Tuesday, May 10, 2016

திரி

திரி கொழுத்தப்பட்ட பட்டாசு
வெடித்தால்,
வண்ண ஓவியங்களாய் மலர்வாள்
ஆனால் வெடிச்சத்தம் மட்டும் உள்ளேதான்.
வெடிக்காவிடில்,
எப்படியும் கொஞ்ச நேரத்தில் நடக்கும்.
காதல் திரி கொழுத்தப்பட்ட பட்டாசு.

Friday, April 15, 2016

கம்பராமயாணம் - இருவினை வெள்ளம்

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி,
   மருதத்தை முல்லை ஆக்கி,
புல்லிய நெய்தல்தன்னைப் பெரு
   அரு மருதம் ஆக்கி,
எல்லையில் பொருள்கள் எல்லாம்
   இடை தடுமாறும் நீரால்,
செல்லுறு கதியின் செல்லும்வினை
   என, சென்றது அன்றே
.

முல்லை நிலத்தை குறிஞ்சி
நிலமாக்கியும்;  மருத நிலத்தை முல்லை நிலமாகச்   செய்தும்;புன்புலமாகிய
நெய்தல்  நிலத்தை; நிகரில்லாத மருத நிலமாகச்  செய்தும்; (பல்வேறு
நிலங்களின்)  அளவற்ற   பண்டங்களை  யெல்லாம்; தத்தம் இடத்தை விட்டு  வேறு நிலத்துக்குக் கொண்டு செல்லும்
தன்மையால்; செலுத்தப்படுகின்ற
போக்கிலே   இழுத்துப்  போகின்ற; இருவினைகள் போல (அந்த வெள்ளம்) சென்றது.

பொதுவாக கவிதைகளை அல்லது இலக்கியங்களை படிக்கும் போது, அவற்றை சுருக்கக்கூடாது. அவைகள் வெடிகுண்டைப் போல. விழுந்ததும் வெடித்து சிதறி பெருக வேண்டும். தொடர்ந்து கவிதைகளைப் பற்றி சிந்திப்பதால் அது சாத்தியப்படும். 

நாம் செயய்யும் செயலால் தொடர்ந்து நம் நிலைகள் உயர்ந்து தெய்வ நிலையை அடையலாம் அல்லது நேர்மாறாகவும் நடக்கலாம். அது நம் செயலைப் பொறுத்தது. இங்கு நதியை வினையோடு பொறுத்தியது மிக அற்ப்புதம். குறிஞ்சியோ, முல்லையோ எந்த வித நிலத்தின் பொருளும் கடலைச் செறுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. அது போல மனிதன் எல்லா வழிகளிலூம் ( பக்தி, ஞான இன்னும் வேறு மார்க்கங்களில்) கடவுளை அடையலாம். எல்லா விதமான வேற்றுமைகளும் ஏற்று கொள்ளப்படும். இங்குதான் இந்தியாவின் மையபுள்ளி ஆரம்பிக்கிறது. அதுதான் விடுதலை. இன்னும் கற்ப்பனையை விரித்தால் விளங்கும்.

Thursday, April 14, 2016

கம்பராமயாணம் -மழைத் தாரையின் தோற்றம்

.
புள்ளி மால் வரை பொன் எனல் நோக்கி, வான்,
வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள்,
உள்ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும் அவ்
வள்ளியோரின், வழங்கின
-மேகமே.

புள்ளி மால் என்பது இமையமலை. அது பொன் போல இருந்தது. வானோர் அதனை அடையும் பொருட்டு வெள்ளி விழுதுகளை மலைகளுக்கு இடையே செலுத்தினர். பனிமலையான இமையமலை மீது மாலை சூரிய கதிர்கள் பட்டு பொண் போல மின்னும். மேகங்கள் பனியை கொட்டும். அதைக் கண்டு கவிஞன் தன் கற்ப்பனையை விரிக்கிறான்.

இங்கு கற்ப்பனையை விரித்தல் என்பது மிக முக்கியமான ஒன்று. இதற்க்கு சிறந்த உதாரணம் குழந்தைகள். சின்ன டப்பாவை குக்கராகவும், மண்ணை சோறாகவும் கற்ப்பனை செய்துகொள்கிறது, பின்பு அதே மண்ணை குழப்பாக மாற்றி கொள்கிறது. ஆனால் நாம் அன்றாட வாழ்வில் அதனை தொலைத்து கொண்டிருக்கிறோம். இயந்திரமானோம். சற்று சிந்தித்தால் விளங்கும்.







Wednesday, April 13, 2016

கம்பராமாயணம் -விலை மகளிர் : வெள்ளம்


தலையும் ஆகமும் தாளும் தழீஇ, அதன்
நிலை நிலாது, இறை நின்றது போலவே,
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்
விலையின் மாதரை ஒத்தது - அவ் வெள்ளமே.
 
