Skip to main content

ஈஸா வாஸ்ய உபநிஷத் - எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதம்

அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நலம் என எண்ணுகிறேன். அடுத்தடுத்த இரண்டு சந்திப்புகளுக்கான வாய்ப்புகள் கிட்டியும் அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலை வருத்தம் அளிக்கிறது.

இந்தக் கடிதம் எழுதத் தூண்டிய புத்தகம், ஈஸா வாஸ்ய உபநிஷத்ஓர் அனுபவம். அதன் முதல் மந்திரத்தை மட்டும் படித்திருந்தேன். அதனோடு பொருத்திப் பார்க்க்கூடிய ஓர் அழகான படிமம் இன்று கிட்டியது.

நான் ஐசி என்ஜின் வகுப்பில் இருந்தேன். அப்போது பேராசிரியர் என்ஜினில் எப்படி எரிபொருள் தீப் பற்றி எறிகிறது என்று விளக்கிக்கொண்டிருந்தார். முதலில் ஸ்ப்பார்க் பிளக்கில் தீ சுவாலை உண்டாகும். அது பிஸ்டனுக்கும், சிலின்டர் கெட்டிற்க்கும் இடையில் அடைபட்டிருக்கும் எறிபொருளை பற்ற வைக்கும். பின்பு அந்த எரிபொருள் சூடாகி வெடிப்பதால்,  அது பிஸ்டனை கீழ் நோக்கித் தள்ளி நமக்குச் சக்தி கொடுக்கிறது.


பெட்ரோல் என்ஜின் என்றால் முதலில் ஸ்ப்பார்க் பிளக்கில் தீ சுவாலையை உருவாக்கி, அது நகர்ந்து முன்நோக்கி வரும். தீ சுவாலை முன்னால் நகரும் போது அதற்க்குப் பின்னால் உள்ளதேல்லாம் எறிந்த வாயு, முன்னால் இருப்பது எறிவதற்க்காக காத்து நிற்க்கும் எரிபொருள். நடுவில் அது எறித்துக்கொண்டிருக்கிறது. இந்தப் படிமம், என்னை முதல் மந்திரத்துடன் பிணைத்தது.


                                                  
எறிந்த வாயுவெல்லாம் இறந்த காலம். எறிவதற்க்காக காத்திருக்கிற எரிபொருள் எதிர்காலம். இந்த கணம் எறிகிறதே அதுதான் நிகழ்காலம். எறிக்கிற அதுதான்ஈஸா” . அது எல்லா எறிபொருளிலும் புதைந்து உள்ளது. எறிகிற நேரம் வந்ததும், அது தன் சக்தியைப் பெற்று எறிந்து அடுத்த நிலைக்கு அதாவது வெளியேற்றப்பட வேண்டிய வாயுவாக மாறிவிடுகிறது. அதே எரிபொருள்தான், ஆனால் இப்போது நிலை மாறிவிட்டது. மாற்றம் மட்டும் நிரந்தரமானது.  

கிடைத்த சக்தி இருக்கிறதே அது என்னால்தான் என எரிபொருள் சொந்தம் கொண்டாட முடியாது அல்லது கர்வம் கொள்ள முடியாது. காரணம் தீசுவாலை (ஈஸா) பற்றிக்கொண்டால்தான் சூடாகி வெடித்து சக்தியை தர முடியும். இல்லை என்றால் அது வெறும் எறிபொருளாய் காலம்புறாமும் இருந்துவிட வேண்டியதுதான். ஒருவேளை எறிந்து முடித்துவிட்டால், அதற்க்கான சக்தியை இழந்துவிட்டதாய் அர்த்தம்.

தான் என்கின்ற கர்வத்தை விட்டு ஒழித்தால்தான், ஆனந்தமாக இந்த சக்தியை அனுபவிக்க முடியும். ஆம் இந்த சக்தியாருடையது? நமக்குள்ளே ஒழிந்திருக்கிற ஈஸாதானே.

ஈஸா வாஸ்யம் இதம் சர்வம்
யத் கின்கா ஜகத்யம் ஜகத்
தேனா த்யக்தேனா புன்ஜிதா
மா க்ராதா காஷ்ய ஸ்வித்தானம்.

-             -  ஈஸா வாஸ்ய உபநிஷத்

நன்றி உங்களுக்கும், சூத்ரதாரிக்கும், சுவாமிஜி வியாச பிரசாத் மற்றும் நித்திய சைத்தன்ய யதி அவர்களுக்கும்.

என் புரிதலில் ஏதேனும் தவறிருந்தால் திருத்தவும்.

நன்றி மறுபடியும்,

மகேந்திரன்.

Comments

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

கழுமாடன் - அறம் கடவுளுக்கும் மேல் அல்லவா? (ஜெயமோகன் சிறுகதை)

  கழுமாடன் கதையும் பீடம் கதையும் ஒருவகையில் ஒடுக்கப்பட்டவர்கள் தெய்வமாவதுதான். தன்னுடைய கோபம், வடுக்களுடன் ஒருவன் இறந்துபோனால் அது அப்படியே அழிந்து போகாது. மனித உடல் மக்கிவிடும் ஆனால் அவனது எண்ணங்கள் அழியாது மாடனாக வந்து ரத்தம் கேட்க்கும். தன் அதிகார பலத்தால் மிரட்டி பணிய வைக்க முயலுகிறாள் உயர் குடி பெண். அதற்க்கு இணங்கவில்லை என்றால் நாயகனின் அம்மாவை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறாள். வேறு வழியில்லாமல் அவனும் ஒத்துக்கொள்கிறான். இருவரும் மாட்டிகொள்ளும் போது, அவள் கைப் பிடித்துவிட்டாதாகச் சொல்லி தப்பிக்கப்பார்க்கிறாள். நாயகனுக்கு கழுவேற்றம் தண்டனையாகிறது.  கதையில் இரண்டு அதிர்ச்சியுறும் இடம் வருகிறது. ஒன்று அந்த கழுவேற்றும் ஒத்திகை மற்றது நாயகன் குருவனிடம் தான் அவளைத் தொடவில்லை ஆனாலும் கழுவேறுகிறேன் என்கிறான். இதில் இரண்டாவது சம்பவம்தான் பெரும் அதிர்ச்சி அடையவைக்கிறது. செய்யாத குற்றத்திற்க்காக அவன் கழுவேற்றம் அடைகிறான். காரணம் அவன் புலையன்.  அந்த இழிநிலை தாங்காமல் அவன் மாடனாகி ரத்த பழி வாங்கத் துடிக்கிறான். பீடம் கதையில் வரும் மாடன் அவன். அவன் கேட்ப்பது ரத்தமில்லை, அறம். அறம் கடவுளுக்கும் மேல