை பெறாத நிலையில் இருக்கிறது. அதிலும் மூன்று கற்ப்பகிரகம் இருக்கிறது, மேலும் இருக்கலாம். கோயிலைச் சுற்றி வருமாறு கோயிலை குடைய முற்ப்பட்டு அது பாதியில் நிறுத்தப்பட்டது போல இருக்கிறது. மற்ற கோயில்கள் பாறைகளைக் குடைந்து கற்ப்ப கிரகத்தோடு நிறுத்திவிடுவார்கள். நான்கு கோயில்களிலேயே இது பெரிய கோயில். ஆனால் தூண்கள் எல்லாம் சிதைந்து கிடக்கிறது.
நான்காவது கோயில் இரண்டு தூண்கள் குடைந்துவிட்டு, மூன்று கற்ப்பகிரகம் குடைய ஆரம்பிக்கப்பட்ட உடன் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது. இது அம்மன்ன்னின் கடைசி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் சொன்னதுதான் ஞாபகத்திற்க்கு வருகிறது. நமது மன்னர்கள் நமக்கு விட்டுச்சென்ற சொத்து என்றால், இரண்டு. ஒன்று கோயில்கள் மற்றது குளங்கள். ஆம் உண்மைதான். தமிழகமே காய்ந்துகிடக்க. இந்த பகுதியில் மட்டும் பச்சை ஒளிர்கிறதேன்றால். நான் கடந்து வந்த குளங்களே அன்றி வேறுதுமில்லை. மகேந்திடரவாடியில் மகேந்திரதாடகம் அவன் தருவித்த முக்கிய குளம் என்றால் மாற்றுக் கருத்தில்லை.
மணி ஆற்றையை நெருங்கிவிட்டிருந்த்து. வீடு வந்து சேர எட்டரை மணியானது.
குறிப்புக்கள்:
பல்லவ மன்னர்கள் – இராச மாணிக்கனார்.
Comments
Post a Comment