விளக்கம் :
விலை    மாதர்     காமுகரது
பொருள்களைக்  கவருமளவும்  அவர்களைத் தழுவிக்     காண்டிருந்து,
கவர்ந்தவாஎறே   விரைவில்  விட்டு  நீங்குதல்  போல,    வெள்ளமும்
மலையில்  உள்ள  பொருள்களை  யெல்லாம் வாரிக்   கொள்ளுமளவும்
மலையைத்  தழுவிக்  கொண்டிருந்தது.  வாரிக் கொண்டவாறே   விட்டு
நீங்கிற்று’ எனச் சிலேடை விளக்கம் தருவர் காஞ்சி இராமசாமி நாயுடு.

கம்பனை புரிந்து கொள்ள சில முயற்சியை முன் வைக்கிறேன். 

இந்த கவிதையை படித்த எல்லோருக்கும் வரும் சந்தேகம், எப்படி மலையில் ஓடும் வெள்ளத்தை விலை மாதரோடு ஒப்பிடலாம்? வெள்ளம் என்பது புனிதமானது, உயிர்களை செனிக்க வைக்கிறது. ஏன் நதிக்கரை ஓரம்தான் நாகரிகம் தோன்றி, வளர்ந்தது. அப்படியிருக்க இது தவறான ஒப்பிடா? 
எப்போதுமே ஒரு ஒப்பீடுக்கு சென்றால் அதன் காலகட்டத்தை கணக்கில் கொள்ள வேண்டும். இல்லை என்றால் தவறான சித்திரம்தான் கிட்டும். நம் கணக்குப்படி வெள்ளம் என்பது வளத்தை குறிக்கிறது. அதே போல் காமம் என்பதும் வளத்தை சுட்டும் ஒரு குறீயீடாக பயன்படுத்தப்பட்டது. உயிர்கள் செனிப்பதற்க்கான காரணமே அதுதான். அந்த காலத்தில் காமத்தை போற்றி  பாடினர், சிலை வடித்தனர். இதன் பொருட்டு கம்பன் விலை மகளிரையும், வெள்ளத்தையும் இணைத்து கவிதை படித்தான். 

சற்று உங்கள் சிந்தனைகளை வளரவிட்டு யோசிங்கள், ஏன் கோவிலில் நிர்வான சிலைகள் இருக்கிறதேன்பது விளங்கும். 


Monday, March 14, 2016

கற்பனைக்கும் நிஜத்திற்க்குமான ஊசலாட்டம் - ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு


ஜெவை சந்தித்தால் இழந்தது ஒரு சோப்பு டப்பா, துண்டு மற்றும் அன்டர்வேர் (அதை அடக்கம் செய்தவர்களுக்கு நன்றி கூற கடைமைபட்டுள்ளேன்). பெற்றது சில திட்டுக்கள், வாழ்க்கையின் உன்னத நிமிடங்கள், நிறைய சந்தோசம், இலக்கியம், அரசியல், கேளிக்கை இன்னும் பல. ஒருவித பயம் காரணமாகவே இந்த இன்னும் பல என்ற வார்த்தையை பள்ளியிலிருந்து பயண்படுத்துகிறேன். நானும் எனது நன்பர்களும் அப்துல் கலாம் அவர்களை சந்திக்கலாம் என முடிவெடுத்து கடந்த வருடம் ஜுலை முப்பதாம் தேதி அவரது ஊருக்கு சென்றோம். அவரை கண்டதும் கண்கள் கலங்கிவிட்டது, ஒருவித வெறுமை உணர்வுக்கு ஆளானோம். உடனே நாங்கள் ஒரு தீர்மானத்திற்க்கு வந்தோம். யார்யாரையேல்லாம் கொண்டாடுகிறோமோ அவர்களை சந்திப்பது என்று. அந்த வரிசையில் முதலில் ஜெ இருந்தார். அதை நண்பர்களும் சத்தியமாக முழுமனதுடன் ஏற்றுக்கொண்டனர். 
நண்பர்களே! என அழைப்பது இல்லை இல்லை வரவேற்ப்பதும், அல்ல என மறுதளிப்பதும்மென ஜெவின் பேச்சுக்கள் மனதிலே ஓடியது. கிரியை நான் ஜெ என்றே ஊகித்ததும், அவருக்கு ஒரு பிம்பத்தை என்னுள்ளே தந்திருந்தது. இரயிலிலிருந்து அவசரமாய் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்க்கு நுழையும் போது ஜெவின் குரல் கேட்டது. நவீன இலக்கியத்தின் அறிமுகம் கிட்டி காட்டுக்குள்ளே சென்றுவிட்டேன். காட்டை சுற்றி பார்க்கும் போதுதான் தெரிந்தது அது வளருமென்று. நாளுக்கு நாள் அது விரிந்து கொண்டே செல்கிறது அகத்திலும், புறத்திலும். சரி ஊர் பக்கம் போய் பாக்கலாம் என்று முடிவெடுத்து விஷ்ணுபுரம் போகலானேன். காட்டிலே இருந்து பழகி, ஊருக்குள் செல்வது இயலாத காரியமென்றே தோன்றிற்று.வழியில் அறமுன்னு சிற்றூர் கண்டு, கொஞ்ச நாள் வசித்து, மீண்டும் பயணப்பட்டேன். ஜெவின் குரல் அந்தரங்கமாக என்னுள்ளே ஒலித்துக்கொண்டேயிருந்தது. வாசலில் தலைப்பட்ட என்னை வரவேற்றார்கள். என்னுள்ளே ஒலித்த கற்ப்பனைக் குரலும், வெளியே ஒலித்த நிஜக்குரலுமாய் ஜெ. மனம் ஊசலாடியது. 
மதமும் உலக வரலாறும் பிண்ணி அவரது வாயிலிருந்து கொட்டியது. திடுமென கோபம் கொண்டு சபை விவாதத்தை பற்றி விளக்கினார். விவாதம் கருப்பொருளிருந்து விலகிவிட்டதென்பது அவரது கோபம்.ஆங்கில நாவலில் ஆரம்பித்து ஆங்கில நாவலிலே வலம் வந்தது விவாதம். நல்லவேளை சாப்பாடும் வந்தது. ஓர் எழுத்தாளனை சந்தித்து அவரது படைப்பை பற்றி மிக குறைவாக பேசியது ஒரு மனக்குறையே. 
சாப்பிட்டு முடித்ததும் கட்டுரை படிக்க கிட்டியது. ஒன்றாம் வகுப்பிலிருந்து படிக்கிறோம், இன்னும் எப்படி படிப்பதென்று தெரியவில்லை. எப்படி படிப்பதென்றும், கவனிப்பதென்றும் ஆழமாய் விவரித்தார். பின்பு தலைவர்களைப் பற்றின சூடான விவாதம, சூடு டீ வரும் வரை தொடர்ந்தது. வாக்கிங் போகலாமென்று நினைத்து அரசியல்வாதி போல நடைபயணம் சென்றோம். பொதுவாக பேசிக்கொண்டதும் அரசியல்தான். நடைபயணம்னா சத்தியாகிரகத்தை பற்றியா பேசுவார்கள் பின்ன? கோயிலை சுற்றிவிட்டு தொடர்ந்தோம். வேடிக்கை பார்க்க மின்மினிப் பூச்சிகள் வந்திருந்தது. கேளிக்கையோடு நாள் முடிவுக்கு வந்தது. அப்படி சிரித்து பல நாட்களாயிருந்தது.
மறுநாள் விளிக்கும் போது சோர்வு என்னை தழுவியிருந்தது, போர்வை விலகி கிடந்தது. பல் விளக்கி பம்புசெட்டில் குளித்தேன், ஜெ எனக்கு முன்னே அதில் குளித்திருந்தது சற்றே ஆச்சரியமூட்டியது. சிலைகளைப் பற்றின விவாதம் ஏழு மணிக்கே தொடங்கியது என்னை சிலையாக்கியது. சிறுகதை பற்றின விவாதம் மிக பயணுள்ளதாக இருந்தது. தொடர்ந்து படைப்புகளின் மீதான விமர்சனம். சிறுகதை மீதான என் கோட்ப்பாட்டை மாற்றினீர்கள். ஓர் சிறந்த சிறுகதையை எழுத வேண்டும் என்ற வைராக்கியம் வந்தது. கூடவே சோகமும் வந்தது. பிரிவு பெறும்பாலூம் அதைதானே தரும். ஜெ ஒன்று நிச்சயம், உங்களைப் போன்றோரை வரலாறு அடிக்கடி தருவதில்லை. நீங்கள் எழுத்தால் ஒரு சாம்ராஜுயத்தை கட்டி எழுப்பியுள்ளீர்கள்.அது காட்டிலிருந்து சென்னைக்கும், விஷ்ணுபுரத்திலிருந்து சென்னைக்கும், இதுமாதிரி பல கற்ப்பனையிலிருந்து, நிஜத்திற்க்குமான ஊசலாட்டம்.

பூங்காவனம்


நா பார்க்குக்கு போய்டுவர்ர..பதிலை எதிர்பாராமல் நிதானமாக நடக்க தொடங்கினேன். கையிலி கட்டி பழக்கப்பட்டு இப்போது வெள்ளை வேட்டி கட்ட சிரமமாக இருக்கிறது. முக்கியமாக மடித்துக் கட்டினால் ஒருவேளை மானம் போகுமோ என்று பயந்து தூக்கிபிடித்துக்கொண்டே நடந்தேன். பூங்கா.. மனதுக்குள் அந்த சொல் சட்டென முளைத்தது. ஏ வந்துச்சு அந்த சொல்லு? தெரியல. பூங்காவனம்ங்கர சொல்லைதான பூங்கானு ஆக்கினாங்கலா? வாழையிலை கண்ணில் பட்டு சட்டென சுயநினைவுக்கு வந்தேன். பிரபலங்களை பார்க்க மக்கள் வழி நெடுகிலும் முண்டியடுத்து எட்டி விழுந்து பார்ப்பதைப் போல மரங்கள் அந்த சாலையின் இருமறுகிலும் கம்பி வேலியைத்தாண்டி வெளியே எட்டிப் பார்த்தது. கைகளை பின்னால் கட்டிக்கொண்டு ராஜாவாய் அவற்றைப் பார்த்த வண்ணம் சென்றேன். கொய்யா மரம் நல்லா வளந்திருக்கு ஆனா மாங்கா மரத்துல சரியா பிஞ்சு பிடிக்கல. இளனிக்கடைக்காரார் அழுக்கு கையிலி வேட்டியோடு பார்க் வாசலில் வந்து நின்றிருந்தார். காலையில வாங்கியதற்க்காக லேசான புன்னகையை வெட்டினார். பூங்கா பிறந்த தேதி, யாரு திறந்து வைச்சாங்க எல்லாத்தையும் சுவத்தில எழுதிவச்சிருந்தாங்க, ஏனோ அதைப் பார்க்கவே பிடிக்காது எனக்கு.
வா.. சுண்டல் வாங்கிட்டுப் போ. பார்க்குக்குள் நுழையும் போதே வரவேற்றால் சுண்டல்காரி. நாள் தவறாமல் வந்துவிடுகிறாள். பார்க் வாசலிலே உக்காந்துவிட்டு கடைசி வரை உள்ளே வராமலே போய்விடுவாள். மல்லிகைப் பூவை அவளது கைகள் மிகவேகமாக கட்டியது. கனகாம்பரம், சாதி மல்லி, ரோஜா என பூக்களை அடுக்கி வைதிருந்தாள்.
சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டேன் தலையை அசைப்பதன் மூலம். அவள் அடித்து வந்தவரிடம் அதே கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
அப்படியோன்றும் பெரிய பார்க்கெல்லாம் ஒன்றுமில்லை.  பார்க்கில் இருப்பவர்களை காவல் காப்பதற்க்காக நடப்பவர்களுக்கு என்று பார்க்கை சுற்றிலும் சிமென்ட் தரை. முதல் அரைப் பாதியில் புற்க்களும் மரங்களும் நன்கு வளந்திருக்கும். அதில் சிமென்ட் பென்ஞ் போட்டிருந்தார்கள் உட்க்கார. மொத்தமே ஆறுதான். மியுசிக்சேர் மாதிரிதா. இன்னைக்கு நான் லேட் அதனால் உட்க்கார இடங்கிடைக்கிறது சந்தேகம்தான். அடுத்த பாதில இடப்பக்கம் குழந்தைகள் விளையாட, வலப்பக்கம் பெரியவர்கள் விளையாட. நடுவுல தண்ணி நடனமாடும். அத பாக்கபோக, பார்க்கை சரி பாதியா சிமென்ட் ரோடு பிரிச்சு போட்டது.
சரி உட்க்கார இடம் தேடி இடப்பக்கம் சிமென்ட் ரோட்டில் நடக்கலானேன். சீராய் வெட்டப்பட்ட புல்வெளி மீது தண்ணீர் பைப் மழையை பொழிந்து கொண்டிருந்தது. புற்கள் வெட்கமே இல்லாமல் எல்லோர் முன்னிலையிலும் குளித்தது பிறகு தலையில் நீர்க்குல்லாவை அணிந்து கொண்டன. நடைபாதையின் இருபுறமும் பூமி தேவியின் தலைமுடியாய் சிறுசிறு செடிகள் வளர்ந்து நின்றது. அவள் மயிர்கள் பச்சை நிறமானவை. எப்பொழுதெல்லாம் வெழுத்துவிடுகிறதோ அப்போதேல்லாம் மூப்படைகிறால் என்று அர்த்தம், சில மாதங்களில் திரும்பவும் இளைமையாகிறாள். ஆனால் நான் பார்த்தவரை இங்கு மட்டும்தான் அவளை மூப்படையாமல் பார்த்துக்கொள்கிறார்கள் போல. அதனால்தான் இளமையோடும், அழகோடும் அவள் முடிகள் காட்சி தருகின்றன. நான் இரண்டடி வைப்பதற்க்குள் நாங்கைந்து பேர் கைகளை நன்கு வீசி கடந்துபோனார்கள் அதில் இரண்டு பேர் என்னை இடித்து போனவர்கள். அந்த மரத்தின் மலர்கள் தனிதனியே பூக்காதது என் கவனத்தை ஈர்த்தது. அரை வட்டத்திற்க்கு அதன் மலர்கள் நெருங்கிப் பூந்திருந்தது ஆனால் அதன் இலைகள் கிளைக்கு நாலு, ஐந்து என்றுதான் இருந்தது. இந்த மலர்கள் சிவனுக்கு உகந்தது என்று நானும், என் அம்மாவும் வாக்கிங் போன சமயத்தில் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். என்ன மரமுனு பெயர் தெரியவில்லை. நீலக் கலர் கட்டம் போட்ட  டீசர்ட் பெண் சம்மன்னங்கால் போட்டு அவளுடைய காதலனைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தாள். அடிக்கடி கீழே குனிந்து குனிந்து சிரித்தால். அவளது மார்பக குழி அகப்பட்டு பிறகு மறைந்தது.
உன்னைக் கடித்த கொசு என்னைக் கடித்த போதுதான் கண்டுகொண்டேன், கொசுக்களால் காதல் பரவாதேன்று.
அவன் கவிதை படிப்பது சன்னமாக கேட்டது. தொடர்ந்து சிரித்தாள். நான் அவர்கள் உட்க்காந்திருந்த சிமென்ட் பென்ஞ்சை கடந்துவிட்டதால் கவிதை கேட்க்க முடியாத நிலை. என் முன்னால் நடந்துபோனவர்கள் கால்களுக்கு சிக்காமல் அந்த மலர் விழுந்துகிடந்தது. கைகளில் எடுத்து முகர்ந்துபார்த்தேன். மணம் எங்கே இருக்கிறது மலரில்? இதழில், தண்டில்? சுற்றிப்பார்த்தேன். ம்கூம் அகப்படவில்லை.
அன்பும் அறனும்திருக்குறள் பார்க் சுவற்றில் எழுதப்பட்டிருந்தது. சிமென்ட் பாதை நான்கு அடி வந்ததும் வலது பக்கம் திரும்பியது. திருக்குறளை படித்தவாறு குழந்தைகள் விளையாடும் பக்கத்திற்க்கு வந்து சேர்ந்தேன். சறுக்கு விளையாடுபவர்கள், தூரியாடுபவர்கள் என குழந்தைகள் குதுகுலமாகயிருந்தன. மீண்டும் சிமென்ட் ரோடு வலதுபக்கம் திரும்ப நான் ஒரு வழியாய் பெரியவர்களுக்கான இடத்திற்க்கு வந்தேன். இறகுப் பந்து கட்டியிருந்த வலைக்கு மேலே பறந்தது. எல்லோர் கவனமும் அந்த பந்தில்தான் லயித்திருந்தது. கனமான உடம்புள்ள பெண் குதித்து குதித்து பந்தை அடித்தாள். அதையும் கடந்து புல்வெளிப் பகுதிக்கு வந்து சேர்ந்தேன். எதிர் பகுதியில் எல்லாம் காதலர்கள், நான் நிற்க்கும் பகுதியில் மட்டும் குடும்பமாக சிமென்ட் பென்ஞ் நிறைந்திருந்தது. நடுவில் சிமென்ட் ரோடு. எப்படியோ இந்த பிரிவினை இயல்பாகவே வந்துவிட்டது. அவரவர் எல்லைக்குள்தான் உட்க்காருகிறார்கள். என்னைப் போன்ற கிழத்துக்கு என்று இடமில்லை ஆனால் நான் குடும்ப பகுதியில்தான் உட்க்கார முயலுவேன். இன்று வழியின்றி தேங்கித் தேங்கி நடந்தேன். டொம்.. என சத்தம் அதைத் தொடந்து குழந்தையின் அழு குரல். ஒரு பலுன் வெடித்திருந்த்து, மற்றொரு பலுன் பார்க்கின் புல்வெளியில் உருண்டொடியது. அப்பா அதை தூரத்தினார். மற்றொரு வெடிச்சத்தம். குழந்தையை சமாதானப்படுத்தாமாண்டாமல் அவர்கள் வெளிநடப்பு செய்தார்கள். அந்த வாய்ப்பை நான் பயன்படுத்திவிட்டென்.
அந்த அழகான மாலை வேளையில் அழுக்கடைந்த பென்சின் மேல் அமர்ந்திருந்தேன். ஒற்றைக் கண் வானம், மேக உடுப்புக்களை உடுத்தி நாகரிகமடைந்து கொண்டிருந்தது. எனினும் சன்னல் வைத்த ஜாக்கெட்டின் வழி அழகான முதுகையும், வாழைத் தண்டைப் போல் வளுவளுப்பான இடையையும், மென்பாதங்களையும் இன்னும் வானம் காட்டிக்கொண்டுதானிருந்தது. சர்ச் பார்க்குக்கு பின்புறம் ஒட்டினார் போல நின்றிருந்தது. மேகங்களை தொட்டுவிடும் உயரத்தில் ஏசு தன் இரு கரங்களையும் நீட்டிக்கொண்டு சர்ச்சின் உச்சியில் நின்றிருந்தார். ஒருமுறை பார்க்கும் போது வேதனையான முகமாய் தோன்றிற்று. கண்களை சிமிட்டி மறுமுறை பார்க்கும் போது கனிவும், அன்பும் நிறைந்த இன்முகத்தொடு வரவேற்ப்பதாய் எனக்குப் பட்டது. மரங்கள் சர்ச்சுக்கு பின்னால் பசுமை நிறத்தை நிறைத்திருந்தது. முன்னால் நின்று பார்த்தால் பச்சை நிற காய்க்குள் வெள்ளை நிற விதையைப் போல சர்ச் நின்றிருந்தது. கொக்கு கூட்டங்கள் மரங்களின் கிளையில் அமைதியின்றி உட்க்காந்திருந்தது. மெதுவாக முன்னால் இருந்த இரண்டு கொக்குகள் மட்டும் பறந்து, தன் இனத்தைச் சுற்றி வட்டமிட்டது. பின் எல்லாம் சேர்ந்து ஏசுபிரானை நோக்கிப் பறந்து வந்தது. துதிப் பாடல்களும், மணியோசையும் தொடர்ந்து காதில் விழுந்தது. எல்லோரும் இறஞ்சிக் கொண்டிருந்தனர்.துதிப்பாடல்கள் அழுத்தமான குரலால் பார்க் முழுவதும் பரவியிருந்தது. பிச்சைக்காரர்கள் சர்ச்சின் வாசலில் வரிசையாக நீண்டிருந்தனர். அவரின் வரவேற்ப்பை ஏற்றார்களா என்று தெரியவில்லை. எப்போதும் போல சர்ச்சின் வாயிலில் கவலை தோய்ந்த முகத்துடன் எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தனர். யாரும் உள்ளே போகவும் இல்லை வெளியே வரவும் இல்லை காற்றைத் தவிர. அது மட்டும் உள்ளே, வெளியே என்று விளையாடிக்கொண்டிருந்தது.
விசில் சத்தம் எல்லோர் கவனத்தையும்  ஒரு கை வாட்ச்மேன் மேல் குவித்தது. அவன் விசிலை ஊதிக்கொண்டே எனக்கு எதிர் திசைக்கு வேகமாக நடந்தான். அந்த டீசர்ட்காரியும் அவள் காதலனும் புல்வெளியில் செல்பி எடுக்க தங்களது முகங்களை ஒன்று சேர்த்து, பற்க்களை கொஞ்சம் காட்டி, கேமராவில் பதிவு செய்ய முயன்றனர். அதற்க்குள் வாட்ச்மேன் அவர்களை வெளியே வரச் சொல்லி சத்தமிட்டான். அவர்கள் அதற்க்கு மேலும் அங்கே இருக்க விரும்பாமல் வெளியேறினர். ஒரு குழந்தை இன்னும் தூரியாட வேண்டுமென அடம்பிடித்தது, மற்றவற்களும் ஆடவேண்டும் என சாமதானப்படுத்திக்கொண்டிருந்தாள் அம்மா. அப்பா ஒருவர் தன் மகளோடு தூரியில் ஆடினார். தன் கை சைகை மூலம் அது குழந்தைகளுக்கானது எழு என்று அவர் எழும் வரை ஊதித்தள்ளினான். எப்போதும் காக்கி கலர் சீருடையில்தான் வலம்வருவான் அவன். சிவப்பு நிற விசில் அது, எப்போதும் அவன் கழுத்திலே தொங்கும். விசில் சத்தம் தொடர்ந்து எழும்பிக்கொண்டேயிருந்தது.
பார்க்கில் நின்றிருந்த எந்த மரத்திலும் பூவுமில்லை, காயுமில்லை. இவைகள் மண்ணின் மரங்கள் இல்லையோ? என்று தோன்றியது. பச்சை பசேலேன்று வளர்ந்திருக்கிறது, தண்ணீருக்கு பஞ்சமில்லை. நம்ம ஊர் மரமாயிருந்தா விதை விழுந்து மரமா வளரும் ஆனா இந்த மரத்தை வாங்கித்தா வளர்க்கனும். மரம் வாங்கற காசு, வளர்க்கிற காசு எல்லாம் வீண். யாரு வளர்த்தா எங்க கிராமத்து வேப்ப மரத்த? வேப்பங்கா பொறுக்கி எவ்வளவு பண்ம் சேத்த நானு.
இதோ பாருங்க புல்லேல்லாம் காடுமாதிரி வளர்ந்து போச்சு. அதை வெட்டி போடுங்க முதல்ல, அப்புறமா அதோ பாரு வெளியேருந்து ஒரு மரம் பூவை உள்ள கொட்டுது. அதோட கிளையை உள்ள வராம வெட்டிப்போடுங்க.
இப்பவே ஆரம்புச்சிடலாமா? என்றான் கையில் கத்திரிக்கோல் வைத்திருந்தவன். இன்னும் இரண்டு பேர் அவன் பக்கத்திலே நின்றிருந்தனர். ஒருவன் கையில் புல்வெட்டும் மெஹின், மற்றவன் கையில் கத்தி.
ம்.. என்று சொல்லிக்கொண்டே விசில் ஊதியவாறு குழந்தைகள் பகுதிக்கு வேகமாக நடக்கலானான்.
ஒருவன் கத்திரிக்கோலால் சிமென்ட் ரோட்டின் இருபக்கமும் வளர்ந்திருந்த செடிகளை வெட்டத்தொடங்கினான். மற்றவர்கள் புல்மெஹினில் ஏதோ ரிப்பேர் வேலை பார்த்தனர்.
காற்றுக்கு வரிசையாக வைக்கப்பட்ட மரமும், செடியும் ஆடியது. சர்ச்சின் மணியோசை கேட்டது. மறுபடியும் விசில்சத்தம். பேரமைதி. எழுந்து கொண்டேன். அதற்க்குள் நான் இருந்த இடத்தை வேறு யாரோ பிடித்துவிட்டனர். மக்கள் உள்ளேயும் வெளியேயும் வேகமாக போய்க்கொண்டேயிருந்தனர். மணியோசையின் அதிர்வு பின்தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தது.        

    

Thursday, January 14, 2016

அத்துவான வெளியில் தொங்கும் தமிழன்

கலாசாராம், பண்பாடு, மொழி, என் கல்வி இவைகள் எல்லாம் எதற்க்கு? ஏன் இது இல்லை என்றால் என்ன? நாம் ஏன் அமெரிக்ககாரனை போலும், ஜெர்மன்காரனை போலும் வாழக்கூடாது? இதைப் பற்றி நான் யோசிக்கும் பொழுது எனக்கு எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் சொன்ன கதைதான் நினைவுக்கு வருகிறது. இது ஒரு ஜென் கதை.
மிகவும் வயதான தாத்தா ஒருவர் ஜென் குருவை பார்க்க வந்திருந்தார். அவருக்கு பார்வையில்லை. ஜென் குருவுடன் பேசிமுடித்ததும், தான் கிளம்பவேண்டும் என்றார். அன்று அம்மாவாசை. கும்மிருட்டு.
நேராமாகிவிட்டது, இன்று வேண்டும் நாளை காலை போகலாமே என்றார் குரு.
இல்லை உடனே போயாகவேண்டும் என்றார் தாத்தா.
சரி இந்த விளக்கை கையிலேடுதுக்கொண்டு கிளம்புங்கள் என்று குரு சொன்னதற்க்கு, எனக்கோ கண் தெரியாது இந்த விளக்கை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன் என்றார்.
உங்களுக்கு வேண்டுமானால் கண் தெரியாமல் இருக்கலாம் ஆனால் எதிரிலே வருபவர்களுக்கு தெரியுமல்லாவா என்றதும், தாத்தா விளக்கை வாங்கிக்கொண்டு நடக்கத்தொடங்கினார்.
கொஞ்ச தூரம் கடந்து வந்ததும், யாரோ ஒருவர் அந்த தாத்தா மேல் மோதிவிட்டார்.
ஏ உனக்கு கண் தெரியாதா? விளக்கு வச்சுட்டுவந்தும் இப்படி மேல விழகிறயே? எரிச்சலோடு தாத்தா கேட்டார்.
அய்யா உங்க விளக்கு அணைஞ்சு ரொம்ப நேரம் ஆச்சு என்றார் வந்தவர்.
அந்த விளக்குதான் நம்ம பண்பாடு, கலாச்சாரம் எல்லாம்.  நமக்கே தெரியாமல் நமக்கு வழி காட்டிக்கொண்டிருக்கிறது. அது நம் வாழ்வுக்குள் ஒழிந்திருக்கிறது.
பெரும்பாலும் நம் மக்கள் மேலை நாட்டினரை போலவே வாழ ஆசைகொள்கிறோம். அவர்கள் வாழ்க்கை பாணி என்பது, ஐந்து நாட்க்கள் அயாராது உழைப்பார்கள், ஆறாவது நாள் சம்பாதித்தையேல்லாம் செலவு செய்வார்கள், ஏழாவது நாள் கடவுளிடம் மன்றாடிவிட்டு திரும்பவும் வார வாழ்க்கைச் சக்கரத்துக்குள் தொடர்வார்கள்.
 ஆனால் நம்மவர்கள் வாழ்க்கை முறையே வேறு. மகிழ்ச்சிக்கு ஒரு நாளும், துக்கத்திற்க்கு மறு நாளும் கிடையாது. மனிதனின் இயல்பே மகிழ்ச்சிதானே. நம்ம ஊரில் பண்டிகையில்லாத நாள் என்று ஒன்று உண்டா? நம்மில் பல பேருக்கு பொங்களை எப்படி கொண்டாடுவது, தீபாவளியை எப்படி கொண்டாடுவது என்றே தெரியாது, அதன் பின்னால் ஒரு வாழ்க்கைத் தொடர் சங்கிலி உள்ளது. நம் பாரம்பரிய கரகாட்டமும், ஒயிலாட்டமும் காணமல் போனது இதற்க்கான ஒரு நல்ல சான்று. சுருங்க சொல்ல வேண்டுமேன்றால் இலவு வீட்டில் ஒப்பாரி வைப்பார்கள் இது மாதிரி வேறேந்த சமூகத்திலும் கிடையாது, பிணத்தை தூக்கிகொண்டு சுடுகாடு போகும் போது போடும் ஆட்டமும் வேறேங்கும் இல்லை. அழுகையும் ஆட்டமும் கலந்ததுதான் வாழ்க்கை, ஒன்றை தனியாக பிரித்து மற்றோன்றை பார்க்க முடியாது. இதுதான் வாழ்க்கை தத்துவம், நம் பண்பாடு.
எனவே நம் சமூகம் நமக்கான பண்பாட்டை விட்டுச் சென்றிருக்கிறது. ஆனால் கல்வி கற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம், நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் அதனை விட்டு விலகி போகிறோம். ஏன் விலகி போகிறோம்? நமக்கு அளிக்கப்படும் கல்வி ஒரு முழுமையான கல்வி அல்ல என்பதுதான் உண்மை. எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் சொன்னது போல இது கல்வி இல்லை, ஒரு பயிற்ச்சி. எப்படி ஒரு தொழிற்ச்சாலையில் வேலை பார்ப்பது என்ற ஒரு பயிற்ச்சி அதைத் தாண்டி அதற்க்கு அர்த்தம் இல்லை. அதனால் தான் நம்மில் பல பேருக்கு எந்த ஆட்சி சரி தவறு என்று தெரியவில்லை. கடைசியில் வாக்களிக்காமல் வீட்டிலிருந்துகொண்டு தொலைக்காட்சி விமர்சனத்தையும் வேறு யாரோ சொன்னதையும் வைத்துக்கொண்டு முகநூலில் விமர்சனம் செய்வதும், பகிர்வதும் நம் வழக்கமாக ஆயிற்று. ஒரு மஞ்சுவிரட்டு வேண்டுமா? இல்லையா? என்று எவறும் தன் சுய அறிவிலிருந்து பேசுவதுயில்லை. அப்படி ஒன்று இங்கு குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம். இந்த கலாச்சாரத்தை பற்றியோ அல்லது பண்பாட்டைப் பற்றியோ செவிவழிமூலம் யாரோ ஒருவர் சொன்ன அறைகுறை தவறான தகவலுடன் அலைவதும் அதன் காரணமாக நம்மை நாமே தரைகுறைவாக எண்ணிக்கொள்வதும் தான் கற்றவர்கள்ளாகிய நாம் செய்வது. இருப்பதிலே மோசமான வேலை என்னவேன்றால் இதுதான். அப்படியேன்றால் இவ்வளவு பேர் படித்து என்ன பயன்? கல்வி என்பது ஒருவனை முழுமையாக்க வேண்டும். ஆனால் நமக்கு இருப்பது அறைகுறை அறிவு.
ஒருமுறை பட்டம்பெற்ற ஒரு நண்பர் என்னிடம் கேட்டார், “ ஏங்க தமிழ், தமிழ்னு கட்டிக்கிட்டு அழறீங்களே மொழிங்கறது ஒரு தொடர்புக்காக தானே. அது எந்த மொழியாயிருந்தா என்ன?
நான்கு எழுத்து கெட்ட வார்த்தை ஒன்றை ஆங்கிலத்தில் சொல்லி, இதை தமிழ்லில் சொல்லுங்க என்றேன்.  
அசடு வழிந்தார், அவர் வாய் அந்த வார்த்தையை சொல்ல கூசியது. உடனே சொன்னேன். பார்த்தீர்களா உங்களால் சொல்ல முடியவில்லை. காரணம் என்ன தெரியுமா? என்றேன்.
அவர் என்ன என்பதைப் போல தலை அசைத்தார்.
நீங்கள் ஒரு பண்பட்ட, உயர்ந்த சமூகத்திலிருந்து வந்தவர் அதனால் தான் உங்களால் பொதுவெளிகளில் அந்த வார்த்தையை பேசமுடியவில்லை. தமிழில் யாரும் பொதுவெளில் அப்படி பேசிக்கொள்ளமாண்டார்கள். இப்போது தமிழ் மறைமுகமாக என் பண்பாட்டையல்லவா கூறுகிறது.
சிலர் சொல்வாற்கள்,  நான் பேசுவேனே? ஏன் குழாய் சண்டையில் பேசுகிறார்களே? ஆமாம் ஒத்துக்கொள்கிறேன். அதே போல் எப்போதும் சில விதிவிலக்குகள் இருக்கும் என்பதையும் நீங்கள் ஒத்துக்கொள்ளுங்கள்.
அப்படியானால் இந்த பண்பாடு எதற்க்கு? நீ மேலை நாடுகளிலிருந்து வேறுபட்டவன், என்பதை இந்த கலாச்சாரமும், பண்பாடும் தான் சொல்கிறது. நீ எதுவும் புதிதாக சாதிக்க வேண்டுமென்றால் உன் சமூக கலாச்சாரம், பண்பாடு என்னும் சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்ட கண்டுபிடிப்பாய் இருந்தால்தான் அது சாதனை ஆகும் இல்லை என்றால் அது மேலை நாட்டிக்காரன் கண்ட அதே கண்டுபிடிப்பாய்தான் இருக்கும்.  வேண்டுமென்றால் இப்ப்டிக்கொள்ளலாம், என்னதான் செய்தாலும் அவன் செய்து வைத்தவற்றில் செய்யும் மாறுதலாகவே இருக்குமே ஒழிய அது ஒரு மாற்றாக இருக்காது.  
 அவன் கண்டுடித்தது எல்லாம் அவனுடைய சமூகத்திற்க்கானது. ஆனால் நம் சமூகத்திற்க்கு என்று இன்னும் நாம் எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஏன் தெரியுமா? நமக்குதான் நம் சமூகத்தைப் பற்றி எதுவுமே தெரியாதே. அதனால் தான் நாம் இன்னும் எதையும் பெரிதாக சாதிக்கவில்லை. அத்துவான வெளியில் நம் கால்கள் பண்பாடு என்ற தரையில்லாமல் மிதந்துகொண்டிருக்கிறோம். நாம் தமிழர்கள்.


பிச்சைப் பாத்திரம்

  குறிப்பு : மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய மத்தவிலாச பிரகசனம் என்னும் அங்கத நாடகத்தை தழுவி எழுதப்பட்ட சிறுகதையிது. எழுத்தாளன் என்ற முறையில் கத...